தீமூட்டிக்கொண்ட தேரர் நீதிமன்றால் பிடியானை பிறப்பிக்கப் பட்டவர் ? : அதிர்ச்சி ரிப்போட்

SKகடந்த  வெசாக் தினத்தன்று தீக்குளித்த போவத்தே இந்திர ரத்ன தேரரின் அதிர்ச்சித் தகவல்களை சிங்கள இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது. இந்திர ரத்ன தேரர் தீக்குளிப்புக்கு 3 நாட்களுக்கு முன்னர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திர ரத்ன தேரர் முன்னர் ஒரு பிரதேச சபை உறுப்பினராக இருந்தார். பின்னர் தொடர்ச்சியான சபை அமர்வுகளுக்கு செல்லாத காரணத்தினால் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பிரதேசபை உறுப்பினராக இருக்கும்போது, மின்சார சபையில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 20 இலட்சமும் ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாகக்கூறி 10 இலட்சமும் மோசடி செய்திருக்கிறார். இவ்விடயத்தில் பிக்குவை கைதுசெய்ய பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.Indrarathana dero 1

Indrarathana 1

2012 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தம்புள்ளை பள்ளிவாசலை உடைக்க வந்தபோது, பிக்குகள் கூட்டத்திலிருந்து கூச்சலிட்டவர். பாதுகாப்பு படையினருக்கு தான் அணிந்திருந்த சிவுறவை அவிழ்த்துக் காட்டி”வெடி தியாபங் வெடி தியாபங்” என ஆக்கரோஷமாக கூச்சலிட்டார்.

2012 திசெம்பர் மாதம் 9 ஆம் திகதி கடந்த வருடம் வீரகெட்டியவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியவர். அதே ஊரில் 2013 மார்ச் மாதம் 18 ஆம் திகதி பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினார். இதனைத் தொடர்ந்து மார்ச் 19 ஆம் திகதி இந்திர ரத்ன தேரரும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர்  கும்பலொன்றுடன் சென்று வீரகெடிய பொலீஸ் நிலையத்திற்கும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். அதன் பின் 22 ஆம் திகதி  தங்கல்லை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலொன்றுக்கும் தாக்குதல் நாடாத்த இவர்கள் திட்ட்மிட்டிருந்தௌள்ளனர். இந்த தகவக் முன்கூட்டியே பொலீசாருக்கு எட்டியதால் இது தடுக்கப்பாட்டுள்ளது. 

பின்னர் மேற் குறித்த சம்பவங்கல் தொடர்பாக 193/2013 எனும் “பீ” அறிக்கையூடாக இவர்கள் மீது பொலீசார் வீரகெடிய மஜஸ்ரேட் நீதிமண்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். குறித்த வழக்கிற்கி இந்திர ரத்ன தேரர் ஒரு முறையே வருகை தந்துள்ளார். பின்னர் நீதிமன்றத்தைப் பகிஷ்கரித்து வந்துள்ளார். இதனால் கடந்த மே 21 ஆம் திகதி உடனடியாக இவரைக் கைது செய்து நீதி மன்றில் ஆஜர் படுத்துமாறு பிடியானை பிறப்பிக்கப் பட்டுள்ளது. funeral-indarthana

No comments