Breaking News

குற்றவாளிகள் இறைவனின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது

நீதிக்­காக போராடும் வஸீமின் மாமா பயாஸ் லத்தீப் சொல்லும் கதை 

வஸீம் தாஜுதீன். சென். தோமஸ் கல்­லூ­ரியில் தனது கல்­வியை ஆரம்­பித்­தவர்.
பின்னர் கல்­கிஸை சென். தோமஸ் கல்­லூ­ரியில் கல்­வியை தொடர்ந்­தவர். பிர­பல றக்பி வீரர். வஸீம் தாஜுதீன் சென்.தோமஸ் கல்­லூ­ரியின் றக்பி அணியின் உப தலை­வ­ராக 2003 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் விளை­யா­டி­யவர். 
அத்­துடன் 19 வய­துக்கு கீழ் பட்­டோ­ருக்­கான பாட­சாலை அணியில் அதே ஆண்டு விளை­யா­டி­யவர்.
இவற்­றுடன் அவர் இலங்கை தேசிய அணியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி விளை­யா­டி­யவர். அத்­துடன் 2008 ஆம் ஆண்டு ஹொங்கொங் செவன் றக்பி அணிக்­கா­கவும் விளை­யா­டி­யவர். இந் நிலை­யி­லேயே அவர் 2008 ஆம் ஆண்டில் 'ஜன­ரஞ்­ச­க­மான றக்பி வீரர்' என்ற  விரு­தினை வெற்­றி­கொண்­டி­ருந்தார். இந் நிலையில் ஹெவலொக் கழக அணியின் தலை­வ­ராக  2009 ஆம் ஆண்டு தெரி­வானார்.
அதன் பின்னர் தாஜுதீன் காயத்­துக்கு உள்­ளா­கினார். இதனால் அவரின் காலில் சத்­திர சிகிச்சை ஒன்று மேற்­கொள்­ளப்­பட்­டது. அதனால் அவர் மீண்டும் 2012 ஆம் ஆண்டே றக்பி களத்­துக்கு வந்தார். இந் நிலை­யில்தான் இந்த துர­திஷ்­ட­வ­ச­மான சம்­பவம் கடந்த 2012, மே மாதம் 17 ஆம் திகதி நார­ஹேன்­பிட்­டியில் இடம்­பெற்­றது.
இந் நிலையில் தற்­போது தாஜுதீன் மர­ண­ம­டைந்­தது விபத்தால் அல்ல எனவும், அது ஒரு கொலைச் சம்­பவம் எனவும் பர­வ­லாக கருத்துப் பரி­மா­றல்கள் இடம்­பெற்று வரும் நிலையில் இலங்­கையின் பிர­பல ஆங்­கில வார இத­ழொன்­றுக்கு, தாஜுதீன் விவ­கா­ரத்தில் நீதிக்­காக போராடும் அவரது மாமா மொஹம்மட் பயாஸ் லத்தீப் வழங்­கி­யுள்ள செவ்­வி­யினை சுருக்­க­மாக தரு­கின்றோம்.

                தமிழில் : எம்.எப்.எம்.பஸீர்

wasim1

Q: வஸீம் தாஜு­தீனின் மரணம் ' சோக­மான விபத்து' என கரு­தப்­பட்டு மூன்று வரு­டங்கள் கடந்­து­விட்­டன. எனினும் தற்­போது அது ஒரு கொலை என கூறப்­ப­டு­கின்­றது. எனினும் சிலர் இன்னும் அதை விபத்­தா­கவே பார்க்­கின்­றனர். இந் நிலையில் வஸீமின் நெருங்­கிய உற­வினர் என்ற ரீதியில் இதனை நீங்கள் எப்­படி பார்க்­கின்­றீர்கள்?
பதில்:
வஸீம் தனது குடும்­பத்தை மிகவும் நேசித்த ஒருவர். அவர் எமது வீட்­டுக்கு அடிக்­கடி வந்து போகக் கூடி­ய­வ­ராக இருந்தார். ஏனெனில் பாட்­டியைப் பார்க்க அடிக்­கடி இங்கு வருவார். அவர் எப்­போதும் முன்­மு­றுவல் பூத்­த­வ­ராக இருப்பார்.
ஒரு­வ­ருடன் மிக குறு­கிய நேரத்­துக்குள் நட்­புக்­கொள்ளக் கூடி­யவர். அவ­ருக்கு ஒரு­வ­ரு­டனும் சிறி­ய­தொரு முரண்­பாடு கூட இருக்­க­வில்லை. அவர் அவ­ரது வழியில் வாழ்ந்து வந்தவர். அவ­ருக்கு எதி­ரிகள் என்று எவரும் இருக்­க­வில்லை.
எனினும் இந்த சம்­பவம் இடம்­பெற்ற பின்னர் பத்­தி­ரி­கை­களின் வெளிப்­ப­டுத்­தல்­களை அவ­தா­னித்த போது அவர் மீது யாரோ ஒரு­வ­ருக்கு கடு­மை­யான வெறுப்பு அல்­லது கோபம் இருந்­தி­ருக்க வேண்டும் என நாம் சிந்­தித்தோம்.
ஏனெனில் அவ­ரது கார் மதி­லுடன் மோதி தீப்­பி­டித்­த­தாக கரு­தப்­பட்ட போதிலும் அது யதார்த்­த­மா­கவோ அல்­லது நம்பும் படி­யா­கவோ இருக்­க­வில்லை.
நாம் அந்த விவ­காரம் தொடர்பில் சிறப்புத் தேர்ச்சி உடை­ய­வர்கள் இல்லை என்­றாலும் பொது அறிவு எம்­மிடம் உள்­ளது.

Q ஏன் அது ஒரு சாதா­ரண விபத்து அல்ல என கூறு­கின்றீர்?
பதில்:
எரிந்த நிலையில் இருந்த வாக­னத்தின் புகைப்­ப­டங்கள் பத்­தி­ரி­கை­களில் பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன. அதன்­படி காரா­னது ஒரு பக்­க­மாக சம­னிலை கொண்­டி­ருந்­தது. சம்­பவம் இடம்­பெற்ற சமயம் நாம் எமது குடும்­பத்­தா­ருடன் அந்த இடத்­துக்கு சென்றோம்.
அப்­போது வாக­னத்தின் ஒரு சில்லு மட்டும் கழன்று அருகில் உள்ள வாய்க்­காலில் இருந்­ததை நாம் அவ­தா­னித்தோம். காரின் கத­வினை உடைத்தே ஜனா­ஸாவை நாம் வெளியில் எடுத்தோம்.
அதன்­பின்னர் எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களே ஊட­கங்­களில் வெளி­யா­கி­யி­ருந்­தன. மேலும் அந்த சூழல் விபத்து இடம்­பெற்­றதை உறு­திப்­ப­டுத்தும் அடை­ய­ாளங்­களை வெளிப்­ப­டுத்­த­வில்லை.
அதன் அருகே சிறிய கடை ஒன்று இருந்­த­தது. எனினும் அதற்கு எவ்­வித பாதி­ப்புக்­களும் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை.
உண்­மையில் காரா­னது வேக­மாக வந்து மதி­லுடன் மோதி­யி­ருந்தால் அருகே பல சேதங்­களை அது காட்­டி­யி­ருக்கும். எனினும் அப்­படி எந்த அடை­யா­ளங்­களும் அங்கு இருக்­க­வில்லை.குறைந்த பட்சம் மோதிய சுவ­ரா­னது பல­மான சேதங்­க­ளுக்கு உட்­பட்­டி­ருக்க வேண்டும்.
கார் விபத்தில் நபர் ஒருவர் எரிந்து மர­ணித்­தமை தொடர்பில் நான் ஒரு போதும் கேள்­விப்­பட்­ட­தில்லை. அவ­ரது கார் நார­ஹேன்­பிட்டி சலிகா மைதா­னத்­துக்கு அருகில் மோதி விபத்­துக்­குள்­ளா­கி­யி­ருந்­தது.
எனினும் அவ­ரது பணப்­பையும் கைய­டக்கத் தொலை­பே­சியும் கிரு­லப்­ப­னையில் இருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. நான் ஒரு விட­யத்தை சொல்ல விரும்­பு­கின்றேன்.
வஸீம் ஒரு போதும் பணப் பை மற்றும் தொலை­பேசி இல்­லாமல் வெளியே செல்ல மாட்டார். அவ்­வி­ரண்­டையும் அவர் ஒரு போதும் அவர் தனது காற்­சட்டைப் பைக்­குள்ளும் போட­மாட்டார்.
மாற்­ற­மாக அவ­ரது தொலை­பேசி அலு­மி­னியம் உறை­யொன்­றி­லேயே இருக்கும். தொலை­பேசி எரிந்­து­விட்­டது என்று எடுத்­துக்­கொண்­டாலும் அந்த உறையா­வது இருக்க வேண்டும் அல்­லவா. ஆனால் அத­னையும் காண­வில்லை.

Q: வஸீம் விருந்­து­ப­சாரம் ஒன்­றுக்கு சென்று வரும் போது இந்த விபத்து இடம்­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கின்­றதே. அது உண்­மையா?
பதில்:
நாங்கள் குற்றப் புல­னாய்வுப் பிரிவை நம்­பு­கின்றோம்.
அவர்கள் திற­னாக விசா­ர­ணை­களை நடத்­துவர். எல்லாம் எதிர் காலத்தில் வெளிப்­படும். அது வரை நாம் காத்­தி­ருக்­கின்றோம்.
அவ­ருக்கு நார­ஹேன்­பிட்டி சாலிகா மைதா­னப்­ப­கு­திக்கு செல்ல வேண்­டிய எந்த தேவையும் இல்லை. அவ­ரது வீடு வெள்­ள­வத்­தையில் உள்­ளது. அந்த நாளில்  அவர் நண்பர் ஒரு­வரின் வீட்­டுக்கு சென்­றுள்­ள­துடன் வீடு திரும்ப முன் நண்­பரை கொண்டு போய் அவ­ரது வீட்டில் விட்­டுள்ளார்.

Q: அந்த பாதை தொடர்பில் சந்­தேகம் உள்­ளதா?
பதில்:
ஆம்.
அந்த நாள் அவர் பீ.ஆர்.சி.மைதா­னத்­துக்கு முன்னால் உள்ள கட்­டி­டத்தில் மேல் மாடியில் அமை­யப்­பெற்­றுள்ள சுபர் மார்கெட் ஒன்­றி­லி­ருந்து  5 லீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்­றினை கொள்­வ­னவு செய்­தி­ருந்தார்.
அதற்­கான சிட்டை அவ­ரது பணப் பையில் இருந்­துள்­ளது. அவரை யாரா­வது பிந்­தொ­டர்ந்து வந்­த­னரா இல்­லையா என்­ப­தெல்லாம் எமக்குத் தெரி­யாது. சீ.சீ.டி.வி பதி­வுகள் அவர் அவ­ரது பாதையில் வாக­னத்தைச் செலுத்தி வரு­வதைக் காட்­டு­கின்­றது. எனினும் அதனுள் எவ­ரேனும் உள்­ள­னரா இல்­லையா என்­பது தெளி­வாக தெரி­ய­வில்லை.
இவை­ய­னைத்­தையும் வைத்து சிந்­திக்கும் போது எமக்கு அது ஒரு விபத்­தாக தெரி­ய­வில்லை.

Q: சம்­பவம் இடம்­பெற்ற இடத்தில் அன்­றைய தினம் வேறு ஏதா­வது வழ­மைக்கு மாற்­ற­மான விட­யங்கள் இடம்­பெற்­ற­னவா?
பதில்:
இந்த சம்­ப­வத்தின் பின் 24 மணி நேரத்­துக்குள் எமது மார்க்க அனுட்­டா­னங்­களின் பிர­காரம் ஜனா­ஸாவை அடக்கம் செய்ய வேண்­டிய தேவை இருந்­தது. எனினும் எமது வழக்கத்தின் பிர­காரம் இறுதிக் கிரி­யை­களை  தொடர நாம் அனு­ம­திக்­க­ப்ப­ட­வில்லை.
அவர்கள் ஜனா­ஸாவை எம்­மிடம் ஒப்­ப­டைப்­பதில் கால தாம­தத்தை கடை­பி­டித்­தனர். வஸீமின் சகோ­தரி (அவர் ஒரு இரா­ணுவ வைத்­தியர்) ஜனா­ஸாவை அடை­யாளம் காட்ட சென்ற வேளை தேவை இல்­லாமல் பல வழி­க­ளிலும் சிக்­கல்­களை சந்­தித்­துள்ளார்.
அவ­ரிடம் இரு தட­வைகள் சத்­தியக் கட­தாசி கோரப்­பட்­டுள்­ளது. எனினும் அந்த நேரம் நாம­னை­வரும் எமது மார்க்கப் படி இறுதி கிரி­யை­களை மேற்­கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்­கோடு இருந்தோம்.

wasim2

Q: ஜனா­ஸாவில் குத்துக் காயங்கள், எலும்பு முறி­வுகள் அவ­தா­னிக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது. அப்­போது நீங்கள் அவ்­வா­றான ஏதேனும் ஒன்­றினை அவ­தா­னித்­தீர்­களா?
பதில்:
அப்­போது வஸீமின் ஜனாஸா தொடர்பில் இறுதி கிரி­யைகள் இடம்­பெற்­றது. இதன் போது சில அடை­யா­ளங்கள் அவ­தா­னிக்­கப்­பட்­டன.
கழுத்துப் பகு­தியில் ஆழ­மான துளை ஒன்று காணப்­பட்­டது.
நான்கு முன் பற்கள் உடை­பட்­டி­ருந்­தன. இவ்­வா­றான விட­யங்­களை நாம் அவ­தா­னித்தோம். ஒரு கால் உடைக்­கப்­பட்­டி­ருந்­தது.

Q: இவ்­வா­றான காயங்கள் விபத்தில் ஏற்­பட்­டி­ருக்க வாய்ப்­பில்­லையா?
பதில்:
காரில் இருந்து ஜனா­ஸாவை எடுக்கும் போது நான் அங்கு இருந்தேன். இந்த காயங்கள் விபத்தால் ஏற்­பட்­டது என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
வாக­னத்தின் எந்­த­வொரு பாகமும் அவ­ரது உடலை துளை­யிட்­டி­ருக்­க­வில்லை. கார் விபத்­துக்கள் நாட்டில் பொது­வாக இடம்­பெ­று­வது குறித்து எமக்கு தெரியும். எனினும் நாம் ஒரு­போதும் ஒரு வாகனம் பற்றி எரிந்­ததை கண்­ட­தில்லை.

Q: இந்த கேள்­விகள் ஏன் இவ்­வ­ளவு நாளும் எழுப்­பப்ப­ட­வில்லை?
பதில்:
ஒரு நிச்­ச­ய­மற்ற சூழல் அப்­போது நில­வி­யதால் நாம் இதனை பின் தொட­ர­வில்லை. பின்னர் நம் இது தொடர்பில் மேல­திக தக­வல்­களைப் பெற்­றுக்­கொண்டோம். அதனை நாம் பொலி­ஸா­ருக்கும் தெரி­யப்­ப­டுத்­தினோம். அவர்கள் இதனை சாத­ாரண வாகன விபத்­தா­கவே பார்த்­தனர்.

Q: அண்­மையில் வஸீமின் ஜனாஸா மீண்டும் தோண்டி எடுக்­கப்­பட்­டது. ஜனா­ஸா­வ­ானது சிதை­வ­டை­யாமல் நல்ல நிலையில் உள்­ள­தா­கவும் விஷே­ட­மாக அது பாது­காக்­கப்­பட்­டதால் அவ்­வாறு இருந்­த­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றதே. அது உண்­மையா?
பதில்:
பிரேத அறையில் இருந்து ஜனாஸா எம்­மிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட பின்னர் நாம் அதனை வீட்­டுக்கு கொண்டு செல்­ல­வில்லை. நாம் அதனை நேர­டி­யாக பள்­ளி­வா­ச­லுக்கே கொண்டு­சென்றோம்.
எங்கள் மார்க்க வழக்­கத்தின் படி நாம் ஜனா­ஸாக்­களை வெள்ளைத் துணியால் சுற்­றுவோம். பணக் காரர்கள் ஏழைகள் என அனை­வ­ருக்கும் பொது­வான அடக்கச் சட்டம் அது.  நாம் அனைத்து மார்க்க சடங்­கு­க­ளையும் செய்தோம்.
எனினும் ஜனா­ஸாவை வெள்ளைத் துணியால் மறைக்­க­வில்லை. நாங்கள்  சாதா­ரண மக்கள். மதங்­க­ளுக்கு உட்­பட்டு நாம் வாழ்­கின்றோம். நாங்கள் வேண்­டு­மென்றே அல்­லது தெரிந்­து­கொண்டே பாவ­மான காரி­யங்­களில் ஈடு­ப­ட­மாட்டோம்.
அதனால், ஜனா­ஸாவை வெள்ளை பொலித்­தீ­னினால் முதலில் சுற்­றினோம் என்­பதை இப்­போது நான் தைரி­ய­மாக சொல்­கின்றேன்.
இவ்­வாறு வெள்ளை பொலித்­தீ­னினால் ஜனா­ஸாவை மறைக்க எனக்கு மேலும் இருவர் உத­வினர்.
அதன்­பின்னர் ஜனா­ஸாவை வெள்ளைத் துணி கொண்டு முழு­மை­யாக மறைத்தோம்.
அந்த தொலை நோக்குப் பார்­வை­யுடன் கூடிய எனது நட­வ­டிக்கை இன்று நீதி தொடர்­பி­லான போராட்­டத்­துக்கு உத­வி­யாக உள்­ளது. தோண்டி எடுக்­கப்­பட்ட ஜனாஸா நல்ல நிலையில் இருப்­ப­தாக அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

Q: ஜனாஸா சிறப்பு இடத்தில் அடக்கம் செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றதே?
பதில்:
எமது மதத்தின் நம்­பிக்­கை­களின் பிர­காரம், ஒரு­வரை அடக்கம் செய்த பின்னர் அவ­ரது அடக்­கஸ்­த­லத்­துக்கு அருகே மரம் ஒன்றை நட்டு வைப்போம். அது அவ­ருக்கு நிழல் கொடுக்கும் என்­பது நம்­பிக்கை.
அத்­துடன் அவ­ருக்­காக பிரார்த்­தனை செய்­வதும் ஒரு வழி­முறை. அந்த வகையில் எமது இளைய சகோ­தரர் அப்­போது ஒரு வேப்பம் மரத்தை அடக்­கஸ்­த­லத்­துக்கு அருகே நாட்­டினார்.
அவர் வஸீமை மிகவும் நேசித்­தவர். நாங்­களும் அவரை நேசிக்­கின்றோம். அதனால் தான் எனது புதி­தாக பிறந்த குழந்­தைக்கு வஸீமின் பெய­ரையே வைத்­துள்ளேன். தற்­போது அந்த மரம் கற்­ப­னைக்கு எட்­டாத அளவு வளர்ந்­துள்­ளது.

Q: தற்­போது இது ஒரு கொலை என வெளிப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யானால் இதனை செய்­த­வர்கள் யார்?
பதில்:
எங்­க­ளுக்கும் இது ஒரு கொலையா விபத்தா என தெரிந்­து­கொள்ள வேண்­டிய தேவை உள்­ளது.
தற்­போது பொலிஸார் இது ஒரு கொலை என்­ப­தற்­கான தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். எனவே இதன் மர்மம் துலக்­கப்­பட வேண்டும்.
வஸீம் இலங்கை பிரஜை. அத்­துடன் மிக அறி­யப்­பட்ட றக்பி வீரர்.
இது கொலை­யெனில் யாரால் இது புரி­யப்­பட்­டது, ஏன் புரி­யப்­பட்­டது, எப்­படி நடை­பெற்ற்து போன்ற விட­யங்­களை நாம் தெரிந்­து­கொள்ள வேண்டும். யரையும் நேர­டி­யாக வஸீம் குடும்­பத்தார் இது­வரை குற்­றம்­சாட்­ட­வில்லை.
எனினும் அவ­ரது மாமா­வான எனக்கும் சில சந்­தே­கங்கள் உள்­ளன. எனினும் பொலிஸார் அவ­ரது பெற்­றோரை அது ஒரு விபத்து என கூறி ஆறு­தல்­ப­டுத்­தி­விட்­டனர். இப்­போது நாம் எது உண்மை என்­பதை அறிய காத்­தி­ருக்­கின்றோம்.

Q: இந்த குற்றச் சாட்­டா­னது அர­சியல் பின்­புலம் கொண்­டது என கூறப்­ப­டு­கின்­றது. வஸீமின் சகோ­தரர் இது ஒரு சாதா­ர­ண­வி­பத்து என 2012 ஆம் ஆண்டு பதி­விட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இதனை விட தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­க­ளுக்கு குடும்­பத்தார் ஒத்­து­ழைக்­க­வில்லை எனவும்  கூறப்­ப­டு­கின்­றது. இது உண்­மையா?
பதில்:
உண்­மையில் நாம் ஊட­கங்­க­ளுக்கு முதலில் நன்றி தெரி­வித்­தா­க­வேண்டும். ஏனெனில் இந்த மர்மம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக பின்­தொ­டர்ந்து உண்மைக் கார­ணி­களை மறைக்­காமல் தெரி­வித்­த­தற்­காகும்.
விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் இந்த விசா­ர­ணை­களை மீள ஆரம்­பிப்­ப­தாக அறி­வித்­ததன் பின்னர் நான்  வஸீமின் மாமா என்ற ரீதியில் மீள முறைப்­பா­டொன்றை கைய­ளித்தேன். அத்­துடன் அமைச்­ச­ருக்கு நன்­றியும் தெரி­வித்தேன்.
இந்த சம்­பவம் இது­வரை மூடப்­பட்­டி­ருந்­தது தற்­போது மீள திறக்­கப்­பட்­டுள்­ளது. நாங்கள் இந்த விசா­ர­ணை­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்பு வழங்­குவோம் என குடும்­பத்­தவர் என்ற ரீதியில் கூறு­கின்றோம்.
சிலர் அர­சியல் இலாபம் கருதி குடும்­பத்தார் விசா­ர­ணை­களை விரும்­ப­வில்லை என கூறு­கின்­றனர். நாம் அவ்­வா­றான பொய்­யான குற்றச் சாட்­டுக்­களை நிரா­க­ரிக்­கின்றோம்.

Q: நன்கு அறி­யப்­பட்ட வீ.ஐ.பீ.க்கள் ( மிக முக்­கிய பிர­மு­கர்கள்) இந்தச் சம்­ப­வத்­துடன் தொடர்பு பட்­டுள்­ள­தாக பேசப்­ப­டு­கின்­றது. அது உண்­மையா? வஸீ­முக்கு வீ.ஐ.பீ.க்கள் எவ­ரு­ட­ன­ாவது முரண்­பா­டுகள் இருந்­ததா?
பதில்:
வஸீம் எது­வாக இருந்­தாலும் அவ­ரது சகோ­த­ரி­யிடம் சொல்வார். இந்த சம்­ப­வத்தின் பின்னர் இந்த வதந்­திகள் குறித்து நான் அவ­ளிடம் கேட்டேன்.
வஸீம் சிறந்த றக்பி வீரர் என்ற ரீதியில் அவரை வேறு கழ­கங்­க­ளுக்கு விளை­யாட தொடர்ச்­சி­யாக அழைப்­புக்கள் விடுக்­கப்­பட்­டுள்­ளன. வெளிப்­ப­டை­யாக சொல்­வ­தென்றால் சீ.எஸ்.என். இவரை ஹெவலொக் கழ­கத்தில் இருந்து எடுத்து இன்­னொரு கழ­கத்­துக்கு விளை­யாட வைக்க முயற்­சித்­துள்­ளது.
அதனால் வஸீம் சீ.எஸ்.என். க்கு எதி­ராக வெளிப்­ப­டை­யாக கருத்­துக்­களை முன் வைத்­துள்ளார்.
அதனால் சில சின்ன முரண்­பா­டுகள் தோன்­றி­ய­தாக அவர் அப்­போது தனது சகோ­த­ரி­யிடம் தெரி­வித்­துள்ளார்.

Q: ஒரு யுவ­தியின் பெயர் ஆரம்­பத்தில் இருந்தே இந்த சம்­பவம் குறித்து பேசப்­ப­டு­கின்­றது. அவர்­களின் தொடர்­புதான் என்ன?
பதில்:
எங்­க­ளது மகன் திட­காத்­தி­ர­மா­னவன்.
அத்­துடன் பிர­பல்­ய­மான றக்பி வீரர். பல யுவ­திகள் அவர் மீது நாட்டம் கொண்­ட­வர்­க­ளாக இருந்­தி­ருப்பர். இது தான் இன்று இளை­ஞர்­க­ளுக்கு நடப்­பது. இது தொடர்பில் வஸீம் அவ­னது சகோ­த­ரி­யிடம் கருத்துக்களை பரிமாறியுள்ளார்.
எனினும்  அவர் ஒரு போதும் தனக்கும் குறித்த பேசப்படும் யுவதிக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாக குறிப்பிட்டிருக்கவில்லை. முகப் புத்தகம் முதல் எங்குமே குறித்த யுவதியின் புகைப்படத்துடன் கூட  வஸீமை நாம் காணவில்லை. எனினும் நீங்கள் குறிப்பிடும் அந்த யுவதி சீ.எஸ்.என்.இல் வேலை செய்யும் போது ஒரு முறை விளையாட்டு நடவடிக்கை ஒன்று தொடர்பில் வஸீமை தொடர்புகொண்டுள்ளார்.
எனினும் வஸீம் அதனை நிராகரித்ததாக நான் அறிகின்றேன். நாம் எவரையும் குற்றஞ்சாட்டவில்லை. எமக்கான நீதி கிடைக்கும் வரை நாம் காத்திருக்கின்றோம்.

Q: இறுதியாக இந்தச் சம்பவம் குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்:
எமது மத நம்பிக்கைகளின் பிரகாரம், ஒரு மனிதர் மரணிப்பது என்பது எழுதப்பட்ட விதிப் படி நடப்பதாகும்.
எனினும் இது ஒரு கொடூரமான படுகொலை. அது ஒரு விபத்தாக இருந்தால் நம்மை நாம் ஆறுதல் படுத்திக்கொண்டிருக்க முடியும்.
அவரை யாராவது சுட்டிருந்தாலோ அவரது உடலில் இந்தளவு சேதம் ஏற்பட்டிருக்காது.
எனினும் அவர் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது விடயத்தில் நாம் நீதியையே எதிர்பார்க்கின்றோம். இயற்கை அவர்களுக்கு தண்டனையளிக்கும். இறைவனின் பிடியில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியாது.

-Vidivelli

No comments