மியன்மாரில் ரோஹிஹ்கிய முஸ்லிம்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மாத்திரமே அனுமதி
மியன்மரில் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு 2குழந்தைகள் மட்டும் போதும் என்ற உள்ளூர் நிர்வாகத்தின் முடிவுக்குஎதிர்கட்சி தலைவர் ஆங்சாங் சூகி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முதன் முதலாக சூகி கண்டனம் தெரிவித்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்களிடம் இதுக் குறித்து சூகிகூறுகையில்,’கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுக் குறித்து எனக்கு தெரியாது.
இத்தகைய முயற்சிகள் சட்டவிரோதமாகும். மக்களிடையே பாரபட்சம் காட்டுவது நல்லது அல்ல. மனித உரிமைகளை பரிசீலிக்காமல் அரசு இம்முடிவை எடுத்துள்ளது என்று சூகி தெரிவித்துள்ளார்.
Post Comment
No comments