Breaking News

தமிழ் - முஸ்லிம் உறவுக்கு குந்தகம் விளைவிக்காதீர்

விடிவெள்ளி ஆசிரியர் கருத்து

Vidivelli editorial05.02.2013

இலங்­கையில் சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் நீண்ட கால­மா­கவே மிகவும் ஒற்­று­மை­யா­கவும் புரிந்­து­ணர்­வு­டனும் வாழ்ந்து வரு­கி­றார்கள் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்­லை­யா­யினும் அவ்­வப்­போது இச் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டுகள் தோற்றம் பெற்­றுள்­ள­தையும் மறுப்­ப­தற்­கில்லை.

குறிப்­பாக சிங்­க­ள­வர்­க­ளுக்கும் தமி­ழர்­க­ளுக்­கு­மி­டையில் வெடித்த ஜூலைக் கல­வ­ரத்தின் விளை­வா­கவே இந்த நாட்டைக் குட்டிச் சுவ­ராக்­கிய 30 வருட கால போர் தோற்றம் பெற்­றது. இலட்­சக்­க­ணக்­கான உயிர்­களைக் காவு கொண்ட போர் முடிந்­து­விட்­ட­போ­திலும் இன்று வரை அதன் வடுக்கள் மாற­வில்லை. 

அதே­போன்­றுதான் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையில் 1915 இல் வெடித்த கல­வ­ரமும் சிங்­க­ள-­ முஸ்லிம் உறவில் பாரிய விரி­சலைத் தோற்­று­வித்­தது. மிக அண்­மைக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பௌத்த கடும்­போக்கு சக்­திகள் முன்­னெ­டுக்கும் மத­வாத பிர­சா­ரங்­களும் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களும் தற்­போது மிகுந்த கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்­ளன. இது தொட­ரு­மானால் அதே­போன்­ற­தொரு கல­வரம் தோன்­றலாம் என்ற எச்­ச­ரிக்­கை­களும் அவ்­வப்­போது விடுக்­கப்­பட்ட வண்­ண­மி­ருக்­கின்­றன.

இதற்­கப்பால் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் மிக நீண்ட கால­மாக தமக்­கி­டையில் பல­மா­ன­தொரு உற­வினைக் கட்­டி­யெ­ழுப்பி வந்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஆனாலும் துர­திஷ்­ட­வ­ச­மாக விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் மனி­தா­பி­மா­ன­மற்­றதும் முஸ்லிம் சமூ­கத்தை இனச்­சுத்­தி­க­ரிப்புச் செய்­வ­து­மான செயற்­பா­டு­களால் இந்த உறவில் பாரிய விரிசல் தோன்­றி­யது வர­லாற்றின் கறை­ப­டிந்த பக்­க­மே­யாகும். இருப்­பினும் போர் முடிந்த கையோடு வடக்கு கிழக்கில் மீண்டும் தமிழ் முஸ்லிம் உறவு துளிர்­விடத் தொடங்­கி­யது. இன்றும் அந்த உறவு மிகச் சிறப்­பா­கவே நீடிக்­கி­றது. போரின்­போ­தான பழைய காயங்­களை மறந்து இவ்­விரு சமூ­கங்­களும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­வது மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தாகும்.

ஒரு காலத்தில் முஸ்­லிம்­களின் உரி­மைகள் விட­யத்தில் கடும்­போக்­குடன் நடந்து கொண்ட அல்­லது தமது சமூ­கத்தின் நலன்­சார்ந்து மாத்­தி­ரமே சிந்­தித்த தமிழ் அர­சியல் தலை­மைகள் இன்று முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­காக பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்தை எதிர்த்துக் குரல் எழுப்­பு­கின்ற அள­வுக்கு அர­சியல் கள­நி­லை­மைகள் மாற்றம் பெற்­றி­ருக்­கின்­றன. அண்­மைக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பௌத்த பேரி­ன­வா­தி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் தமது சமூ­கத்­திற்­காக பாரா­ளு­மன்றில் குர­லெ­ழுப்­பி­யி­ருக்­க­வில்லை. ஆனால் அந்தக் குறையை நிவர்த்­திக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் பாரா­ளு­மன்­றத்தில் விசேட கூற்று ஒன்றை முன்­வைத்து உரை­யாற்­றி­யி­ருந்தார். 

ஒரு­கா­லத்தில் முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பறித்த விடு­தலைப் புலி­க­ளுக்கு துணை போன தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இன்று முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­காக பாரா­ளு­மன்­றத்­தி­லேயே குர­லெ­ழுப்­பு­வது இந்த நாட்டின் அர­சியல் போக்­குகள் எவ்­வா­றான தலை­கீ­ழான மாற்­றங்­களைக் கண்­டி­ருக்­கின்­றன என்­பதை அள­வி­டு­வ­தற்கு பொருத்­த­மான உதா­ர­ண­மாகும்.

ஆனாலும் கடந்த சில வாரங்­க­ளாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் வட மாகாண பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சில­ருக்கும் வடக்கைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் அமைச்சர் ஒரு­வ­ருக்­கு­மி­டையில் தோற்றம் பெற்­றி­ருக்கும் முரண்­பா­டுகள் கவ­லை­ய­ளிக்கும் வகையில் அமைந்­துள்­ளன. முள்­ளி­ய­வளை பிர­தேச மீள்­கு­டி­யேற்­றத்தை முன்­னி­றுத்தி தோற்றம் பெற்­றுள்ள இம் முரண்­பா­டுகள் எதிர்­வரும் காலங்­களில் மேலும் கூர்­மை­ய­டையக் கூடிய சாத்­தியக் கூறு­களே தென்­ப­டு­கின்­றன. 

வட மாகாண சபைத் தேர்தல் எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் நடை­பெ­றலாம் என எதிர்­பார்க்­கப்­படும் நிலையில் இம் முரண்­பா­டுகள் தொடர்ந்து செல்­லு­மானால் தேர்தல் காலப் பிர­சா­ரங்கள் அதற்கு எண்ணெய் ஊற்­று­வ­தாக அமைந்­து­விடக் கூடும்.

பொது­வா­கவே தேர்தல் காலங்­களில் தமிழ் முஸ்லிம் நல்­லு­றவு அடகு வைக்­கப்­பட்டு இன மற்றும் பிர­தேச வாதங்­களைத் தூண்டும் வகை­யி­லான பிர­சா­ரங்­கள் முடுக்­கி­வி­டப்­ப­டு­வது வழக்­க­மாகும். அவ்­வா­றா­ன­தொரு நிலைமை வட மாகாண சபைத் தேர­்த­லிலும் தோற்றம் பெற்­று­விடக் கூடாது என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

மீள்­கு­டி­யேற்றம் என்­பது வடக்கில் வாழ்­கின்ற தமி­ழர்­க­ளி­னதும் முஸ்­லிம்­க­ளி­னதும் அடிப்­படை உரி­மை­யாகும். அந்த உரி­மையை பாது­காக்க வேண்­டி­யதே அர­சி­யல்­வா­தி­களின் கட­மை­யாகும். மாறாக அதன் பெயரால் அர­சியல் செய்ய முற்­ப­டு­வதோ தமது வாக்கு வங்­கியை அதி­க­ரிக்க முற்­ப­டு­வதோ ஒரு­போதும் மனி­தா­பி­மா­ன­மிக்­க­தாக அமை­யாது என்பதையும் இங்கு குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறோம்.

நன்றி : விடிவெள்ளி

No comments