Breaking News

உலகை உறைய வைத்த அய்லான் குர்தியின் மரணம்

துருக்­கிய கடற்­ப­ரப்பில் மூழ்­கிய மூன்று வயது சிரிய நாட்டுச் சிறு­வன் அய்லான் குர்தியின் புகைப்­படம் உலகம் முழு­வதும் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்ளது.
துருக்­கி­யி­லி­ருந்து கிரீஸை நோக்கிச் சென்ற சிரிய அகதிகளின் பட­கு மூழ்­கி­யதால் இந்தச் சிறுவன் உட்­பட 12 பேர் துருக்கிக் கடற்­ப­ரப்பில் உயி­ரி­ழந்­தனர்.
1_artical_07.09_1
துருக்கி கடற்­க­ரையில் ஒதுங்­கிய சிரி­யாவைச் சேர்ந்த குழந்­தையின் உடலும், அதை கையி­லேந்திச் சென்ற போலீஸும் அடங்­கிய புகைப்­படம், உலக மக்­களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்­தி­ய­தோடு மட்­டு­மல்­லாமல், அரபு மற்றும் மேற்­கு­லக நாடு­களின் அலட்­சியப் போக்­கையும் கை உயர்த்தி கேள்வி கேட்கும் வகையில் அமைந்­து­விட்­டது.
சர்­வ­தேச அளவில் தற்­போது பேசப்­பட்டு வரும் அந்தக் குழந்­தையின் பெயர் அய்லான் குர்தி(3).  அவ­னது தாய் ரேஹான் குர்தி, சகோ­தரர் காலிப் குர்தி, தந்தை அப்­துல்லா குர்தி மற்றும் சில குழந்­தைகள் உட்­பட 12 பேர் அந்த படகில் கிரீஸை அடை­வ­தற்­காக சட்­ட­வி­ரோத பய­ணத்தை மேற்­கொண்­டனர். இதன்­போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்­துள்­ளது.
2_artical_07.09_
புகைப்­படம் எடுத்­தது எப்­படி?
துருக்­கியின் டோகன் செய்தி நிறு­வ­னத்தைச் சேர்ந்­தபெண் புகைப்­பட நிபுணர் நிலுபர் டெமிர்.
இவர்தான் கரை ஒதுங்­கிய சிறுவன் அய்­லானின் உயி­ரற்ற உடலை புகைப்­படம் எடுத்­தவர். அவர் கூறி­ய­தா­வது,
கடந்த புதன்­கி­ழமை அதி­காலை போட்ரம் கடற்­க­ரையில் இரண்டு பட­குகள் கவிழ்ந்த தகவல் அறிந்து அங்கு சென்றேன்.
அங்கு கடற்­க­ரையில் தலை­குப்­புற கிடந்த குழந்­தையின் உடலைப் பார்த்து அப்­ப­டியே கல்­லாக உறைந்­து­விட்டேன்.
அந்த குழந்­தையின் துய­ரத்தை உல­க­றியச் செய்ய வேண்டும். அவனின் கடைசி அழு­கு­ரலை உலகம் கேட்க வேண்டும் என்­ப­தற்­காக அந்தக் குழந்­தையை புகைப்­படம் எடுத்தேன். அங்கு நான் சிந்­திய கண்ணீர் இன்று உல­க­மெல்லாம் ஆறாக பெருக்­கெ­டுத்து ஓடு­கி­றது. இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.
துருக்கி மருத்­து­வ­ம­னையில் அப்­துல்லாஹ்
உயிர் பிழைத்த அப்­துல்லாஹ் குர்தி தனது குடும்­பத்­தி­னரின் உடல்­களை பெற்றுக் கொள்ள துருக்­கியின் முக்லா நகர மருத்­து­வ­ம­னைக்கு வந்தார்.
அங்கு அவர் அந்த மோச­மான தரு­ணத்தை ஊட­கங்­க­ளிடம் இப்­படி விப­ரித்­துள்ளார்.
''கோஸ் தீவில் இருந்து 4 கி.மீ. தொலைவில் எங்கள் படகு வந்­த­போது ராட்­சத அலையால் படகு தூக்கி வீசப்­பட்­டது. நாங்கள் அணிந்­தி­ருந்த லைப் ஜாக்கெட் போலி­யா­னது. அதனால் அனை­வரும் தண்­ணீரில் மூழ்­கினோம்.
படகின் ஒரு பகு­தியை பிடித்­த­படி நானும் எனது மனை­வியும் குழந்­தை­களை காப்­பாற்ற போரா­டினோம். முதல் ஒரு மணி நேரத்தில் எனது மூத்த மகன் காலிப் கைகளை விட்டுச் சென்றான். இரண்­டா­வது மகன் அய்­லா­னை­யா­வது காப்­பாற்­றி­வி­டலாம் என்று அவனை தண்­ணீ­ருக்கு மேலே தூக்கிப் பிடித்­தி­ருந்தேன். ஆனால் அவனும் எனது கையி­லேயே இறந்­து­விட்­டான்.
எனது மனை­வி­யை­யா­வது காப்­பாற்­றலாம் என்று நினைத்தேன். அவளும் என்­னை­விட்டு போய்­விட்டாள்.
எல்­லா­வற்­றையும் இழந்­து­விட்டேன்.
இனிமேல் உல­கத்­தையே எனக்கு தந்­தால்­கூட எனக்கு எது­வுமே வேண்டாம்.
அவர்­க­ளோடு சேர்த்து என்­னையும் புதைத்­து­வி­டுங்கள். இல்­லையேல் அவர்­களின் கல்­லறை அருகே அமர்ந்­தி­ருந்து உயிரை விட்­டு­வி­டுவேன்'' இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.
ஏன் சிரி­யா­வி­லி­ருந்து வெளி­யே­றினர்?
சிரி­யாவில் கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக அந்­நாட்டு அதிபர் பஷர் அல் அஸா­துக்கு எதி­ராக போராட்டம் நடந்து வரு­கி­றது. அங்கு ஐ.எஸ். அமைப்­பி­னரும் சில பகு­தி­களை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­துள்­ளனர்.
இந்­நி­லையில் சிரி­யாவின் வடக்கு பகு­தியில் அமைந்­தி­ருப்­ப­துதான் குர்திஷ் மக்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட கொபானி நகர். இந்த நகர் குர்திஷ் படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டி­லேயே இருந்து வரு­கி­றது. எனினும் இந்த நகரை கைப்­பற்­று­வ­தற்கு ஐ.எஸ். அமைப்­பினர் கடும் தாக்­கு­தல்­களை தொடுத்­தனர்.
இந்­நி­லையில் கடந்த ஜன­வரி மாதம் முழு­வதும் இடம்­பெற்ற மோதல்­க­ளை­ய­டுத்து அங்­கி­ருந்து ஐ.எஸ். அமைப்­பினர் துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டனர். மோதல்கள் உக்­கி­ர­ம­டைந்த காலப்­ப­கு­தியில் அப்­துல்லாஹ் குர்­தியின் குடும்­பத்­தினர் பல தட­வைகள் வீட்டை விட்டு வெளி­யே­றி­யுள்­ளனர்.
இந் நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் கொபா­னியை இரண்டு நாட்கள் தமது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருந்த ஐ.எஸ். படை­யினர் நடத்­திய தாக்­கு­தல்­களில் சுமார் 200 பொது மக்கள் கொல்­லப்­பட்­டனர்.
இத­னை­ய­டுத்தே அப்­துல்லாஹ் குர்தி தனது குடும்­பத்­தோடு ஐரோப்பா நோக்கி பய­ணிக்கும் முடிவை எடுத்­துள்ளார்.
தனது கரங்­க­ளா­லேயே மூன்று ஜனா­ஸாக்­க­ளையும் அடக்­கிய அப்­துல்லாஹ் குர்தி
படகு அனர்த்­தத்தில் உயி­ரி­ழந்த தனது மனைவி மற்றும் இரு மகன்­க­ளையும் அப்­துல்லாஹ் குர்தி தனது கரங்­க­ளா­லேயே அடக்கம் செய்தார். கொபா­னி­யி­லுள்ள ஷுஹ­தாக்கள் மைய­வா­டி­யி­லேயே ஜனாஸா நல்­ல­டக்கம் நடை­பெற்­றது.
துருக்­கி­யி­லி­ருந்து விசேட விமானம் மூலம் சிரி­யாவின் கொபானி நக­ருக்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜனா­ஸாக்கள் கொண்­டு ­வ­ரப்­பட்­டன. இதில் அப்­துல்லாஹ் குர்­தியின் உற­வி­னர்­களும் அதி­கா­ரிகள் சில­ருமே கலந்து கொள்ள அனு­ம­திக்­கப்­பட்­டனர்.
ஜனாஸா நல்­ல­டக்­கத்தின் பின்னர் அங்கு குழு­மி­யி­ருந்­த­வர்கள் மத்­தியில் கருத்து வெளி­யிட்ட அப்­துல்லாஹ் குர்தி  ''இந்தத் துயர சம்­ப­வத்­திற்­காக நான் யாரையும் குற்­றம்­சாட்ட விரும்­ப­வில்லை. என்னை நானே நொந்து கொள்­கிறேன். இதற்­கான விலையை நான் எனது வாழ்க்கை முழு­வதும் செலுத்த வேண்டி வரும் என நினைக்­கிறேன்'' என்று தெரி­வித்தார்.
குர்து இனத்தைச் சேர்ந்த அப்­துல்லா சிரி­யாவில் முடி­தி­ருத்தும் தொழி­லா­ளி­யாகப் பணி­யாற்றி வந்­துள்ளார்.
நால்வர் கைது
அய்லான் குர்­தியின் குடும்பம் உட்­பட பலரை சட்­ட­வி­ரோ­த­மான முறையில் படகில் ஏற்றிச் சென்ற சிரி­யாவைச் சேர்ந்த நால்­வரை துருக்கி அதி­கா­ரிகள் கைது செய்­துள்­ளனர்.
இப் படகு விபத்தில் நான்கு சிறார்கள் உட்­பட மொத்­த­மாக 12 பேர் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.
இவர்கள் அனை­வ­ரதும் மர­ணத்­திற்கு கார­ண­மாக அமைந்­தார்கள் என்ற வகையில் நான்கு சந்­தேக நபர்­க­ளையும் தடுத்து வைத்து விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­து­மாறு துருக்­கியின் 'போட்ரம்' நகர நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.
புகைப்­ப­டத்தால் குவியும் நிதி­யு­த­விகள்
அய்லான் குர்­தியின் புகைப்­ப­டங்கள் சமூக ஊடங்கள் வாயி­லாக உலகம் முழு­வ­திலும் பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யதைத் தொடர்ந்து சிரிய நாட்டு அக­தி­க­ளுக்கு உதவும் வகையில் மேற்கு நாடு­களின் மக்கள் பாரி­ய­ளவு நிதி­யு­த­வி­களை வழங்கி வரு­கின்­றனர். அதே போன்று சர்­வ­தேச நாடு­களும் தமது நிதி­யு­தவி­களை அதி­க­ரித்­துள்­ளன.
அய்லான் குர்தியின் புகைப்படம் ஏற்ப டுத்தியுள்ள தாக்கம் காரணமாக தமது நிறுவனத்திற்கு வழக்கமாக கிடைக்கப் பெறும் நிதியுதவி 105 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக யுனிசெப் அமெரிக்க கிளை தெரிவித்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் சிரிய மக்களுக்கான தமது நாட்டின் மனிதாபிமான உதவிக்கு மேலதிகமாக 153 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இப் புகைப்படத்தின் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்ட சர்வதேச ஒலிம்பிக் பேரவை தமது பங்குக்கு 2 மில்லியன் யூரோக்களை சிரிய அகதிகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
பெரு வரவேற்பளிக்கும் ஜேர்மன் மக்கள்
நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை சுமார் 8000 பேர் ஒஸ்­ரியா வழி­யாக ஜேர்மன் எல்­லையை வந்­த­டைந்­துள்­ளனர்.  அதே­போன்று நேற்றும் ஆயிரக் கணக்­கானோர் ஜேர்­மனை வந்­த­டைந்­துள்­ளனர்.
இவர்­க­ளுக்கு அந்­நாட்டு மக்கள் பெரும் வர­வேற்­ப­ளித்­துள்­ளனர்.
சிரிய அக­தி­களை ரயில் நிலை­யங்­களில் வர­வேற்கக் காத்­தி­ருந்த ஜேர்மன் மக்கள் '' ஜேர்­ம­னிக்கு உங்­களை அன்­புடன் வர­வேற்­கிறோம்'' எனும் வாச­கங்கள் ஏந்­திய பதா­தை­களைத் தாங்­கி­யி­ருந்­தனர்.
இவர்­களை வர­வேற்று உத­வி­களைச் செய்­வ­தற்­காக தொண்­டர்­களும் கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். அது மாத்­தி­ர­மன்றி உணவு மற்றும் தண்ணீர் போத்­தல்­க­ளையும் அக­தி­க­ளுக்கு வழங்கி தமது அன்­பையும் ஆத­ர­வையும் ஜேர்மன் மக்கள் வெளிப்­ப­டுத்­தினர்.
பல்­வேறு மேற்கு நாடுகள் அக­தி­களை தமது நாடு­க­ளுக்குள் அனு­ம­திக்­காது எல்­லை­களை மூடி வைத்­துள்ள நிலையில் ஜேர்மன் மாத்­திரம் இவ்­வாறு வர­வேற்­ப­ளிப்­பது அந்­நாட்­டி­னதும் அங்கு வாழும் மக்­க­ளி­னதும் மனி­தா­பி­மான உணர்வை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.
இவ்­வாறு ஜேர்­மனை வந்­த­டையும் மக்­களை தற்­கா­லி­க­மாக தங்க வைப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் உரிய பதிவு நடவடிக்கைகளின் பின்னர் நிரந்தரமாக குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அய்லானின் மரணம் வீண்போகவில்லை
அய்லான் குர்தியின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் சாமான்யமானதல்ல. சமூக ஊடக பாவனையாளர்களை மாத்திரமன்றி மேற்கின் அதிகாரம் பொருந்திய ஆட்சியாளர்களின் உள்ளத்தை உலுக்கிவிட்டுள்ளது.
தான் ஒருவன் மரணித்தாலும் ஆயிரக் கணக்கான தனது நாட்டு அகதிகள் உயிர் வாழ்வதற்கு ஒரு நாடு கிடைப்பதற்கு அய்லான் வழி செய்திருக்கிறான்.
ஆக, அய்லான் மரணம் ஒரு செய்தியாக மாத்திரம் அன்றி ஒரு வரலாறாகவே மாறிவிட்டது.
அவன் உலகில் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்களின் சாட்சியாக எப்போதும் இருப்பான்.

நன்றி : விடிவெள்ளி

No comments