Breaking News

கசினோ நிலையங்கள்; நமது கடப்பாடு என்ன?

photo_150கொழும்பில் பாரிய கெசினோ மையம் ஒன்றை அமைப்­ப­தற்­கான அனு­ம­தியை உலகின் பிர­பல கெசினோ வர்த்­தகர் என வர்­ணிக்­கப்­படும் ஜேம்ஸ் பாக்­க­ருக்கு அர­சாங்கம் வழங்­கி­யி­ருப்­பது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஆசி­யாவின் ஆச்­ச­ரி­ய­மாக இலங்­கையை மாற்றும் வேலைத்­திட்­டத்தின் கீழ் கொழும்பு இன்று பாரிய சூதாட்ட மைய­மா­கவும் மேற்கு நாக­ரிக கலா­சா­ரங்­களின் மறு­பி­றப்­பி­ட­மா­கவும் மாற்றம் பெற்­றி­ருக்­கி­றது.

ஏலவே பல சூதாட்ட மையங்கள் கொழும்பில் இருக்­கின்ற போதிலும் புதிய மைய­மா­னது கோட்டை சம்­போதி விகா­ரைக்கு அரு­கா­மையில் அமை­வதைக் கருத்திற் கொண்டே பௌத்த அமைப்­புக்கள் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்த ஆரம்­பித்­துள்­ளன.

இந்த கெசினோ மையம் அமைக்கும் பணி­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக வாபஸ் பெற வேண்டும் எனவும் இன்றேல் தாம் வீதியில் இறங்கிப் போராட வேண்டி வரும் எனவும் கண்டி அஸ்கி­ரிய பீடா­தி­பதி உடு­கம சிறீ புத்­த­ரக்­கித்த தேரர் தெரி­வித்­துள்ளார். இந்த நாட்­டுக்கு அவ்­வா­றான சூதாட்ட நிலை­யங்கள் அவ­சி­ய­மில்லை. இதற்கு எதி­ராக ஒட்­டு­மொத்த பௌத்­தர்­களும் வீதியில் இறங்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்­துள்ளார்.

அதே­போன்று கொழும்பு ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் தம்­பர அமில தே­ரரும் குறித்த கெசினோ நிலை­யத்­திற்கு எதி­ராக குரல் எழுப்­பி­யுள்ளார்.

இந்த நாட்டில் அவ­சி­ய­மற்ற பிரச்­சி­னை­களை எழுப்பிக் கொண்­டி­ருக்கும் பொது பல சேனா அமைப்பு இந்த கெசினோ விட­யத்தில் என்ன செய்யப் போகி­றது என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

இதற்­கி­டையில் நேற்­றைய தினம் கொழும்பில் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு ஒன்றை நடத்­திய பொது பல சேனா அமைப்பு, இந்த கெசினோ நிலை­யத்­திற்கு எதி­ராக குரல் கொடுத்­துள்­ள­மையும் இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இலங்­கை­யா­னது கடந்த பல நூற்­றாண்­டு­க­ளாக தனித்­து­வ­மான மத கலா­சார விழு­மி­யங்­களைப் பேணி வாழும் நாடாகும். ஆனால் போர் முடி­வுக்கு வந்த பிற்­பாடு நாட்டின் கலா­சா­ரமும் ஒழுக்க விழு­மி­யங்­களும் அதல பாதா­ளத்­திற்குச் சென்று கொண்­டி­ருப்­ப­தையே நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்­வுகள் எடுத்துக் காட்­டு­கின்­றன. அபி­வி­ருத்தி என்ற பெயரில் அநாச்­சா­ரங்கள் அரங்­கேறும் தள­மாக இன்று கொழும்பும் அதனை அண்­டிய பகு­தி­களும் மாற்­றப்­பட்டு வரு­கின்­றன.

கெசினோ சூதாட்ட மையங்கள் இந்த நாட்டின் பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு மாத்­திரம் ஆபத்­தா­ன­தல்ல. அது இந்த நாட்டில் ஒழுக்­கமும் கட்­டுக்­கோப்பும் மிக்க ஒரு சமு­தா­யத்தைக் கட்­டி­யெ­ழுப்ப விரும்பும் சக­ல­ருக்கும் எதி­ரா­ன­தாகும்.

அந்த வகை­யில்தான் கெசினோ உள்­ளிட்ட நாட்டின் கலா­சார சீர்­கே­டு­க­ளுக்கு எதி­ராக முஸ்­லிம்­களும், குறிப்­பாக முஸ்லிம் அர­சியல் மற்றும் மார்க்க தலை­மை­களும் குரல் எழுப்ப வேண்­டி­யது காலத்தின் கட்­டாயத் தேவை­யாகும்.

ஹலால் தொடர்­பிலோ பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­ப­டு­வது தொடர்­பிலோ மாத்­திரம் பேசு­வது முஸ்­லிம்­களின் கடப்­பா­டல்ல. மாறாக நாட்டின் தேசிய நலன்­களைப் பாதிக்கும் விட­யங்கள் தொடர்­பிலும் முஸ்­லிம்கள் முன்­னின்று குரல் கொடுக்க வேண்டும். அதுவே நாம் இந்த நாட்டை உண்­மை­யாக நேசிக்­கிறோம் என்­பதை அர்த்­த­பூர்­வ­மாக வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமையும்.

இன்றேல் முஸ்­லிம்கள் சுய­நலம் கொண்­ட­வர்­க­ளாக தமது மத கலா­சார அர­சியல் விடயங்களுக்காக மாத்திரம் சண்டைபிடிப்பவர்கள் என்ற தவறான கருதுகோளை ஏனைய சமூகங்கள் மத்தியில் கட்டியெழுப்ப வாய்ப்பாக அமைந்துவிடும். அவ் வாறான தவறானதொரு வரலாறை எழுத நாம் ஒருபோதும் இடமளிக்கலாகாது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட சகலரும் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறோம்.

நன்றி : விடிவெள்ளி

No comments