இந்திர ரத்தின தேரர் உயிரை விட்டது மாட்டுக்காகவா?

Ellawala-Madananda-Theroகடந்த வெசாக் தினத்தன்று கண்டி தலதா மாளிகையின் முன் திக்குளித்த இந்திர ரத்தின தேரர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டதால் நாட்டிற்கும் சாசனத்திற்கும் ஒரு தவறான முன்மாதிரியைக் காட்டியுள்ளார் என எல்லாவல் மேதானந்த தேரர் கூறியுள்ளார்.

அதே வேளை தீ மூட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது எனவும் அவர் மேலும் குறினார்.

“முழு உலகையும் அன்பினால் ஈரமாக்கிய கௌதம பௌத்தரின் பிறப்பை நினைவூட்டி கொண்டாடும் வெசாக் தினத்தன்று தளதா மாளிகைக்கு ஒரு பிக்கு முன்பாக தீமூட்டிக் கொண்டமை நாட்டிற்கும் சாசனத்திற்கும் இழுக்கையே ஏற்படுத்தியது. இந்த நாட்டின் ஆரம்பம் தொட்டே இன, மத, சமூகப் பிரச்சினைகளின் போது முன்னால் வரும் தீவிரப் போக்குள்ள இளம் பிக்குகளுக்கு இந்த நிகழ்வு மூலம் மிகவும் மோசமான ஒரு முன்மாதிரியே காட்டப்பட்டது. அதனால இவ்வாறான சதிகளுக்குள் சிக்க வேண்டாம் என நான் இளம் பிக்குக்ளிடம் மிகவும் அன்பாய் வேண்டிக் கொள்கிறேன்.”

இந்த நடவடிக்கையை ஒரு உயிர் தியாகமாக கொள்ள முடியாது. அவர் உயிர் தியாகம் செய்தது யாருக்கு? மாட்டுக்காகவா? அது மட்டுமல்ல, தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் போது அவருக்கு உயிரினங்கள் மீது அன்பு அல்ல தன் மீது கோபமும், பகைமையும் தான் தோன்றும்.

தமது உயிரை போக்கிக் கொள்வதன் மூலம் மாடுகள் அறுக்கப் படுவதையோ அல்லது பிரானிகள் கொள்ளப்படுவதையோ தடுக்க முடியாது. மேலும் இதனை சட்டத்தால் மட்டும் செய்யவும் முடியாது. மக்களுக்கு இதன் விபரீதங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். அனைத்து பிக்குகளும் கொழும்புக்கு வந்து பட்ரோல் ஊற்றி தீ மூட்டிக் கொண்டாலும் இந்த பிரானிகள் கொள்ளப்படுவதை தடுக்க முடியும் என நான் நினைக்க வில்லை.

இந்த பிக்குவின் செயல் ஒரு எல்லை மீரிய செயலாகும். இவரின் இந்த தப்பான முன்னுதாரனத்தை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு சிலர் பல்வேறுபட்ட கருத்துக்களை முன்வைப்பதை அவதானிக்கிறேன். இதனை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. இதன் மூலம் இல்லாத பிரச்சினைகளை உண்டுபன்னிக் கொள்ளக் கூடாது என மேதானந்த தேரர் மேலும் கூறினார்.

(மூலம் : லக்பிம)

No comments