Breaking News

மேற்­கு­லகின் மலா­­லா விளை­யாட்­டு!

photo_187எம்.எப்.எம்.பஸீர்

மலாலா யூசுப் ஸை. இவரை அறி­யா­த­வர்கள் இன்று இருப்­ப­தென்­பதே அரிது. அத்­த­னைக்கும் காரணம் கடந்த ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஒன்­பதாம் திகதி நடந்த அந்தச் சம்­ப­வ­மாகும்.

அன்­றைய தினம் மலாலா மீது இனம் தெரி­யாத ஆயு­த­தா­ரிகள் சிலர் நடத்­திய தாக்­கு­தலில் மலா­லாவும் அவ­ரது இரண்டு பள்ளித் தோழி­களும் படு­கா­ய­ம­டைய மறு­க­ணமே பழி தலி­பான்கள் மீது போடப்­பட்டது.

ஆரம்பக் கட்ட விசா­ர­ணைகள் கூட நிறைவு பெற முன் தலி­பான்கள் மீது பழி­போ­டப்­பட்டு பெண்கள் கல்­விக்கு எதி­ரா­ன­வர்­க­ளாக தலி­பான்­களும் இஸ்­லாமும் சித்­த­ரிக்­கப்­படும் நட­வ­டிக்­கைகள் மேற்­கு­லகின் ஊட­கங்­களால் திட்­ட­மிட்டு பரப்­பப்­பட்­டன. 75 வீதமான ஊட­கங்­களை தனது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்கும் மேற்­கு­ல­கிற்கு 'மலாலா' -என்ற ஒரு நாட­கத்தை அரங்­கேற்­று­வது என்­பது கடி­ன­மான விட­ய­மாக இருக்­க­வில்லை.

‘சுவாத்’ பள்­ளத்­தாக்கு தலி­பான்­களின் ஆளு­கையின் கீழ் இருக்­கின்ற நிலையில், ஆப்­கா­னிஸ்­தா­னிலும் வசிரிஸ்­தா­னிலும் அமெ­ரிக்க துருப்­புக்­க­ளுக்கு படை நகர்­வு­களை மேற்­கொள்ள அது பாரிய சவா­லினை கொடுத்­தது. இதனால் திட்டம் தீட்­டிய அமெ­ரிக்க உளவுப் பிரி­வான சி.ஐ.ஏ மாற்று வழி­களை சிந்­திக்கத் தொடங்­கி­யது.

அதற்காக ஒரு நாட­கத்தை சி.ஐ.ஏ. தயார் செய்­தது. அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்­டோபர் 09ஆம் திக­திக்கு முன்­னரே மலாலா என்ற சிறுமி சி.ஐ.ஏ ஏஜெண்­டுக்­களின் வலையில் சிக்­குண்டிருந்தார். இன்னும் அந்த வலை­யி­லேயே அவர் உள்ளார்.

மலாலா பி.பி.சி செய்திச் சேவையின் உருது மொழிச் சேவைக்கு புனைப் பெயரில் தலி­பான்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை தொடர்ந்து பதி­விட்­டமை தொடர்பில் கடந்த வருடம் ஒக்­டோபர் மாத விடி­வெள்ளி இதழ் ஒன்றில் விரிவாக குறிப்­பிட்­டி­ருந்தோம்.

அத­னை­விட மலாலா உல­குக்கு தெளி­வாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட இன்­னு­மொரு சந்­தர்ப்­பமும் உள்­ளது. 2009 ஆம் ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் என்ற அமெ­ரிக்க ஊட­கத்தின் Class Dismissed என்ற ஆவ­ணப்­ப­ட­மொன்றில் மலாலா நடித்­தி­ருந்தார். அப்­போது அவ­ருக்கு வயது வெறும் 11 மட்­டுமே. எனினும் அந்த ஆவ­ணப்­ப­டத்தில் முற்­று­மு­ழு­தாக தலி­பான்­க­ளுக்கு எதி­ரா­ன­வ­ராக மலாலா காட்­டப்­பட்­டி­ருந்­த­துடன் அதன் பின்­னரும் அவர் சுவாத் பள்­ளத்­தாக்­கி­லேயே வாழ்ந்தும் வந்­துள்ளார்.

malala-yousafzai-returns-to-SCHOOL

மலா­லாவின் தந்தை சற்று முற்­போக்­கான சிந்­த­னையை உடை­ய­வ­ராக இருந்த போதிலும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளு­ட­னான அவ­ரது தொடர்­புகள் சி.ஐ.ஏ யின் வலைக்குள் அவர் சிக்­கு­வ­தற்கு ஏது­வா­னது.

குறிப்­பாக பாகிஸ்­தானில் இன்னும் தாடி வைத்த அரபு, உருது மொழி­யினை சர­ள­மாக உச்­ச­ரிக்கும் சி.ஐ.ஏ. மற்றும் மொஸாட் ஏஜண்­டுக்கள் உலா­வரும் நிலையில் தலி­பான்­களை விட இந்த தாடி வைத்த சி.ஐ.ஏ. காரர்கள் ஆபத்­தா­ன­வர்கள் என்­பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மலாலா தாக்­குதல் விவ­கா­ரமும் அப்­படி சோடிக்­கப்­பட்­ட­தொன்று தான். மலாலா மீது தாக்­குதல் நடத்தப்­பட்­டது உண்மை. அவர் காய­ம­டைந்­ததும் உண்மை. 

தாடி வைத்த துப்­பாக்கி தாரியால் முக­மூடி அணிந்த நிலையில் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வதும் உண்மை. எனினும் தாக்­குதல் நடத்­தி­யது யார்? ஏன் தாக்­குதல் நடத்­தி­னார்கள்? என்ற கேள்­வி­க­ளுக்கு சர்­வ­தேச ஊட­கங்கள் வாயி­லாக அளிக்­கப்­படும் பதில்­களே சந்­தே­கங்­களை கிள­று­கின்­றன.

இது­வரை பூர­ண­மான விசா­ர­ணை­யொன்று மலாலா தாக்­குதல் விட­யத்தில் இடம்­பெ­றா­ம­லேயே தலி­பான்கள் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்டு விட்­டார்கள்.

உண்­மையில் அன்று பாட­சாலை வாக­னத்தில் துப்­பாக்­கி­யுடன் நுழைந்த நபரின் விஷேட அடை­யா­ள­மாக சர்­வ­தேச ஊட­கங்கள் தாடி­யையே குறிப்­பிட்­டன.

மேற்­கத்­தே­யத்­துக்கு தாடி விஷேட அடை­யா­ள­மாக தென்­பட்ட போதும் சுவாத் பள்­ளத்­தாக்கில் பொது­வாக அனைத்து ஆண்­க­ளுமே தாடி வைத்­த­வர்­களே.

இந்த இடத்தில் பாகிஸ்­தா­னுக்­கான அமெ­ரிக்க செய்தித் தொடர்­பாளர் விக்­டோ­ரியாவின் கருத்­துக்­களும் அவ­தா­னத்­துக்­கு­ரி­யவை. ஏனெனில் மலாலா மீதான தாக்­கு­தலை தொடர்ந்து பாகிஸ்­தானில் தீவி­ர­வா­தத்தை ஒடுக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அமெ­ரிக்க அர­சா­னது மக்கள் ஆத­ரவை திரட்ட முனைப்­புக்­காட்­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

தலி­பான்­களின் கொள்­கை­களில் பல முரண்­பா­டுகள் இருக்­கின்ற போதும் பாகிஸ்­தானில் இடம்­பெறும் அத்­தனை அழி­வு­க­ளுக்கும் அவர்­களை காரணம் கூறு­வது முட்டாள் தன­மா­னது.

பி.பி.சி செய்திச் சேவையில் மலா­லாவின் பதி­வு­க­ளின்­படி பல பாட­சா­லைகள் விமா­னத்­தாக்­கு­தல்­க­ளிலும் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளிலும் தரை மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை ஏற்­றுக்­கொள்ளும் உலகு தலி­பான்­க­ளிடம் விமானத் தாக்­குதல் நடத்தும் வசதி இல்லை என்­ப­தையும் வசி­ரிஸ்தான் மாநிலம் முழு­வதும் அமெ­ரிக்க ஆளில்லா விமா­னங்கள் நடத்தும் குண்டு வீச்சு  தாக்­கு­தல்களால்தான் அப்­பள்ளிக் கூடங்கள் பல சேத­மா­ன­தையும் ஏற்றுக் கொள்ள மறுப்­பதன் பின்­னணி என்ன?

சுவாத்தில் பாட­சா­லைகள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தற்கு தனியே தலி­பான்­களை மட்டும் குறை கூறு­வது பொருத்­த­மற்­றது. அத்­துடன் தலி­பான்­களை பெண்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­க­ளாக சித்­தி­ரிக்கும் நோக்­கு­ட­னேயே இவ்­வா­றான பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதும் வெளிப்­ப­டை­யா­னது.

அமெ­ரிக்­காவின் ஆளில்லா விமா­னத்­தாக்­கு­தல்­களில் ஆயி­ர­மா­யிரம் மலா­லாக்கள் கருகும் நிலையில் தலி­பான்கள் இந்தத் தாக்­கு­த­லுக்கு பொறுப்­பேற்­ப­தாக மேற்­கத்­தைய ஊட­கங்கள் சில தாமா­கவே வெளி­யிட்ட சில கடி­தங்­களும் நகைப்­புக்­கு­ரி­யவை.

இந்த தாக்­குதல் நடந்­ததும் தலி­பான்கள் மீது விரல் நீட்­டப்­பட அவ்­வ­மைப்பு வெளி­யிட்ட மறுப்புச் செய்­தி­களை எந்­த­வொரு ஊட­கங்­களும் வெளி­யிட முன்­வ­ராமை கவ­லைக்­கு­ரி­யதே. அத்­துடன் அண்­மையில் பாகிஸ்­தானின் தஹ்ரீர் ஈ. தலி­பானின் (PTT) தலைவர் ரஷீத் எழு­தி­ய­தாக வெளி­யி­டப்­பட்ட கடி­தமும் இந்த இடத்தில் சற்று அவ­தா­னிக்­கத்­தக்­கதே!

அந்தக் கடி­தத்தில் மலா­லாவை மீண்டும் தாய­கத்­துக்கு அழைத்­துள்ள தலி­பான்கள் தாய் நாட்டில் கல்­வியை தொட­ரவும் வேண்­டி­யுள்­ள­துடன் தலிபான் உள்­ளிட்ட போராளி அமைப்­புக்கள் கல்­விக்கோ பெண்­க­ளுக்கோ எதி­ரா­னவை அல்ல என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பல ஊட­கங்­களில் தலி­பான்கள் தமது தாக்­கு­தலை நியா­யப்­ப­டுத்தி கடிதம் எழு­தி­யி­ருந்­த­தாக கூறப்­பட்ட போதும் மலாலா மீதான தாக்­கு­தலை யார் நடத்­தினர்? அது சரியா? தவறா? என விவா­திக்க விரும்­ப­வில்­லை­யெ­னவும் அனைத்­தையும் இறைவன் அறிவான் என்­றுமே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் மேற்­கத்­தேய சட­வாத கல்விக் கொள்­கையை கைவிட்டு மலாலா இஸ்­லா­மிய முறை­மையில் கல்வி பயில வேண்­டு­மெ­னவும் தீய சதித்­திட்­டங்கள் மூலம் ஒட்­டு­மொத்த மனித சமூ­கத்­தையும் அடி­மைப்­ப­டுத்த நினைக்கும் சதி­கா­ரர்­களின் திட்­டத்தை அம்­ப­லப்­ப­டுத்த வேண்டும் எனவும் அந்த கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் மலா­லா­வுக்கு உலக அளவில் பல்­வேறு விரு­து­களும் பாராட்­டுக்­களும் குவிந்த வண்­ண­முள்­ளன. ஐ.நா. சபையில் உரை­யாற்றும் அள­வுக்கு புகழின் உச்­சியை தொட்­டுள்ள மலாலா சமா­தா­னத்­துக்­கான நோபல் பரி­சுக்கும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ளார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் உய­ரிய விரு­தான மனித உரி­மை­க­ளுக்­கான விரு­தி­னையும் இவரே இம்­முறை தட்­டிச்­சென்­றுள்ளார். அத்­துடன் ஐ.நா.வின் கல்வித் தூது­வ­ரா­கவும் மலாலா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இவை­ய­னைத்­தையும் வைத்து பார்க்கும் போது மேற்­கு­லகும் அமெ­ரிக்­காவும் மலா­லாவை வைத்து பிர­தான இரு செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க விளை­கின்­ற­மையை இல­குவில் விளங்­கலாம்.

ஒன்று, இஸ்லாம் -பெண்கள் கல்­விக்கு எதி­ரா­ன­து என்ற மாயையை பரப்பி பாகிஸ்தான்- -ஆப்கான் எல்­லையில் உரிமை மீறல் செயற்­பா­டுகள் இடம்­பெ­று­வ­தா­கவும் தீவி­ர­வா­திகள் அங்கு அட்­டூ­ழியம் புரி­வ­தா­கவும் கூறிக் கொண்டு ஆக்­கி­ர­மிப்­பு­க­ளுக்கும் விமானத் தாக்­கு­த­லுக்கும் நியாயம் கற்­பிப்­பது.

இரண்டு, மலாலா ஊடாக அனு­தாப அலை­களை ஏற்­ப­டுத்தி அதன் பல­னாக இஸ்­லா­மிய நாடுகள் புறக்­க­ணிக்கும் மேற்­கத்­தேய சட­வாதக் கல்விக் கொள்­கை­யினை திணிப்­பது.

இந்த இரு பிர­தான செயற்­பா­டு­களை மையப்படுத்தியே மலாலா எனும் சிறுமியை பயன்படுத்தி அமெரிக்காவும் மேற்குலகும் பல்வேறு அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றன.

இந்நிலையில் உண்மையில் மலாலா தலிபான்களால் தான் சுடப்பட்டாரா? அதற்கான ஆதாரம் என்ன? சர்வதேச ஊடகங்கள் பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் அமெரிக்க வான் தாக்குதல்களில் கொல்லப்படும் அப்பாவி மலாலாக்கள் தொடர்பில் முக்கியத்துவம் வழங்க மறுப்பதன் பின்னணி என்ன? தலிபான்களை முன்னிறுத்தி முழு இஸ்லாத்துக்கும் எதிரான பிரசாரங்களை மேற்குலகம் மேற்கொள்வதன் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு மறைக்கப்பட்ட பதில்களுடன் மேற்குலகின் மலாலா விளையாட்டு தொடர்கிறது.இந்த விளையாட்டு எங்கு  போய் முடியப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments