பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் அருத்திக பெர்னாண்டோ பொய் சொல்லுகிறார்: மஞ்சுள
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருத்திக பெர்னாண்டோ பொய் கூறுகின்றார் என்று ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்தன தெரிவித்தார்.
காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருத்திக பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை தொடர்பில் பிபிசி செய்தி சேவைக்கு கருத்துரைத்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அருத்திக பெர்னாண்டோவை 2007 ஆம் ஆண்டு கொழும்பில் சந்தித்ததன் பின்னர் தான் எங்கேயும் சந்திக்கவில்லை என்றும் பிரான்சில் வசிக்கும் ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட, கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments