நம்பிக்கை அளிக்கும் தேசிய நிறைவேற்று சபை

IMG_0224-e1417435178867 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் பத­வி­யேற்று இன்­றுடன் சரி­யாக இரண்டு வாரங்கள் பூர்த்­தி­யா­கின்­றன.

இந்த இரண்டு வார காலப் பகு­தியில் ஏலவே வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­ட­படி தேசிய அர­சியல் அரங்கில் பல்­வேறு மாற்­றங்கள் நிகழ்ந்து வரு­கின்­றன.

தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்டு புதிய அமைச்­ச­ரவை நிய­மிக்­கப்­பட்டு நேற்று முன்­தினம் முதல் தட­வை­யாக பாரா­ளு­மன்­றமும் கூடி­யது. ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது ஸ்தம்­பி­த­ம­டைந்­தி­ருந்த அரச இயந்­திரம் தற்­போது மீண்டும் புத்­து­யிர்ப்­புடன் இயங்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. 

தேசிய அர­சாங்­கத்தில் பல்­வேறு பின் புலங்­களைக் கொண்ட கட்­சிகள் அங்கம் வகிப்­பதன் கார­ண­மாக அனைத்து தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைத்துச் செல்ல வேண்­டிய தேவை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் இருக்­கி­றது.
எதிரும் புதி­ரு­மான கட்சி அர­சி­ய­லுக்கு அப்பால் நின்று ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்­த­வ­ரான ஜனா­தி­ப­தியும் ஐக்­கிய தேசியக் கட்­சியைச் சேர்ந்­த­வ­ரான பிர­த­மரும் நாட்டை வழி­ந­டாத்திச் செல்ல உறு­தி­பூண்­டி­ருப்­பது ஆரோக்­கி­ய­மா­ன­தொரு அர­சியல் மாற்­ற­மாகும்.

நீலம், பச்சை என்ற வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் தேர்­த­லுக்குப் பின்­னரும்  அடுத்து வரவுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்­ன­ரான காலப் பகு­தி­யிலும் மிகவும் நிதா­ன­மா­கவும் விட்டுக் கொடுப்­பு­டனும் நாட்டை வழி­ந­டாத்த வேண்­டிய பொறுப்பு இவர்கள் இரு­வ­ரை­யுமே சாரும்.

அதே­போன்று புதிய அர­சாங்­கத்தின் வாக்­கு­று­திக்­க­மைய உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும் தேசிய நிறை­வேற்று சபையில் சகல தேசிய அர­சியல் கட்­சி­க­ளி­னதும் தலை­வர்கள் அங்கம் வகிப்­பதும் இதில் மிக முக்­கிய விவ­கா­ரங்கள் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்டு தீர்­மா­னங்கள் எட்­டப்­ப­டு­வதும் மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தாகும்.

ஜனா­தி­பதி, பிர­தமர்,   முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன், மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க ஆகி­யோரும் முஸ்­லிம்கள் சார்பில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவர் ரிஷாத் பதி­யுதீன் ஆகி­யோரும் இந்த நிறை­வேற்று சபையில் அங்கம் வகிக்­கின்­றனர். அத்­துடன் ஜாதிக ஹெல உறு­மய சார்பில் சம்­பிக்க ரண­வக்­கவும் ஜன­நா­யக மக்கள் முன்­னணி சார்பில் மனோ கணே­சனும் இதில் அங்­கத்­துவம் பெற்­றுள்­ளனர்.
நாட்டின் தேசிய விவ­கா­ரங்­களில் செல்­வாக்குச் செலுத்­து­­ப­வர்கள் எனக் கரு­தப்­படும் சகல அர­சியல் தலை­வர்­களும் இதில் உள்­ள­டங்­கி­யி­ருப்­பது ஆரோக்­கி­ய­மான பல தரப்பு கருத்­தா­ட­லுக்கு வழி­வ­குக்கும் என நம்­பலாம்.

இது­வரை காலமும் நிறை­வேற்று அதி­கார மம­தையில் தான்­தோன்­றித்­த­ன­மான தீர்­மா­னங்­களை எடுத்து ஆட்சி செய்­த­தை­ய­டுத்தே நாடு குட்டிச் சுவ­ரா­னது. ஊழலும் மோச­டியும் அதி­கார துஷ்­பி­ர­யோ­கமும் தலை­வி­ரித்­தா­டி­யது. ஆனால் தற்­போ­தைய புதிய அர­சாங்­கத்தில் நாட்டை வழி­ந­டத்தும் பொறுப்­பா­னது தேசிய நிறை­வேற்று சபையின் கைக­ளுக்குச் சென்றிருக்கிறது. இது இஸ்லாம் வலியுறுத்துகின்ற 'ஷூரா' என்றழைக்கப்படும் ஆலோசனை அல்லது கலந்துரையாடல் சபைக்கு ஒப்பானது.

தேசிய நிறை­வேற்று சபை மூல­மாக கடந்த அர­சாங்­கத்தில் விடப்­பட்ட தவ­றுகள் இனங்­கா­ணப்­பட்டு அவை திருத்­தப்­பட வேண்டும்.
குறிப்­பாக புரை­யோடிப் போயுள்ள இனப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணவும் சிறு­பான்மை மக்­களின் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்­யவும் புதிய அர­சாங்கம் முன்­வர வேண்டும். என்ன எதிர்­பார்ப்­பு­களின் பேரில் மக்கள் ஆட்சி மாற்­றத்­திற்கு வாக்­க­ளித்­தார்­களோ அந்த நோக்கம் நிறை­வேற்­றப்­பட வேண்டும். அதுவே நம் எல்­லோ­ரி­னதும் எதிர்பார்ப்பும் பிரார்த்தனைகளுமாகும்.

அந்த வகையில் அடுத்து வரும் நாட்களில் கருத்து வேறுபாடுகளுக்குள் சிக்காது அனைவரும் ஓரணியில் நின்று நாட்டை சீரான பாதையில் வழிநடத்திச் செல்ல திடசங்கற்பம் பூண வேண்டும் என கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்.

நன்றி விடிவெள்ளி

No comments