கண்டியில் தீக்குளித்த பௌத்த பிக்கு மரணம்..!
கண்டி தலதா மாளிகைக்கு அருகில் தீக்குளித்த பௌத்த பிக்கு படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பௌத்த பிக்கு சற்று முன்னர் மரணித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நேற்றைய தலதா மாளிகைக்கு அருகில் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட பௌத்த பிக்கு உடனடியாக கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வாறு தீக்குளித்தவர் ஸ்ரீ சுகத்த விகாரையில் கடமையாற்றிய போவத்தே இந்திரரத்ன தேரர் என தெரியவந்துள்ளது. மிருகவதை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இவர் தீக்குளித்துள்ளார்.
இப் பௌத்த பிக்கு தீக்குளிப்பதற்கு முன்னதாக இது தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு தகவல் வழங்கியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த கண்டி பொலிஸார் இவருக்கு பெற்றோல் கிடைத்தது எவ்வாறு எனவும் ஆராய்ந்து வருகின்றனர்.
Post Comment
No comments