Breaking News

ஒஸாமா தற்கொலை செய்து கொண்டாரா?

Osama-bin-Laden-was-kille-008பாகிஸ்­தானின் அபோ­தாபாத் நக­ரி­லுள்ள வீடு ஒன்றில் மறைந்­தி­ருந்த சமயம் 2011 மே 2 அன்று அல்­கைதா இயக்­கத்தின் தலைவர் ஒஸாமா பின்­லேடன் அமெ­ரிக்கப் படை­யி­னரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட செய்தி நாம­றிந்­ததே. ஆனால் அவர் அவ்­வாறு சுட்டுக் கொல்­லப்­ப­ட­வில்லை எனவும் தனது உடலில் கட்­டி­யி­ருந்த வெடி குண்­டு­களை வெடிக்கச் செய்து தானா­கவே உயிரை மாய்த்­துக்­கொண்டார் எனவும் புதிய தக­வல்கள் வெளி­வந்­துள்­ளன.

இந்தத் தக­வல்­களை 'கல்ப் நியூஸ்' பத்­தி­ரி­கைக்கு தெரி­வித்­தி­ருப்­பவர் வேறு யாரு­மல்ல. ஒஸா­மாவின் மெய்ப் பா­து­கா­வ­ல­ராக பல வரு­டங்கள் கட­மை­யாற்­றிய நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் என்­பவர் தான்.

எகிப்தின் இஸ்­லாமிக் ஜிஹாத் அமைப்பின் முன்னாள் தலை­வ­ரான அப்துல் பத்தாஹ் பல வரு­டங்கள் ஒஸா­மாவின் மெய்­பா­து­கா­வ­ல­ரா­கவும் பணி­பு­ரிந்­தி­ருக்­கிறார். ஒஸாமா கொல்­லப்­பட்ட சமயம் அவ­ருடன் பக்­கத்தில் இருக்­கா­வி­டினும் ஒஸா­மாவின் உற­வினர் ஒருவர் மூல­மாக இறுதிக் கட்­டத்தில் நடந்த விட­யங்­களை அறிந்து கொண்­ட­தா­கவும் குறிப்­பி­டு­கிறார்.

இனி அவர் சொல்­வதைக் கேளுங்கள்....

article-2332058-1A0A692A000005DC-945_306x423'' அபோ­தா­பாத்தில் ஒஸாமா பின்­லேடன் தங்­கி­யி­ருந்த கட்­டி­டத்தை கண்­டு­பி­டித்து அமெ­ரிக்­கப்­ப­டை­யினர் தாக்­குதல் நடத்­தி­யது உண்­மைதான்.

ஆனால் ஒபாமா சொல்­வது போல ஒஸா­மாவை அமெரிக்க படை­யினர் சுட்டுக் கொல்­லவோ அவ­ரது உடலை கடலில் வீசவோ இல்லை. அவை எல்லாம் பெய்­யான கட்டுக் கதைகள்.

ஒஸாமா கடந்த 10 வரு­டங்­க­ளுக்கு மேலாக தனது உடலில் வெடி­குண்­டுகள் பொருத்­தப்­பட்ட பட்டி (பெல்ட்) ஒன்றை அணிந்தே இருப்பார். தான் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் எதி­ரி­க­ளிடம் பிடி­பட்டால் இர­க­சி­யங்­களை வெளிப்­ப­டுத்தி விடக் கூடாது என்ற எச்­ச­ரிக்­கை­ உணர்வே இதற்குக் காரணமாகும். அமெ­ரிக்க புல­னாய்வுப் பிரி­வினர் ஒஸா­மாவை உயி­ருடன் பிடிக்­கவே திட்டம் தீட்­டினர். ஆனால் அவர்­க­ளது கணக்கு பிழைத்து விட்­டது.

அவர் தன்னைத் தானே வெடிக்க வைத்து ஷஹீ­தா­கி­விட்டார். தான் மர­ணிக்கும் வரை தனது போராட்டம் பற்­றிய இர­க­சி­யங்­களை பாது­காக்­கவே விரும்­பினார். ஏனெனில் அவ­ருக்கு மத்­திய கிழக்கு நாடு­களில் உள்ள பல செல்­வந்­தர்கள் நிதி உத­வி­களை செய்து வந்­தனர். அவர்­களை காட்டிக் கொடுத்து சிக்­கலில் மாட்­டி­வி­டு­வதை அவர் விரும்­ப­வில்லை. 

கஃ­ப­துல்­லாஹ்வின் முன்னால் நின்று அவர் தான் மர­ணிக்கும் வரையும் இந்தப் போராட்­டத்தின் இர­க­சி­யங்­களை பாது­காப்பேன் என உறுதி மொழி­யெ­டுத்­தி­ருந்தார்.

ஒஸாமா பின்­லே­டனின் இருப்­பி­டத்தையோ அல்­லது அவ­ருடன் தொடர்பு வைத்­தி­ருந்­த­வர்­க­ளையோ கண்­டு­பி­டிப்­பது அவ்­வ­ளவு இல­கு­வான காரி­ய­மல்ல. அவ­ரது மெய்­பா­து­கா­வ­லர்கள் யெம­னிக்கள் அல்­லது சவூதி அரே­பி­யர்­களே. வேறு எந்த தரப்­பி­னையும் அவர் தனது மெய்­பா­து­கா­வ­லர்­க­ளாக வைத்துக் கொள்­வ­தில்லை.'' என்றார்.

ஒஸாமா பின்­லேடன் இருக்கும் இடத்தை அமெ­ரிக்கா எப்­படிக் கண்­டு­பி­டித்­தது? எனும் கேள்­விக்கு அப்துல் பத்தாஹ் இவ்­வாறு பதி­ல­ளிக்­கிறார்.

''குவாண்­டனாமோ சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பாகிஸ்­தானைப் பூர்­வீ­க­மாகக் கொண்ட குவைத் நாட்­டவர் ஒரு­வரின் சகோ­தரர் பின்­லே­ட­னுடன் நெருங்­கிய தொடர்பைக் கொண்­டி­ருந்தார்.

2008 ஆம் ஆண்டு இவர் குவைத்தில் இருப்­பதை சீ. ஐ. ஏ. கண்­டு­பி­டித்த போதிலும் அவரது நடமாட்டங்களை அவதானிக்கு நோக்கில் அவரைக் கைது செய்ய வேண்டாம் என குவைத் அதி­கா­ரி­க­ளிடம் கேட்டுக் கொண்­டது. அந்த நபர் தனது குடும்­பத்தை சந்­திக்கும் நோக்கில் போலி­யான கடவுச் சீட்டைப் பயன்­ப­டுத்தி பாகிஸ்­தா­னுக்கு அடிக்கடி போய் வருவதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்தார்

.

அவ­ரது தொலை­பேசி உரை­யா­டல்­களை அமெ­ரிக்க புல­னாய்­வா­ளர்கள் தொடர்ச்­சி­யாக பதிவு செய்­த­துடன் அவ­ருடன் தொடர்பில் இருப்­ப­வர்­க­ளையும் கண்­டு­பி­டித்­தனர். 

ஆனால் அவர் சில இடங்­க­ளுக்குச் செல்லும் போது மாத்­திரம் தனது கைய­டக்கத் தொலைப்­பே­சியை நிறுத்தி வைப்­ப­தையும் அச் சமயம் அவர் எங்­கி­ருக்­கிறார் என்­பதை கண்­ட­றிய முடி­யா­தி­ருப்­ப­தையும் அவ­தா­னித்­தனர்.

பல மாதங்­க­ளாக இந்த நபரை அமெ­ரிக்க புல­னாய்­வா­ளர்கள் பின் தொடர்ந்த போதிலும் பின்­லேடன் இருக்­கு­மி­டத்தை அவர்­களால் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

இத­னை­ய­டுத்து வேறு திட்டம் ஒன்றைத் தீட்­டினர். குறித்த பகு­தியில் சிறு­வர்­க­ளுக்கு சின்ன அம்மை நோய்க்கு எதி­ரான தடுப்­பூசி ஏற்றும் பாரிய வேலைத்­திட்டம் ஒன்றை தொடங்கினர். இதன் மூல­மாக அப்­ப­கு­தியில் உள்ள பிள்­ளை­களின் இரத்த மாதி­ரி­களை சேக­ரித்து டி. என். ஏ. பரி­சோ­த­னை­களை மேற்­கொண்­டனர். இதன் மூலம் அப் பகு­தியில் அரபு வம்­சா­வ­ளியைக் கொண்ட பிள்­ளைகள் இருப்­பதை உறு­திப்­ப­டுத்திக் கொண்­டனர். ஏலவே அபோதா பாத்தில் ஒஸாமா மறைந்திருப் பதற்கான சாத்தியங்களை வேறு வழிகளில் பெற்றிருந்த சி.ஐ.ஏ.வினர் அங்கு பெறப்பட்ட சில டி. என். ஏ. மாதி­ரிகளும் பின்­லேடன் பரம்­ப­ரை­யுடன் ஒத்­தி­ருந்த தையடுத்து தமது எதிர்பார்ப்பை உறுதிப் படுத்திக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்தே அபோ­தா­பாத்தில் ஒஸாமா தங்­கி­யி­ருந்த கட்­டி­டத்தை இலக்கு வைத்து தமது தாக்­குதல் நட­வ­டிக்கை தொடங்­கினர்.

பின்­லே­டனும் அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­லர்­களும் அமெ­ரிக்க படை­யி­ன­ருக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­தினர். அமெ­ரிக்க படை­யினர் வந்­தி­றங்­கிய ஹெலி­கெப்டர் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தினர். அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­லர்கள் இருவர் அந்த இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர். பின்­லே­டனின் முழங்­காலில் துப்­பாக்கிச் சூடு பட்­டது. அச் சம­யத்­தில்தான் அவர் தனது உடலில் கட்­டி­யி­ருந்த வெடி­குண்டுப் பட்­டியை வெடிக்கச் செய்தார். அவ­ரது உடல் அடை­யாளம் காணவே முடி­யா­த­ளவு துண்டு துண்­டாக சிதறிப் போனது. 

ஒஸா­மாவின் உடலை தாம் கைப்­பற்­றி­ய­தா­கவும் கடலில் அடக்கம் செய்­த­தா­கவும் ஒபாமா பீற்றிக் கொள்கிறார். அவர் பொய் சொல்லி உலகையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

எது எப்படியிருந்தாலும் ஒஸாமாவின் மனைவி என்றோ ஒரு நாள் உலகுக்கு இந்தக் கதையைச் சொல்லத்தான் போகிறார் என்றும் பத்தாஹ் மேலும் குறிப்பிடுகிறார்.

* நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.1988 முதல் 1992 வரை எகிப்தின் இஸ்­லாமிக் ஜிஹாத் அமைப்பின் தலை­வ­ராக இவர் கடமையாற்றியிருக்கிறார். இருப்பினும் ஹுஸ்னி முபாரக் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட இவர் 20 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.முபாரக்கின் ஆட்சி கவிழ்ந்த சில வாரங்களில் விடுவிக்கப்பட்டார்.

No comments