உறுதியான தலைமைத்துவம் இல்லாமையே முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கு காரணம்!

Leder-சத்தார் எம்.ஜாவித்-

முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றோம் என பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தும் சிறந்த தலைமைத்துவம் இன்றி அரசியல் ஆதரவில்லாத அநாதகைளாக முஸ்லிம் சமுகம் தத்தளிக்கின்றனர்.

ஒரு நாட்டினை எடுத்துக் கொண்டால் அந்த நாட்டு மக்களுக்கு முழுப் பாதுகாப்பும் வழங்குவதில் அரசாங்கமும் அதனை பிரதி நிதித்துவப் படுத்தும் அரசியல் பிரதி நிதிகளும் அதற்கடுத்ததாக சமயம் என்ற ரீதியில் மக்களை நல்வழிப்படுத்தும் சமயத் தலைவர்கள் அல்லது சமய நிறுவனங்களின் பொறுப்பாகும்.

முஸ்லிம் மக்களைப் பொருத்தமட்டில் மேற் கூறப்பட்ட எதுவுமேயில்லாத அநாதைகளாக இரண்டும் கெட்டான் நிலையில் காணப்படுகின்றனர். எந்தவொரு அரசியல் வாதியோ அல்லது அமைப்போ காலத்திற்கேற்றவாறு மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளாது அரசியல் இலாபங்களுக்காக விலைபோகும் சக்திகளாகவே காணப்படுகின்றனர்.

இதன் காரணமாக எந்தவொரு பிரச்சினைக்கும் அச்சமின்றி முகம் கொடுக்கக் கூடிய உறுதியான முஸ்லிம் தலைமைத்துவம் இல்லாத காரணத்தால் இன்று முஸ்லிம்கள் சமய ரீதியில் வீழ்ச்சிப்போக்கிற்கு காரணமாக அமைந்துள்ளது.

அண்மைக் காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு சமய ரீதியாக பல்வேறுபட்ட இன்னல்களையும், இடையூறுகளையும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சில இனவாத விஷமிகளால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றமையை உலகமே அறிந்த விடயமாகும்.

இவ்வாறு இனவாத விஷமிகளால் தொடர்ச்சியாக மேற் கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் முஸ்லிம் மக்களின் உள, உடல் மற்றும் உடமைகளில் விலை மதிக்க முடியாத இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இன்று முஸ்லிம்கள் வெறுப்புத் தன்மை கொண்ட ஒரு சமுகமாக தோற்றம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை இனவாதிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இந் நிலைமைகளை சிந்தித்து மக்களுடன் இணைந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்படவேண்டும்.

இஸ்லாம் சமாதனத்தையும், அமைதியையும் விரும்பும் ஓர் மார்க்கமாகும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களால் அதனை அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்கில் இலங்கையில் உள்ள தீய சக்திகள் உள்ள10ர் அரசியல் பிரமுகர்களினதும், வெளிநாட்டு தீய சக்திகளினதும் ஆதரவுடன் துணிச்சலாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலைமையானது சமுதாயத்தில் ஒரு சமுகம் இன்னொரு சமுகத்தினை வெறுப்பான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கான நிலைமைகளை தோற்றுவிக்கின்றன.

இவ்வாறு ஒரு இனத்தின் சமய, கலாச்சார விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி முட்டுக்கட்டை போட்டு வரும் விஷமிகளின் செயற்பாடுகளை கண்டிக்காது முஸ்லிம் அரசியல்வாதிகள் மெனிகளாக இருப்பது அச்செயற்பாட்டளர்களின் எதிர்ப்பு நடவடிக்கைளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவு வழங்கும் செயற்பாடகவுள்ள நிலைமைகளையே கோடிட்டுக்காட்டுகின்றது.

இன்றவரை முஸ்லிம் மக்களால் சகித்துககொள்ள முடியாதளவு துன்பியல் சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் அரசாங்கம் கண்டும் காணாததுபோல மாற்றாந்தாய் மனப்பான்மையில் இருப்பது பாரிய இன விரிசல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் காலாக அமைகின்றது.

இதேபோல் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களைத் தவிர  தாம்தான் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் என்று மார்பு தட்டிக் கொள்ளும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடிப்பதுபோல் இருந்து கொண்டு நாடகமடுவதானது முஸ்லிம் மக்களுக்கு வேதனைமேல் வேதனையைக் கொடுக்கும் செய்றபாடாகும்.

பதவிக்கும் பட்டத்திற்காகவும் அரசியல் அடிமைப்பட்டவர்களாக சமயத்திற்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்காது ஒட்டுண்ணிகளாக காணப்படும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் மக்களின் வெறுப்புகளை தொடர்ந்தும் சம்பாதிக்காது சமயத்தைக் காக்க முன்வாருங்கள் அல்லது பதவிகளைத் துறந்து மக்களோடு இணைந்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் மக்களின் வெறுப்புக்கள் சமயம் என்ற ரீதியில் உங்கள் மீது அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

விஷமிகளின் செயற்பாடுகள் தலைக்குமேல் ஏறுவதற்கு முன்னர் விழித்துக் கொண்டு செயற்படவேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது. பதவிகளும் பட்டங்களும் மக்கள் ஆதரவு இருக்கும் பட்சத்தில்தான் அது இல்லாவிட்டால் நாயக்கும் கணக்கெடுக்க மாட்டார்கள். பதவிகளும் அதிகாரங்களும் இருக்கும்போது சமயத்திற்கும், சமுதாயத்திற்குமாக சாதுர்ரியமாக செயற்படுவதே உண்மையான மக்கள் பிரதி நிதிகளின் செயற்பாடுகளாகும்.

தற்போதைய அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில்  மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 18 பேர் மட்டில் உள்ளனர் இவர்களில் பெரும்பாலானவர்கள் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் காணப்படுகின்றனர்.

இவர்களில் எத்தனைபேர் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்றால் அது கேள்விக்கறிதான். சமயத்தை அழிக்கச் செயற்படும் செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்காதவர்களுக்கு அரசியல் அந்தஸ்து எதற்குத் தேவையென மக்கள் கேட்கின்றனர்.

இவர்ளிடம் கேட்டால் நான் பேப்பரில் அறிக்கைவிட்டேன், தொலைக்காட்சியில் பேசினேன், ஜனாதிபதியுடன் பேசினேன், பாதுகாப்புச் செயலாளருடன் பேசினேன், அவருடன் பேசினேன், இவருடன்பேசினேன்  அவர்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கு ஒன்றும் நடக்காது பயப்படத்தேவையில்லை என்று உத்தரவாதம் தந்துள்ளார்கள் என்று விதண்டாவாதக் கருத்துக்களை கூறி மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளிலேயே காணப்படுகின்றனரே  தவிர அவர்களாலலோ அல்லது வாக்குக் கொடுத்தவர்களாலோ ஒன்றும் நடக்கவில்லை.

மாறாக இனவிஷமிகள் முஸ்லிம்களுக்குச் செய்யும் இடையூறுகளை தொடர்ந்து செய்து வருவதுடன் கூட்டுங்கள் மூலமும் அறிக்கைகள் மூலமும் நிந்தனை செய்தவன்னமேயுள்ளனர். இந்தவகையில் பார்க்கும்போது அரசோடு கைகோர்த்துள்ள கையாலாகாத முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்பவர்களாக இருப்பதையே சுட்டிக்காட்டுவதாக மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

எந்தவொரு அரசியல்வாதியும் சமுகத்திற்காக தனது பதவிகளையும், வசதிகளையும் விட்டெறிந்துவிட்டு சமுக நலச் செயற்பாட்டில் இறங்ககின்றானோ அவனே உண்மையான சமய மற்றும் சமுதாயப் பற்றுள்ளவனாக மக்களிடத்தில் மதிக்கப்படுவான். இந்தவகையில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் சுயநல விஷமிகளாகவே கருதப்படுகின்றனர்.

சமயத்தையும் சமுதாயத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் கட்சி வேறுபாடின்றியும், பதவி பட்டம் என்று பாராது அணைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கும்போல் ஒன்றுபட்டுச் செயற்படுவார்களானால் எந்தவொரு தீய சக்திகளாலும் இஸ்லாத்தையோ, முஸ்லிம்களையோ அழிக்கமுடியாது என்பதே உண்மை.

இலங்கை முஸ்லிம் மக்களிடத்தில் இன்று காணப்படுவது வேதனைக்குரிய விடயமாக மத நிந்தனையாகும். மதத்தைப் பாதுகாப்பதற்கானதும் முஸ்லிம்களை வழி நடத்தக்கூடியதுமான  ஒரு அதிகாரமுள்ள அமைப்பு முஸ்லிம்களுக்கு இல்லாமல் இருப்பது கவளைக்குரிய விடமாகவுள்ளது.

முஸ்லிம் அரசியல்வாதிகளால் பயனில்லை என்பதால் இதுவரை காலமும் நம்பியிருந்த சமய அமைப்பான அகில இலங்கை ஜமியதுல் உலமா இன்று அரசியல்வாதிகளை விட மோசமாகவுள்ளது. குர்ஆன், ஹதீஸை விளங்கிய மேற்படி அமைப்பு இன்று ஹலால் என்றவிடயத்தில் ஒரு தலைப்பட்சமாக எடுத்த முடிவால் சகல முஸ்லிம்களையும் ஒரு நொடிப்பொழுதில் சமய நம்பிக்கையில் வேதனைப்படுவதற்கும், இனவாத விஷமிகளின் வெற்றிக்களிப்புக்கும் உறுதுணையாகிய சம்பவத்தை எந்தவொரு முஸ்லிமும் சகித்தக் கொள்ள முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

மேற் கூறப்பட்ட செயற்பாட்டாளர்களினால் இன்று முஸ்லிம்கள் ஒரு சிறந்த தலைமைத்துவமும், வழிகாட்டி அமைப்பும் இல்லாமல் அநாதைகளாக தத்தளிக்கும் நிலமைகளும்கு செல்வதற்கும் மேற் கூறப்பட்ட அமைப்பினர் வழி சமைத்தவிட்டனர்.

எனவெ முஸ்லிம்களைப் பொருத்தவரையில் சமயத்தையும், சமுதாயத்தையும் காப்பாற்றும் திராணியுள்ள சுயநலமற்ற நல்ல செயற்பாட்டாளர்கள் அரசியலிலும், சமய நிறுவனங்களிலும் உள்வாங்கப்படும் பட்சத்திலேயே இலங்கை முஸ்லிம்கள் சமய விழுமியங்களுடன் ஏனைய சமுதாயத்துடன் அமைதியாக வாழ முடியும்.

(MM)

No comments