Breaking News

புல்மோட்டை காணி அபகரிப்பு: தட்டிக் கேட்க திராணியில்லையா?

Untitled-1 copyஎஸ்.என்.எம்.ஸுஹைல்

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் புல்மோட்டை பிர­தே­சத்­தி­லுள்ள  அரிசி மலை, மீனாக்­கேணி, ஜின்னா புரம், 14 ஆம் கட்டை பகுதி , 13 ஆம் கட்டைப் பகுதி, பொன்­ம­லைக்­குடா, கொக்­கிளாய் உள்­ளிட்ட பல பகு­தி­களில் 2 500 ஏக்கருக்கும் மேற்பட்ட முஸ்­லிம்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

குறித்த சில பிர­தே­சங்கள் தொல்­பொருள் ஆய்வு என்ற பெய­ரிலும் பூஜா பூமி என்­கின்ற போர்­வை­யிலும் பௌத்த விகாரை விஸ்­த­ரிப்­புக்கும் கடற்­படை முகாம் அமைப்­ப­தற்­கு­மாக அப­க­ரிப்­ப­தற்­கான தீவிர முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

குறித்த பிர­தே­சங்களில் பரம்­பரை பரம்­ப­ரை­யாக முஸ்­லிம்கள் வாழ்ந்து வந்­துள்­ளனர். அப்­ப­கு­தி­க­ளி­லேயே விவ­சா­யமும் ஏனைய சேனைப்­பயிர் செய்­கை­க­ளிலும் ஈடு­பட்டு தமது வாழ்­வா­தா­ரத்தை பூர்த்தி செய்து வரு­கின்­றனர்.  எனினும் நாட்டில் கொடூர யுத்தம் இடம்­பெற்று வந்த நிலையில் புல்மோட்டை உள்­ளிட்ட கிழக்கின் பல பகு­தி­களில் மக்கள் இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தனர். இவ்­வாறு இடம்­பெ­யர்ந்­த­வர்கள் மீண்டும் சொந்த இடங்­க­ளுக்கு சென்று தமது வாழ்வை மீள ஆரம்­பிக்க முற்­படும் போது இவ்­வாறு ஆக்­கி­ர­மிப்­புகள் அதி­கார வர்க்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

பாரம்­ப­ரி­ய­மாக விவ­சாயம் செய்த பெருந்­தொ­கை­யான நிலங்கள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வி­ருப்­பதால் நூற்­றுக்­க­ணக்­கான விவ­சா­யிகள் தமது நிலத்தை இழக்­க­வுள்­ளனர். அத்­துடன் உறு­தி­யுள்­ள­வர்­களின் காணிகள் கூட பறி முதல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. ஒரு சில­ரிடம் பத்­திரம் இல்­லா­த­போதும் அவர்கள் பல­வ­ரு­டங்­க­ளாக அக்­கா­ணி­களில் விவ­சாயம் செய்து வரு­வ­துடன் குடி­யி­ருந்தும் வருகி­றார்கள்.

அரி­சி­மலை, விகாரை, நாக­வி­காரை என்ற சிறிய சிறிய விகா­ரைகள் இருந்த இடங்­களில் பெரும் விகா­ரை­களை அமைப்­ப­தற்­கா­கவே இம் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அத்­துடன் பொன் மலைக்­குடா என்ற இடத்­திலும் இன்னோர் இடத்­திலும் கடற்­படை, இரா­ணுவ முகாம்களை விஸ்­த­ரிப்பு செய்ய நினைக்­கின்­றார்கள். ஏற்­க­னவே இவ்­வி­டங்­களில் முகாம்கள் இருந்­த­தில்­லை­யெ­னவும் கவலை தெரி­விக்கப்படுகிறது.

புல்­மோட்­டைப் ­பி­ர­தே­சத்தின் 14 ஆம் கட்டை பிர­தே­சத்தை அண்­டிய நாக விகா­ரைக்­கான காணியை அள­வி­டு­வ­தற்­காக நில அளவைத் திணைக்­க­ளத்­தினால் விதிக்­கப்­பட்ட பல தடை­க­ளையும் தாண்டி திடீ­ரென வந்­த­வர்கள் நில அள­வையில் ஈடு­பட்­டனர். இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி பொது மக்கள் வீதியில் இறங்கி போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

அத்­தோடு இம்­மாத ஆரம்­பத்தில் (02.09.2013) புல்­மோட்டை அரி­சி­மலையை அண்­டிய பகு­தி­களை உள்­ள­டக்­கிய பூஜா மற்றும் தொல்­பொ­ரு­ளுக்­கான காணி­களை அடை­யா­ள­மிட்டு எல்­லை­களை இடு­வ­தற்­காக வருகை தந்த நில அள­வை­யா­ளர்­களை மக்கள் அளக்­க­வி­டாது வீதியில் இறங்­கி­யதை அடுத்து அள­வை­யாளர்கள் குச்­ச­வெளி பொலிஸ் நிலை­யத்தில் புகா­ரிட்­டனர்.

பின்னர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் சிசில் பெர்­னாண்டோ தலை­மையில் இடம்­பெற்ற கூட்­டத்தில் பிர­தேச செய­லாளர் உமா மகேஸ்­வரன், மாகாண சபை உறுப்­பினர் அன்வர், குச்­ச­வெளி பிர­தேச சபையின் தவி­சாளர் முபாரக், பிரதி தவி­சாளர் தௌபீக், உறுப்­பி­னர்­க­ளான சல்மான், பது­றுத்தீன் புல்­மோட்­டைக்­கான ஜம்இய்யத்துல் உலமா சபை பள்­ளி­வா­சல்­களின் தலை­வர்கள் நில அள­வை­யாளர்   உட்­பட பல பிர­மு­கர்­களின் கலந்து கொண்­டனர்.

சில தினங்களின் பின்னர் மீண்டும் காணி அளவை மேற்­கொள்­வ­தற்­காக இம்­மாதம் 9 ஆம் திகதி நில அள­வை­யா­ளர்கள் அள­வையில் ஈடு­பட முற்­பட்­ட­போது பொது­மக்கள் மற்றும் அர­சியல் வாதி­களால் அது தடுத்து நிறுத்­தப்­பட்­டது.

இதன் போது பொலிஸ் நிலை­யத்தில் தமது கட­மைக்கு பங்கம் விளை­வித்­த­தாக மாகாண சபை உறுப்­பினர் அன்வர், பிர­தேச உதவி தவி­சாளர், பெரிய பள்ளி தலைவர்  ஜம்இய்யதுல் உலமா உறப்­பினர் உள்ளிட்டோர் மீது முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

மறுநாள் 10 ஆம் திகதி நீதிவான் நீதி மன்­றத்தில் வழக்கு பதி­யப்­பட்டு அவர்கள் நீதவான் சசி­தரன் முன்னி­லையில் ஆஜரானார்கள்.

பொலிஸ் சார்பில் பொலிஸ் அத்­தி­யட்­சகர் வாஸ் பெரேரா தமது கருத்தை நீதி­மன்றில் முன்­வைத்­த­போது பிர­தி­வா­திகள் சார்பில் பத்து சட்­டத்­த­ர­ணி­களால் விவா­திக்­கப்­பட்­டது. மக்கள் பிரதி நிதிகள் என்ற அடிப்­ப­டையில் இவர்கள் அரச கட­மைக்கு எந்த குந்­த­கமும் விளை­விக்­க­வில்லை என்றும் அத்­தோடு முறை­யாக தமது கட்­சிக்­கா­ரர்­க­ள் ­பி­ரச்­சி­னையை  தீர்க்கும் நோக்­கிலே உரிய இடத்­திற்கு சென்­ற­தா­கவும் வா­திட்டனர். பின்னர் ஒவ்­வொ­ரு­வ­ரும் தலா ரூபா 10,000 சரீர பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர்.

நில அள­வையை தொடர்ந்து மேற்­கொள்­வ­தற்­காக நீதி மன்றின் அனு­ம­தியைப் பெற்­றுத்­த­ரு­மாறு நீதி­ப­தி­யிடம் பொலிஸ் அத்­தி­யட்­சகர் கேட்­ட­போது, தன்னால் அதனை தர­மு­டி­யாது எனவும் உயர் நீதி மன்­றி­னாலேயே பெற்­றுக்­கொள்ள வேண்டும் எனக் ­கூறி வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

மீண்டும் 2013.09.18 ஆம் திகதி குறி­தத வழக்கு மீண்டும் குச்­ச­வெளி நீதிவான் நீதி மன்றில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

அப்­போது ஆஜ­ரான மேற்­கு­றித்த நபர்கள் சார்­பாக அனைத்து சட்­டத்­த­ர­ணி­களும் தங்­க­ளது நியா­யங்­களை முன்­வைத்­தனர். பூஜா­பூமி, தொல்­பொருள் என்ற போர்­வையில் காணி­களை அள­வை­யி­டு­வ­தற்­கான கட்­ட­ளையை பொலிஸாரிடம் நீதி­மன்­றம் கோரி­ய­து. எனினும் அவை சமர்பிக்கப்படவில்லை.

போதிய ஆதா­ரங்களை சமர்ப்­பிக்­காததால் மாவட்ட அர­சாங்க அதிபர் மற்றும் குச்­ச­வெளி பிர­தேச செய­லாளர் ஆகி­யோரை எதிர்­வரும் 2013.10.02 ஆம் திகதி குச்­ச­வெளி நீதி­மன்­றத்­தில் ஆஜ­ரா­கு­மாறும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் ஆதா­ரங்கள் சமர்ப்­பிக்­காமல் அள­வைக்­கான அனு­ம­தியை வழங்க முடி­யாது என்றும் நீத­வானால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் இப்­பி­ரச்­சினை தொடர்­பாக எவ்­வித எதிர்­பார்ப்­பு­க­ளு­மின்றி சமூக நலனை கருத்­திற்­கொண்டு ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் அனை­வ­ருக்கும் புல்­மோட்­டைப்­பி­ர­தேச மக்கள் சார்­பாக நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­வ­தாக கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் அன்வர் தெரி­வித்தார்.

இது விட­ய­மாக மாகாண சபை உறுப்பினர் அன்வர் கூறு­கையில், நான் தொடர்ந்து திகோ­ண­மலை மாவட்ட காணி விட­ய­மாக பேசி வரு­கின்றேன். புல்­மோட்டை தொடக்கம் சேரு­­விலை வரை­யான பகு­தி­களில் பல ஏக்கர் காணிகளை பூஜா­பூமி, தொல்பெருள் என்ற போர்வையில் அபகரிக்கும் நோக்குடன் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இவற்றை காப்பாற்றும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக புல்மோட்டை விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் பட்டுள்ளது. இவற்றுக்கான நீதியான தீர்வு மிக விரைவில் கிட்டும் என்று தான் நம்புவதாகவும் கூறிய அதே வேளை இப்பிரச்சினைக்கான முக்கிய காரணம் முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்ற ஒற்றுமையின்மையுமே பலவீனமுமே என்றும் தெரிவித்தார்.

மேலும் இப்பிரச்சினை தொடர்பாக உயர்மட்டங்களுக்கு தான் தெரிவித்திருக்கும் அதே வேளை எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் கி.மாகாண சபை அமர்வின் போது இதைப்பற்றி பேசவுள்ள தாகவும் ஏற்கனவே முதலமைச்சரிடம் இது விடயமாக கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புல்­மோட்டைக் காணி­களை பூஜா பூமிக்­காக சுவீ­க­ரித்தே ஆகு­வது என்று அரசு கங்­கணம் கட்டிக் கொண்­டி­ருக்­கையில் அர­சுக்கு நல்ல பிள்­ளை­யாக இருந்து கொண்டு புல்­மோட்டை முஸ்­லிம்­களின் காணி­களைப் பாது­காக்க முடி­யாது என கிழக்கு மாகா­ண­ச­பையின் ஐக்கி தேசியக் கட்சி உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார்.

ஆண்­டாண்டு கால­மாக முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மாக இருந்த காணிகள் அவை. அங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்த பலர் அங்கு முறை­யாக மீள்­கு­டி­யேற்றப் பட­வில்லை. ஆரம்­பத்தில் படை­யி­னர்தான் காணி­களை ஆக்­கி­ர­மித்­தனர். இதற்கு முறை­யான தீர்வு காணப்­ப­ட­வில்லை. இதன் பிர­தி­ப­லிப்பே பூஜா பூமி வரை சென்­றுள்­ளது.

இந்­தக்­கா­ணி­களை நில அளவை செய்ய வந்­த­போது நானும் பொது­மக்­க­ளோடு களத்தில் நின்று எதிர்த்தேன். அப்­போது அம்­மு­யற்சி கைவி­டப்­பட்­டது. எனினும், உய­ர­தி­கா­ரிகள் காணி அளக்­கப்­பட மாட்­டாது என்ற பொய்­வாக்­கு­று­தி­களை வழங்கி மக்­களை ஏமாற்றி விட்டு காணி­களை அளக்க திட­சங்­கற்பம் பூண்­டுள்­ளனர். இது இந்த அர­சாங்­கத்தின் மறை­முக நிகழ்ச்சி நிரலின் படி நடந்­தே­று­கி­றது.

நான் குச்­ச­வெளி பிர­தேச செய­லாளர் உட்­பட சில உய­ர­தி­கா­ரி­க­ளுடன் இது தொடர்­பாக பேசி­யுள்ளேன். எங்­க­ளுக்கு சொல்­லப்­ப­டு­வ­தற்கு மாற்­ற­மா­கவே செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்­றன. எனவே எல்­லோ­ரையும் ஏமாற்றும் செயற்­பா­டு­களை இந்த அரசு மேற்­கொள்­கி­றது. அதற்­கென்றே சில அதி­கா­ரிகள் செயற்­ப­டு­கின்­றனர்.

கடந்த 3 மாதங்­க­ளுக்கு முன்னர் மாகா­ண­சபை உறுப்­பினர் அன்வர் புல்­மோட்டை காணிப் பிரச்­சினை சம்­பந்­த­மான தனி நபர் பிரே­ரணை ஒன்றை மாகாண சபையில் சமர்ப்­பிக்க முன்­ன­றி­வித்தல் கொடுத்­தி­ருந்தார். நான் எதிர்க்­கட்­சி­யாக இருந்­தாலும் நமது மக்­களின் பிரச்­சினை என்ற வகையில் இந்தப் பிரே­ர­ணைக்கு முழு ஒத்­து­ழைப்புக் கொடுக்க தயார் நிலையில் இருந்தேன். துர­திஸ்டம் அரசின் நலன் கருதி அவர் இந்தப் பிரே­ர­ணையை சமர்ப்பிக்­க­வில்லை.

முத­ல­மைச்சர் தலை­மையில் புல்­மோட்­டையில் கூடி காணிப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டது. நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டதோ என்­னவோ காணியை சுவீ­க­ரிக்கும் நட­வ­டிக்கை நிறுத்­தப்­ப­ட­வில்லை.

கிழக்கு மாகா­ண­சபை, முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ர­வுடன் தான் இயங்­கு­கின்­றது. முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ரவு இல்­லை­யெனில் கிழக்கு மாகாண சபை அரசின் சபையாக இருக்­காது எனவே இந்தக் காணிப் பிரச்­சினை தொடர்­பான அழுத்­தங்­களை இக்­கட்­சி­யினால் அர­சுக்கு கொடுக்க முடியும். அதுவும் நடந்­த­தாக தெரி­ய­வில்லை.

எனவே, அர­சுக்கு நல்­ல­பிள்­ளை­யாக இருந்து கொண்டு அதன் மறை­முக செயற்­பா­டு­களை நிறுத்த முடியாது. சமூகத்திற்காக காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது விடயத் தில் அரசோடு சேர்ந்திருக்கும் முஸ்லிம் தலைவர்கள் திறந்த மனதோடு முன்னேடு க்கும் சகல காரியங்களுக்கும் நான் பூரண ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.

எது எப்படியோ முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளை அதிகமாக கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையில் புல்மோட்டை அப்பாவி மக்களின் காணி விவகாரம் தொடர்பில் ஆராயப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

அத்தோடு இக்காணி விவகாரம் தொடர்பில் தட்டிக்கேட்கும் திராணி அரசியல் தலைமைகளுக்கு இலலையா என்று கேட்கும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. மட்டுமன்றி முஸ்லிம் தலைமைகள் உறங்கு நிலையில் தொடர்ந்தும் இருக்கும் பட்சத்தில் அஷ்ரப் நகர், பொத்துவில், புல்மோட்டை மட்டுமல்ல கிழக்கிலுள்ள எல்லா பிரதேச முஸ்லிம்களின் காணிகளிலும் கை வைக்கப்படலாம். அதிகார வர்க்கத்தினருக்கு இவ்வாறு முஸ்லிம் மக்களின் இடங்களில் கை வைப்பதற்கு இடமளிக்காது தடுத்து நிறுத்த முஸ்லிம் அரசியல், சமய, சமூக தலைமைகள் முன்வரவேண்டும்.

No comments