Breaking News

ஸாகிர் நாயிக்கை இந்தியா கைது செய்ய துடிப்பது ஏன்?

- எம்.ஐ.அப்துல் நஸார்  -
மும்­பை­யினைத் தள­மாகக் கொண்ட பிர­சா­ரகர் ஸாகிர் நாயிக் பயங்­க­ர­வா­தத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக இந்­திய அதி­கா­ரிகள் குற்றம் சாட்­டி­வரும் நிலையில் அவர் அதனை நிரா­க­ரித்­துள்ளார். 



முக­நூலில் 16 மில்லியன் பேரும் டுவிட்­டரில் 150,000 பேரும் பிர­பல இஸ்­லா­மிய மார்க்கப் பிரச்­சா­ரகர் ஸாகிர் அப்துல் கரீம் நாயிக்கை பின் தொடர்­கின்­றனர். உலகம் முழு­வதும் 4,000 இற்கும் மேற்­பட்ட இஸ்லாம் தொடர்­பான விரி­வு­ரை­களை நிகழ்த்­தி­யுள்ளார். எனினும் தொலைக்­காட்­சி­யிலும் மேடை­க­ளிலும் இஸ்லா­மியப் பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டு­வரும் ஸாகிர் நாயிக்கை தற்­போது இந்­திய அதி­கா­ரிகள் தேடி வரு­கின்­றனர்.  

அண்­மையில் பங்­க­ளாதேஷ் தலை­நகர் டாக்­காவில் தேநீர்ச்­சாலை ஒன்றில் துப்­பாக்­கி­தா­ரி­யொ­ருவர் மேற்­கொண்ட தாக்­கு­தலில் 22 பேர் கொல்­லப்­பட்­டனர். குறித்த துப்­பாக்­கி­தாரி ஸாகிர் நாயிக்கின் பிர­சா­ரத்தால் தான் தூண்­டப்­பட்­ட­தாக தெரி­வித்­ததைத் தொடர்ந்தே பிரச்­சினை உரு­வாகத் தொடங்­கி­யது. 

இந்தத் தாக்­கு­தலின் பிர­தி­ப­லிப்­பாக 'பீஸ் ரிவி' என்ற தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­யினை பங்­க­ளாதேஷ் தடை செய்­தது. உலகம் முழு­வ­திலும் 100 மில்­லியன் மக்­களால் பார்க்­கப்­படும் பீஸ் ரிவி தொலைக்­காட்சி அலை­வ­ரிசை 2006 ஆம் ஆண்டு ஸாகிர் நாயிக்­கினால் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தோடு, இந்த இஸ்­லா­மிய அலை­வ­ரிசை துபா­யி­லி­ருந்து தனது நிகழ்ச்­சி­களை ஒளி­ப­ரப்பி வரு­கின்­றது. 

வன்­மு­றை­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக சுமத்­தப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை ஐம்­பத்தி ஒரு வய­தான ஸாகிர் நாயிக் மறுத்­துள்ளார்.

காணொளி மூல­மாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் 'அநி­யா­ய­மாக மனித உயிர்­களைக் கொல்­வது இஸ்­லாத்தில் இரண்­டா­வது பெரும் பாவ­மாகும்' எனக் குறிப்­பிட்­டுள்ளார். 

எனினும், கடந்த நவம்பர் மாதம் இந்­தி­யாவின் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான முக­வ­ரகம் மற்றும் தேசிய புல­னாய்வு முக­வ­ரகம் என்­பன உத்­தி­யோ­க­பூர்வ பொலிஸ் முறைப்­பா­டாக ஸாகிர் நாயிக் மற்றும் 1991 ஆம் ஆண்டு அவரால் ஆரம்­பிக்­கப்­பட்ட இலாப நோக்­கற்ற இஸ்­லா­மிய ஆய்வு நிலை­யத்­திற்கும் எதி­ராக முதல் தகவல் அறிக்­கை­யினை பதிவு செய்­தன. அவ்­வ­றிக்­கையில் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கும் மத­ரீ­தி­யான வெறுப்­பு­ணர்­வு­களை தூண்­டு­வ­தற்கும் கார­ண­மாக உள்­ள­தாக ஸாகிர் நாயிக் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.     
இந்துத் தேசி­ய­வாத அர­சாங்­கத்தின் பிர­தமர் நரேந்­திர மோடி இந்­தி­யாவின் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் இஸ்­லா­மிய ஆய்வு நிலை­யத்­திற்கு ஐந்து ஆண்டு தடை­யினை விதித்­துள்ளார். 

சட்­ட­வி­ரே­ாத­மா­னது, நியா­ய­மற்­றது, தேவையற்­றது
பொருத்­த­மான நீதி­மன்­ற­மொன்றில் இந்தத் தடைக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக ஸாகிர் நாயிக்கின் சட்­டத்­த­ரணி முபீன் சுல்­பிகார் தெரி­வித்தார். 

இந்தத் தடை சட்­ட­வி­ரே­த­மா­னது மட்­டு­மல்ல நியா­ய­மற்­றதும் தேவையற்­ற­து­மாகும் எனக் காண்­பிப்­ப­தற்கு தம்­மிடம் போதிய ஆதா­ரங்கள் இருப்­ப­தா­கவும் முபீன் சுல்­பிகார் மேலும் தெரி­வித்தார். 

இஸ்­லா­மிய ஆய்வு நிலையம் பண மேச­டியில் ஈடு­ப­டு­வ­தாகக் குற்றம் சாட்­டி­யுள்ள இந்­தி­யாவின் நிதி­யியல் குற்­றங்­களை விசா­ரணை செய்யும் அமு­லாக்கப் பணி­யகம் மும்­பா­யி­லுள்ள அதன் சொத்­துக்­களை முடக்­கி­யுள்­ளது. ஸாகிர் நாயிக்­கினால் நடத்­தப்­பட்­டு­வந்த கல்­விக்­கான நம்­பிக்கை நிதியம் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து நிதி­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கும் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. 

தனது கட்­சிக்­காரர் எவ்­வித பண மோச­டி­யிலும் ஈடு­ப­ட­வில்லை என மறுத்­துள்ள முபீன் சுல்­பிகார், அனைத்துக் கொடுக்கல் வாங்­கல்­களும் வங்­கி­க­ளூ­டா­கவே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் சட்­ட­ரீ­தி­யான முறை­யி­னூ­டா­கவே அனைத்து நிதியும் வந்­துள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். 

பண மோச­டியில் தடுப்புச் சட்­டத்­தின்கீழ் கோரப்­படும் 'குற்றச் செயல்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்கு ஏதேனும் நிதி பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பதைக் காண்­பிப்­ப­தற்­கான எவ்­வித முகாந்­தி­ரமும் இல்லை' எனவும் அவர் தெரி­வித்தார். 

ஸாகிர் நாயிக் தற்­போது எங்கே?
கடந்த ஜூலை மாதத்­தி­லி­ருந்து ஸாகிர் நாயிக் இந்­தியா திரும்­ப­வில்லை. தற்­போது அவர் எங்­கி­ருக்­கிறார் என்­பது தெரி­ய­வில்லை. எனினும் கடந்த சில மாதங்­க­ளாக 'இஸ்­லாத்­திற்கு சேவை­யாற்­றி­யமைக்­காக' அவ­ருக்கு விருது வழங்கி கௌர­வித்த நாடான சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து ஸ்கைப் வழி­யாக நேர்­கா­ணல்­க­ளையும் ஊட­க­வி­ய­லாளர் மாநா­டு­க­ளையும் நடாத்தி வரு­கின்றார்.  


தற்­போது அவ­ருக்கு சவூதி அரே­பிய குடி­யு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பல்­வேறு வகை­யிலும் வதந்திகள் பரப்­பப்­பட்டு வரு­கின்ற போதிலும், அது தொடர்­பாக உத்­தி­யோ­க­பூர்­வ­மான உறு­திப்­ப­டுத்­தல்கள் எதுவும் வெளி­வ­ர­வில்லை. 

காணொளி உரை­யாடல் மூல­மாக தன்னை விசா­ரணை செய்­யு­மாறு ஸாகிர் நாயிக் வேண்­டு­கோ­ளொன்றை முன்­வைத்த போதிலும், இந்­திய அதி­கா­ரிகள் ஏற்க மறுத்­த­தோடு அவரைக் கைது செய்து இந்­தி­யா­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு இம்மாத முற்­ப­கு­தியில் சர்­வ­தேச பொலி­ஸாரின் உத­வியும் கோரப்­பட்­டுள்­ளது. 

இந்­திய அர­சாங்­கத்தின் பரந்த வேலைத்­திட்­டத்தின் ஒரு­ப­கு­தி­யாக ஸாகிர் நாயிக் இதனைக் கரு­து­கின்றார். 

குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு தடை விதிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக கடந்த செப்­டம்பர் மாதம் ஸாகிர் நாயிக் திறந்த கடி­த­மொன்றை எழு­தினார். அதில் 'இது வெறு­மனே என் மீதான தாக்­குதல் அல்ல, இது இந்­திய முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­த­லாகும். அது மட்­டு­மல்ல சமா­தானம், ஜன­நா­யகம் மற்றும் நீதிக்கு எதி­ரான தாக்­கு­த­லு­மாகும்' எனக் குறிப்­பிட்­டி­ருந்தார். 

குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு தடை விதிக்­கப்­பட்­டதன் பின்னர் அவர் எழு­திய திறந்த கடி­தத்தில் 'என் மீதும் இஸ்­லா­மிய ஆய்வு நிலை­யத்தின் மீதும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இஸ்­லா­மிய ஆய்வு நிலை­யத்தின் மீது விதிக்­கப்­பட்ட தடை பல மாதங்­க­ளுக்கு முன்னர் எடுக்­கப்­பட்ட தீர்­மானம் என்­பது தற்­போது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. இது இனத்­துவ ரீதி­யாக எடுக்­கப்­பட்ட தீர்­மா­ன­மாகும்.

விசா­ர­ணைகள் செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர், அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் தடை ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இது எனது மதத்­தோடு சம்­பந்­தப்­பட்­ட­தா­கவோ அல்­லது வேறு ஏதேனும் கார­ணங்­களின் அடிப்­ப­டை­யி­லா­ன­தாகவோ இருக்­கலாம், அது ஒரு விட­ய­மல்ல. எப்­படி எனது 25 வருட பணிகள் முற்று முழு­தாக சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாக இருக்க முடியும். இதுவே இந்த நாட்டின் மிகப்­பெரும் துர­திஷ்­ட­மாகும்'

ஊட­கங்­களால் வழங்­கப்­பட்ட கௌரவம்
 முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த பலர் மோடியின் ஆளும் பார­தீய ஜனதாக் கட்­சி­யுடன் இணைந்­துள்ள தீவிர இந்­துத்­துவ குழுக்­களின் தாக்­கு­தல்­க­ளுக்கு இலக்­காகி வரு­கின்ற நிலையில் அவ­ரது கருத்து இந்­திய முஸ்லிம் சமு­தா­யத்­தி­னரால் பர­வ­லாக பகி­ரப்­பட்­டுள்­ளது. 

முஸ்லிம் என்ற ஒரே­யொரு கார­ணத்­தி­னா­லேயே ஸாகிர் நாயிக் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ள­தாக இந்­திய முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கவனம் செலுத்­து­கின்ற டூசேர்கிள்ஸ் டொட் நெட் என்ற செய்தி இணை­ய­த்த­ளத்தின் ஆசி­ரி­ய­ரான காசிப்-­உல்-ஹக் தெரி­வித்தார்

ஸாகிர் நாயிக்கின் சில கூற்­றுக்கள் பிரச்­சி­னை­யா­ன­வை­யா­கவும் மோதும் தன்­மை­யு­டை­ய­ன­வா­கவும் காணப்­பட்­டாலும் கூட அவர் வன்­மு­றை­யினைப் பிர­சாரம் செய்­ய­வில்லை. அவ­ரது விரி­வு­ரைகள் வெளிப்­ப­டை­யா­னவை, அவற்றின் ஒலி மற்றும் பதி­வுகள் இல­வ­ச­மாகக் கிடைக்­கின்­றன எனவும் காசிப்-­உல்-ஹக் தெரி­வித்தார்.  

ஒரு துளி­யேனும் இந்­திய ஊட­கங்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் அவை இப்­ப­டிப்­பட்ட ஒரு மனி­த­ருக்கு கௌரவம் அளிக்­கின்­ற­ன­வென்றால், அவரை கைது செய்து குற்­றச்­சாட்­டுக்­களை அவர்­மீது சுமத்த நினைக்கும் மனி­தத்­தன்மை குறைந்­த­வர்­களின் மனோ­நிலை பற்றி எம்மால் கற்­பனை செய்து பார்க்க முடி­கி­றது எனத் தெரி­வித்த அவர், பொய்­யாக சோடிக்­கப்­பட்ட பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்டின் பேரி­லான வழக்கில் சிறையில் அடைக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் பலர் எந்தக் குற்றச் செய­லு­டனும் தொடர்­பு­ப­டாத அப்­பா­விகள் என நிரூ­ப­ண­மாகி விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.   

பக்­கச்­சார்­பாக நடப்­ப­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டை மறுத்­துள்ள பார­தீய ஜனதாக் கட்­சியின் பேச்­சாளர் நலின் கொஹ்லி 'இந்­திய நீதித்­துறை பக்­கச்­சார்­பின்­மைக்கு பிர­ப­ல­மா­ன­தொன்­றாகும். அது மிக மெது­வாக நகரும் ஒன்­றாக இருக்­கலாம். ஆனால், இறு­தியில் அனை­வரும் நீதி­யினைப் பெற்­றுக்­கொள்­வார்கள். ஸாகிர் நாயிக்கிட­மி­ருந்து மதச்­சார்பு தொடர்­பான எந்த சான்­றி­தழும் இந்­தி­யா­வுக்கு தேவை­யில்லை, ஏனென்றால் அவர் தப்­பி­யோ­டி­யவர்' எனத் தெரி­வித்தார். 

பயங்­க­ரவாதத் தடைச் சட்­டத்தின் கீழான எவ்­வித குற்றச் செய­லையும் தனது கட்­சிக்­காரர் செய்­ய­வில்லை என ஸாகிர் நாயிக்கின் சட்­டத்­த­ரணி முபீன் சுல்­பிகார் வலி­யு­றுத்­தினார். 

பொலிஸ் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்டு ஆறு மாதங்கள் கடந்த பின்­னரும் என்.ஐ.ஏ. நீதி­மன்­றத்தில் இது­வரை குற்­றப்­பத்­திரம் எதுவும் தாக்கல் செய்­யப்­ப­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார். 

எனினும் 'நாயிக்­குக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் 'முக்­கி­யத்­து­வ­மா­னவை' அதா­வது மிகப் பார­தூ­ர­மான பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட அமைப்­பு­க­ளுக்கு ஆத­ர­வான அவ­ரது உரைகள் ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அவர் எந்தத் தவ­றையும் செய்­ய­வில்­லை­யானால் அவர் அச்­சப்­படத் தேவை­யில்லை.

அவர் தொடர்ந்தும் தலை­ம­றை­வாக இருப்­பது அவ­ரது நடத்தை மற்றும் அவ­ருக்கு எதி­ரான ஆதா­ரங்கள் தொடர்பில் மேலும் வினாக்கள் எழுப்­பப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமையும்' எனவும் பார­தீய ஜனதாக் கட்­சியின் பேச்­சாளர் நலின் கொஹ்லி குறிப்­பிட்டார். 

தெற்கு கேரள மாநி­லத்தின் இளை­ஞர்­களை ஈராக்கில் மற்றும் லெவான்ட் பகு­தி­களில் செயற்­படும் ஐ.எஸ் அமைப்­புடன் இணை­யு­மாறு தூண்­டி­ய­தாக இந்­திய அதி­கா­ரிகள் ஸாகிர் நாயிக்கின் மீது குற்றம் சாட்­டிய போதிலும், அதனை மறுத்­துள்ள அவர் அவ்­வ­மைப்­பினை அவர் விமர்­சித்­துள்­ள­தோடு இஸ்­லாத்­திற்கு எதி­ரான அமைப்பு எனவும் வர்­ணித்­துள்ளார். 

சர்ச்சை
ஒரு மருத்­து­வ­ராக இருந்து தொலைக்­காட்சி மூல­மான இஸ்­லா­மிய பிர­சா­ர­க­ரா­கிய பின்னர் 1990களி­லி­ருந்து சில விட­யங்­களில் சர்ச்­சைக்­கு­ரிய ஒரு­வ­ராக மாறி­யி­ருந்தார். 

தனது தஃவா பணி என அழைக்­கப்­படும் இஸ்­லா­மிய மார்க்­கப் பிர­சார செயற்­பா­டுகள் அர­சி­ய­ல­மைப்­பினால் அனு­ம­திக்­கப்­பட்­ட­வை­யாகும். அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் தமது மதத்தைப் பின்­பற்­று­வ­தற்கும் பிர­சாரம் செய்­வ­தற்கும் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது என ஸாகிர் நாயிக் வலி­யு­றுத்­தி­யுள்ளார். எனினும் மத­மாற்றம் சர்ச்­சைக்­கு­ரிய விட­ய­மாகக் காணப்­பட்டு வரு­கின்­றது. பல மாநி­லங்­களில் மத­மாற்றத் தடைச்­சட்டம் அமுலில் உள்­ளது. 

அனைத்து முஸ்­லிம்­களும் பயங்­க­ர­வா­தி­க­ளாக மாற­வேண்டும் என பொதுக்­கூட்­ட­மொன்றில் ஸாகிர் நாயிக் கூறி­ய­தாக ஊடக அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. 

மலே­ஷியா அவ­ரது விரி­வு­ரை­களைத் தடை­செய்த அதே­வேளை, ஐக்­கிய இராச்­சியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் அவ­ருக்­கான வீசா அனு­ம­தி­யினை மறுத்­துள்­ளன. மலே­ஷி­யாவின் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­க­ளுக்­கான ஹின்ட்ராப் எனும் குழு, அங்­கி­ருக்கும் ஸாகிர் நாயிக்கின் நிரந்­தர வதி­வி­டத்தை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்­துள்­ளது. 

இந்­தி­யாவில் இந்­துத்­துவ அடிப்­ப­டை­வாதக் குழுக்கள் எழுச்­சி­பெற்ற காலப்­ப­கு­தி­யி­லேயே ஸாகிர் நாயிக் தனது போத­னை­களை ஆரம்­பித்தார் என விளக்­கினார் கொல்­கத்­தாவின் அலியாஹ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தொடர்­பாடல் என்ற பாடத்­தினை கற்­பித்­து­வரும் மொஹமட் றியாஸ். 

அயோத்­தி­யி­லி­ருந்த மத்­தி­ய­கால யுகத்தைச் சேர்ந்த பாபரி மஸ்ஜித், 1992 ஆம் ஆண்டு அந்த இடத்தில் கோயில் கட்­டப்­பட வேண்­டு­மெனக் கோரி இந்­துத்­துவ அடிப்­ப­டை­வாத குழு­வொன்­றினால் தகர்க்­கப்­பட்­டது. கோயில் கட்­டப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கையின் பின்­ன­ணியில் இருந்­தவர் ஒரு காலத்தில் பிர­தமர் மோடியின் ஆலோ­ச­க­ராக இருந்த லால் கிருஷ்ண அத்­வா­னி­யாவார் 

மஸ்ஜித் தகர்க்­கப்­பட்­டதைத் தொடர்ந்து ஸாகிர் நாயிக்கின் பூர்­வீக நக­ரான மும்­பையில் மதக்­க­ல­வரம் ஏற்­பட்­டது. இந்தக் கல­வ­ரத்தில் நாடு­மு­ழு­வதும் சுமார் 1,700 பேர் கொல்­லப்­பட்­டனர். இவர்­களுள் பெரும்­பான்­மை­யினர் முஸ்­லிம்­க­ளாவர். 

மஸ்ஜித் தகர்க்­கப்­பட்­டதன் பின்னர் 1990 களில் முஸ்­லிம்கள் மிகவும் கவ­லை­ய­டைந்த நிலை­யி­லேயே காணப்­பட்­டனர். பாரம்­ப­ரிய இஸ்­லா­மிய மத­கு­ருமார் தம்மை பொதுத்­த­ளங்­க­ளி­லி­ருந்து வில­கியே இருந்­தனர். 

முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்பட்டிருந்த தலைமைத்துவ வெற்றிடத்தை ஸாகிர் நாயிக் நிரப்பினார். இளைஞர்களுக்கு வழிகாட்டல்களையும் வழங்கினார். நாளாந்தம் இஸ்லாத்திற்கு எதிராகத் தொடுக்கப்படும் கேள்விகளுக்கான விடைகளை அவர் முன்வைத்தது மட்டுமல்லாது, இளைஞர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்ற புதிய நம்பிக்கையினையும் விதைத்தார் எனவும் விளக்கினார் மொஹமட் றியாஸ்.

ஆங்கிலத்தில் சரளமான பேச்சும் மேற்கத்தைய ஆடையும் அவரது கருத்துக்கள் படித்த இளைஞர்களை கவரக் காரணமாக இருந்ததாகவும் றியாஸ் குறிப்பிட்டார். 

பீஸ் தொலைக்காட்சியின் உருது மொழி அலைவரிசை 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு வங்காள மொழி அலைவரிசையும் ஆரம்பிக்கப்பட்டன. 

2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தினால் பீஸ் தொலைக்காட்சி அலைவரிசை தடை செய்யப்பட்டது. இஸ்லாத்தின் வஹாபிஸக் கோட்பாட்டினை இந்த பீஸ் பீஸ் தொலைக்காட்சி அலைவரிசை பிரசாரம் செய்வதாக இந்திய புலனாய்வுத்துறை சந்தேகம் கொண்டுள்ளது. 

இந்தியாவில் இஸ்லாத்தின் அடையாளமாக ஸாகிர் நாயிக் காணப்படுகின்றார். அதனால்தான் அவர் இலகுவாக இலக்கு வைக்கப்பட்டுள்ளார். தற்போதைய இஸ்லாமிய எதிர்ப்புணர்வு பாரம்பரிய முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகப் பார்க்கப்படும் நிலையினை ஏற்படுத்தியுள்ளது.

பாரம்பரியமும் அடிப்படைவாதமும் வேறுபடுத்திப் பார்க்கப்படாமல் குழம்பிய நிலையிலேயே பார்க்கப்பட்டு வருகிறது எனவும் றியாஸ் சுட்டிக்காட்டினார்.

அல் ஜஸீரா இணையதளத்தில் ஸைப் காலித் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

No comments