தீக்குளித்த பிக்குவின் இறுதிக்கிரியைகள் இன்று: வன்முறைகள் வெடிக்கும் அபாயம்
வெசாக் தினத்தன்று தீக்குளித்து இறந்த போவத்தை இந்திரரத்ன தேரரின் இறுதிச் சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணியளவில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிக்குவின் இறுதிச்சடங்கை நாளை இரத்தினபுரி கஹவத்தையில் நடாத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இதனை காரணமாக வைத்து இன்று பிக்குவின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றால் கடும்போக்கு பெளத்த பிக்குகளினால் வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.
இந்நிலையில், பௌத்த பிக்குவின் இறுதிச்சடங்கை அவசரமாக இன்றே நடத்துவதற்கு இரத்தினபுரி பொலிஸார் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று பிற்பகல் 4 மணியளவில் பிக்குவின் இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளது. இறுதிச்சடங்குகளின்போது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை தடுக்க பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Post Comment
No comments