பௌத்த தர்மத்திற்கு அமைவாகவே அரசியல் அமைப்பு; பொதுபல சேனா
பௌத்த தர்மத்திற்கு ஒத்துப் போகக்கூடிய முறையிலேயே அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
தளதா மாளிகைக்கு முன்பாக கடந்த 24 ஆம் திகதி மாடுகள் கொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு தீக்குளித்த போவத்தே இந்திர ரத்தின தேரரின் மறைவை பலர் இழிவுபடுத்துவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்திர ரத்தின தேரரின் இறுதிச் சடங்கில் களந்து கொண்ட போதே ஞானாசார தேரர் இக கருத்தை வெளியிட்டர்.
வெசாக் போயா தினத்தன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருகவதையினைக் கண்டித்து இந்திர ரத்ன தேரர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார். இவ்வாறான நிகழ்வுகளுக்கு எதிர்காலத்தில் இடமளிக்கக் கூடாது. ஆகவே மிருக வதௌக்கும் பலவந்தமான மத மாற்றத்தையும் தடுக்கும் விதமான சட்டங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படல் வேண்டும். எது எவ்வாறாயினும் நாட்டின் அரசியல் யாப்பு பௌத்த மத தர்மத்திற்கு அமைவான வகையில் உருவாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை இந்திர ரத்ன தேரர் ஒரு பகிரங்கமாகவே இனத் துவேஷத்தை தூண்டும் விதத்தில் செற்பட்டுள்ளார் என்றும், மத வழிபாட்டுத் தளங்களை உடைத்தமை, பொலீஸ் நிலையமொன்றின் மீது தாக்குதல் நடாத்தியமை என பல்வேறு குற்றச் செயழ்களில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் பிரபல செய்தித் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவை தொடர்பாக இவர்மீது வழக்குத் தொடர்ப் பட்டுள்ளமை தொடர்பாகவும் செய்திகள் வெளியாகின. இன்னுமொரு புரம் இது தீக்குளிப்பு அல்ல, இது ஒரு கொலை என்றும் கூறப்படுகின்றமை குறிப்பினடத் தக்கது.
தொடர்புடைய செய்திகள் :
பௌத்தர்களுக்காக செய்த உத்தம தியாகம்
தீமூட்டிக்கொண்ட தேரர் நீதிமன்றில் பிடியானை பிறப்பிக்கப்பட்டவர் : அதிர்ச்சி ரிப்போட்
Post Comment
No comments