அரசியல் பேச கோதாபய அருகதையற்றவர்! திஸ்ஸ

tissaதேசிய அரசியல் குறித்து பேசுவதற்கு அரசுத்தலைவர், பிரதமர், அமைச்சர்கள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில், மக்கள் நிதியில் சம்பளம் பெறும் அரச அதிகாரியான பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அரசியலில் தலையிடுவதற்கு எவ்வித அருகதையும் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இராஜகிரியவில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த திஸ்ஸ அத்தநாயக்க,
”வட மாகாண சபை தேர்தல் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் விமர்சனங்களை அரச அதிகாரி ஒருவர் வெளியிடுவது ஏற்புடையதல்ல. அதனை அரசாங்கம் தான் நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதியளித்துள்ளது. அதனையே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியே 13 அல்ல அதற்கு அப்பால் சென்று 13க்கு மேலதிகமாக தருவதாக வாக்குறுதியளித்தார். இந்நிலையில் மக்களின் பணத்தில் ஊதியம் பெறும் அரச அதிகாரிகள் அரசியல் பேச எவ்வித அருகதையும் இல்லை. அவ்வாறான ஒரு சிலரால் நாட்டில் உள்ள அனைத்து அரச அதிகாரிகளும் அரசியல் பேச முனைவார்கள்” என்று தெரிவித்தார்.

No comments