துயரம் நிறைந்த 90

என்.எல்.எம்.மன்சூர், ஏறாவூர்

1990 ஆம் ஆண்டு துய­ரங்கள் நிறைந்த கவ­லைகள் உறைந்த கால­கட்­ட­மாகும். எமது நாட்டில் குறிப்­பாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் வாழ்ந்த முஸ்­லிம்கள் பல்­வேறு சோத­னை­க­ளுக்கும் இன்­னல்­க­ளுக்கும் முகங்­கொ­டுக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்­குள்­ளாக்­கப்­பட்­டார்கள். 
தமிழ்த்­தா­யகம், தனி­நாட்டுக் கோரிக்­கையை இலக்­காகக் கொண்டு தமிழ் மக்­களின் விடு­த­லைக்­காக ஆயு­த­மேந்தி சகல ஆயத்­தங்­க­ளு­டனும் போரா­டத்­து­ணிந்த விடு­தலைப் புலி­களின் செல்­வாக்கு மிகைத்­தி­ருந்த காலம். அர­சையும், அரச படை­க­ளையும் குறி­யாக வைத்து தாக்­குதல் நடாத்­திய போரா­ளிகள் சிங்­களப் பொது­மக்கள் மீதும் ஆயுதத் தாக்­கு­தலை ஆரம்­பித்­தார்கள். 
நாள­டைவில் தமது போராட்டப் பாதையை தமிழ் மக்­க­ளுடன் பரஸ்­பரம் ஒற்­று­மை­யுடன் இணைந்து வாழ்ந்த ஏது­ம­றி­யாத அப்­பா­வி­யான முஸ்­லிம்­களுக் கெதி­ரா­கவும் திசை திருப்பி விட்­டார்கள். 
முதற்­கட்­ட­மாக முஸ்லிம் வாலி­பர்­களை இயக்­கத்தில் இணைத்து ஆயுதக் கவர்ச்­சியைக் காட்டி பயிற்சி கொடுத்து முஸ்லிம் தன­வந்­தர்­க­ளையும் அவர்­களின் பொரு­ளா­தார இலக்­கு­க­ளையும் அடை­யாளம் காட்­டக்­கூ­டி­ய­வர்­க­ளாக பயன்­ப­டுத்­தி­னார்கள். இவ்­வாறு முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்தை சூறை­யாடி சாது­ர்­ய­மாக காய் நகர்த்தி முஸ்லிம் சமூ­கத்தை கரு­வ­றுத்­தார்கள். 
அடுத்த கட்­ட­மாக தமிழ் பிர­தே­சங்­க­ளுக்குள் தமது குடும்ப ஜீவ­னோ­பா­யத்­திற்­காகச் செல்லும் ஏழை வியா­பா­ரி­களின் வாக­னங்­களை பறித்தல், கப்பம் வாங்­குதல், கடத்தல், கொலை செய்தல் போன்ற செயல்­களில் ஈடு­பட்­டார்கள். ஆனாலும் முஸ்­லிம்கள் எதிர்­ந­ட­வ­டிக்கை எதுவும் செய்­யாது பொறுமை காட்­டி­னார்கள். 
திடீ­ரென பொலிஸ் நிலை­யங்கள் முற்­று­கை­யி­டப்­பட்டு பொலிஸார் நிரா­யு­த­பா­ணி­க­ளாக வெளி­யேற்­றப்­பட்டு புலி­களின் கட்­டுப்­பாட்டுப் பகு­திக்குள் கொண்டு செல்­லப்­பட்­டனர். பாட­சா­லைகள் யாவும் மூடப்­பட்­டன. வியா­பார நிலை­யங்கள் திறக்­கப்­ப­டு­வ­தில்லை. மின் மாற்­றிகள் குண்டு வைத்து தகர்க்கப்­பட்­டன. மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்­டது. மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து காலையில் புறப்­படும் புகை­யி­ரதம் வந்­தாறு மூலையில் வைத்து கண்­ணி­வெ­டித்­தாக்­கு­த­லுக்­குள்­ளா­ன­துடன் பயணம் செய்த முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டனர். புகை­யி­ரத சேவையும் நிறுத்­தப்­பட்­டது. 
வாகனப் போக்­கு­வ­ரத்­து­களும் நடை­பெ­ற­வில்லை. அரச காரி­யா­ல­யங்கள் மூடிக்­கி­டந்­தன. அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­ப­ள­மில்லை. கூலித் தொழி­லா­ளர்­க­ளுக்கு தொழில் இல்லை. குழந்­தை­க­ளுக்கு பால்மா இல்லை. அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளு­மில்லை ஒரு சில வர்த்­த­கர்கள் துணிந்து பொலன்­ன­று­வைக்குச் சென்று பொருட்­களை வாங்கி வந்து சந்­தையில் போட்டு விற்­பனை செய்­தார்கள். 
ஒரு நாள் இரவு ஏறாவூர் பஸா­ரி­லுள்ள அனைத்து கடை­களும் உடைக்­கப்­பட்டு பொருட்கள் கொள்­ளை­யி­டப்­பட்­டன. அரச நிறு­வ­னங்கள், பாட­சாலை காரி­யா­ல­யங்கள் அரிசி ஆலைகள் யாவும் உடைக்­கப்­பட்டு சூறை­யா­டப்­பட்­டன. ஏறாவூர் பிர­தேச சபையின் நூலகம் உடைக்­கப்­பட்டு புத்­த­கங்கள் வண்­டில்­களில் ஏற்றி இழுத்துச் செல்­லப்­பட்­டன. குர்ஆன் பிர­திகள் வீதி­களில் வீசப்­பட்டுக் கிடந்­தன. ஜி.பி.எஸ். (நெற்­க­ளஞ்­சி­ய­சாலை) புகை­யி­ரத நிலையம் ஆகி­ய­வற்றின் கூரைத் தக­டுகள், சீற்­றுகள் பகல் நேரத்தில் பகி­ரங்­க­மாக கழற்றி கொண்டு செல்­லப்­பட்­டன.
ஏறாவூர் மக்கள் வங்கி ஒரு­வா­ர­மாக உடைத்து சூறை­யா­டப்­பட்­டது. பள்­ளி­வா­சல்கள் மஃரிப் தொழு­கை­யுடன் பூட்­டப்­படும். ஊரில் பயமும் பதற்­றமும் காணப்­பட்­டன. இரவும் பகலும் ஆயு­தங்­க­ளுடன் புலிகள் நட­மாட்டம் சாதா­ர­ண­மாக இடம்­பெற்­றது. 
துல்ஹஜ் மாதம் காத்­தான்­கு­டி­யி­லி­ருந்து புனித ஹஜ்­ஜுக்­காக புறப்­பட்ட ஹாஜிகள் ஏறா­வூரைத் தாண்டிச் செல்­லவோ, திரும்பிச் செல்­லவோ முடி­யாத நிலையில் மூன்று நாட்கள் ஏறா­வூரில் தரித்து அல்­லாஹ்வின் உத­வியால் ஒரு­வாறு கொழும்பை சென்­ற­டைந்­தார்கள். 

அற­பா­வு­டைய தினம் ஊரில் அதி­க­மானோர் அறபா நோன்பு பிடித்து பிரார்த்­த­னையில் ஈடு­பட்­டார்கள். விடிந்தால் ஹஜ்ஜுப் பெருநாள். எந்த ஏற்­பா­டு­மில்லை. பெருநாள் அன்று ஊரில் பர­ப­ரப்பு – அலிகார் தே.பாட­சாலை அதிபர் யூ.எல்.தாவூத்சேர், அலி­மு­கம்­மது ஹாஜியார், ஏகே கபூர் ஹாஜியார் ஆகியோர் இரவு கடத்­தப்­பட்டு விட்­டார்கள் என்ற செய்தி பர­வி­யது. 
இவ்­வாறு ஊரே கொதித்து கொண்­டி­ருந்த வேளை 03.08.1990 அன்று காத்­தான்­குடி மீரா­ஜும்ஆ மஸ்ஜித், ஹுஸை­னியா பள்­ளி­வா­சல்­களில் மஃரிப் தொழு­கைக்­காகச் சென்­ற­வர்கள் 103 பேர் சுஜூதில்  இருந்த நிலையில் சுட்டுக் கொல்­லப்­பட்­டார்கள். 
அதனைத் தொடர்ந்து ஏறா­வூரில் பதற்­ற­மான நிலை மேலும் அதி­க­ரித்­தது. 11.08.1990 அன்று இரா­ணுவம் தமிழ் பகு­தியில் சிலிண்டர் தாக்­குதல் நடத்­தி­யதால் தொடர்ந்தும் ஆபத்து வரும் என்று பயந்த தமிழ் மக்­களில் பலர் பாது­காப்புத் தேடி அறி­மு­க­மான முஸ்­லிம்­களின் வீடு­களை நாடி­னார்கள். அன்று இரவு பதி­னொரு மணி­ய­ளவில் பர­வ­லான வெடிச்­சத்­தங்­க­ளுடன் ஊருக்குள் நுழைந்த புலிகள் 127 முஸ்­லிம்­களை சுட்டும் வெட்­டியும் கொலை செய்­தார்கள். 
வீடு­களில் உறங்கிக் கொண்­டி­ருந்த பெண்கள், குழந்­தைகள், வாலி­பர்கள், வயோ­தி­பர்கள், கர்ப்­பிணித் தாய்­மார்கள் பலர் மிகவும் அரக்­கத்­த­ன­மான முறையில் இரக்­க­மின்றி கொல்­லப்­பட்­டார்கள். இவ்­வாறு சஹீ­தாக்­கப்­பட்­ட­வர்கள் 12.08.1990 அன்று மாலை ஒரே இடத்தில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டார்கள். 
இவ்­வாறு ஷஹீ­தாக்­கப்­பட்ட சுஹ­தாக்­களை நினைவு கூர்ந்து ஏறாவூர் நூருஸ்­ஸலாம் மஸ்­ஜிதில் ஏறாவூர் முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் வரு­டந்­தோறும் கதமுல் குர்ஆன் ஓதி துஆச் செய்து நினைவுப் பேருரைகளை ஏற்பாடு செய்வது  வழக்கமாகும். இம்முறையும் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 
இது நடந்து சிலகாலங்களின் பின் புனித ஹஜ் கடமையை முடித்து விட்டு ஊர் திரும்பிய காத்தான்குடியைச் சேர்ந்த 167 ஹாஜிமார் குருக்கள் மடத்தில் புலிகளால் வழிமறிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டமை கறை படிந்த வரலாறாகும்.

No comments