புத்தரின் போதனைகளை பின்பற்ற முஸ்லிம்கள் தயார்;பௌத்தர்கள் தயாரா?

photo_145 புத்­த­மதம் நாடு மற்றும் கலா­சார அடிப்­ப­டையில் இரண்டு முக்­கிய பிரி­வு­க­ளையும் பல துணைப் பிரி­வு­க­ளையும் கொண்­டது. புத்த தர்­மத்தின் அடிப்­படை நம்­பிக்­கைகள்:
‘‘ மூன்று நகைகள் (Jewels), நான்கு உன்­னத உண்­மைகள் (Noble truths), எட்டு மடிப்­புப்­பாதை (Eight foldparth), ஐந்து கட்­ட­ளைகள் (Precepts) ஆகி­ய­வற்றைக் கொண்­டது. புத்தா, தர்மா (போத­னைகள்) சங்கா (சமூகம்) என்­பன மூன்று நகை­க­ளாகும்.
* நான்கு உன்­னத உண்­மை­க­ளை துன்­பங்­களின் பொது­மைப்­பாடு, துன்­பங்­களின் தோற்றம், துன்­பங்­களை விட்டும் உயிர்த்­தெ­ழுதல், துன்­பங்­களை விட்டு மீளு­வ­தற்­கு­ரிய வழிகள் என வகைப்படுத்தலாம்.
* புத்த தர்­மத்தின் வழி, எட்டு வழிப்­பாதை பின்­வ­ரு­மாறு வகைப்­ப­டுத்­தப்­படும்.
Ditthi : உண்மைப் பொருளை அடைதல். ஒன்று எப்­படிக் காணப்­ப­டு­கின்­றதோ அவ்­வாறே அதன் உண்மை வடிவில் நோக்­குதல்.
Sankappa: உலகைத் துறத்தல் சுதந்­திரம் தீங்­கில்­லாத மனம் என்­ப­வற்றை அடைய வேண்­டு­மென்ற குறிக்கோள்.
Vaca: உண்­மையையே பேசு­வ­தோடு தீங்­கி­ழைக்­காத வகை­யிலும் பேசுதல்.
Karma : தீங்­கில்­லாத வகையில் செயற்­பா­டு­களை அமைத்தல்.
Ajivana: தீங்கு பயக்­காத வாழ்க்­கை­யையே வாழுதல்.
Vayayama : முன்­னேற்­றத்­திற்­கான முயற்­சி­களில் ஈடு­ப­டுதல்.
Sati: தெளி­வான உணர்­வுடன் படைப்­பு­களை/ உல­கத்தை பார்ப்­ப­தற்­கான விழிப்­பு­ணர்வைக் கொண்­டி­ருத்­த­லோடு ஆசைகள், வெறுப்­புகள் ஆகி­ய­வற்றை விடுத்து ஒன்றை அதன் உண்மை நிலையில் பார்த்தல்.
Samadhi: சரி­யான தியா­னமும் மன ஒரு நிலைப்­ப­டுத்­தலும்.
* ஐந்து கட்­ட­ளைகள் விப­ரிக்கும் புத்த தர்­மங்­க­ளா­வன:
1. அநி­யா­ய­மாக எந்த உயி­ரையும் கொல்­லாதே. அனைத்து படைப்­பி­னங்­க­ளு­டனும் அன்­பாக நடந்­துகொள்.
2. எதையும் திரு­டாதே எடுப்­பதை விட அதி­க­மாகக் கொடு.
3. பொய் சொல்­லாதே நேர்­மை­யா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் நடந்து கொள்.
4. தவ­றான பாலியல் நடத்­தை­களில் ஈடு­ப­டாதே.
5. மது மற்றும் ஏனைய போதைப் பொருள்­களை பயன்­ப­டுத்­தாதே.
மது­பா­வனை புத்­த தர்­மத்­திற்கு முற்­றிலும் எதி­ரா­னது. ஏனெனில் அது மனதை ஒரு­மிப்­ப­தற்கும் விருத்தி செய்­வ­தற்கும் இடை­யூ­றாக அமை­வ­தா­லாகும். தியானம், அறி­வு­டைமை, நீதி­யு­டைமை ஆகி­ய­வற்றை வாழ்க்­கையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதன் மூலம் உண்­மை­யான இன்­பத்தை உணர்­வ­தற்­கான உள்­ளகத் திறனைப் பெற­மு­டியும் என பௌத்­தர்கள் நம்ப வேண்டும்.
உட­லிற்கு தீங்கு விளை­விக்கும் எந்­த­வொரு போதைப் பொரு­ளையும் (மது­பானம், சிகரட் மற்றும் ஏனைய போதைப் பொருட்கள்) எந்­த­ள­வேனும் உள்­ளெ­டுக்­கவே கூடா­தென கெள­தம புத்தா தன்னைப் பின்­பற்­று­வோர்­களுக்கு கட்­டளை இட்­டுள்ளார். இப்­பொ­ருட்கள் மனி­தனின் நிலை­யான மனோ நிலையைப் பாதிப்­பதால் புத்த நம்­பிக்­கை­க­ளுக்கு எதி­ரா­னது. புத்­தர்கள் உள்­ளத்தை ஒரு பொக்­கி­ச­மா­கவே கரு­து­வதோடு மனதைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக தியா­னங்கள் மூலம் விடா­மு­யற்சி செய்ய வேண்டும்.
பௌத்­தர்கள் ஐந்து கட்­ட­ளை­க­ளையும் நற்­பண்­பு­களின் வரை­ய­றை­க­ளா­கவே பின்­பற்­று­கின்­றனர். அதில் ஒரு கட்­டளை மது மற்றும் ஏனைய போதைப்­பொருள் உள்­ளெ­டுத்­தலை முற்­றிலும் விலக்­கு­மாறு எடுத்­து­ரைக்­கி­றது. இலங்கை போன்ற அதி­க­ள­வான பெளத்­தர்கள் வாழும் நாடு­களில் கூட சிறிய அள­வி­லான பெளத்­தர்கள் தான் புத்­த­ம­தத்தை முழுமையாக பின்­பற்­று­கி­றார்கள். புத்­த­ரது போத­னை­க­ளுக்கு எதிர்­மா­றாக அதி­க­ள­வான இலங்கை பெளத்­தர்கள் மது­பா­ன­த்தை உள்­ளெ­டுக்­கி­றார்கள்.
தெற்­கி­லங்­கையின் நகர்­ப்புறம் ஒன்றில் (மொத்­த­மா­தி­ரி­ய­ளவு - 783) நடாத்­தப்­பட்ட ஆய்வு பின்­வ­ரு­மாறு காட்­டு­கி­றது. 10 வய­திற்கு மேற்­பட்­ட­வர்­களில் 5% பெண்­களும் 52.5% ஆண்­களும் மது­பா­வ­னை­யா­ள­ரா­க­வுள்­ளனர்.
வய­த­டிப்­ப­டையில் 40 முதல் 50 வய­திற்­குட்­பட்­ட­வர்­களே அதி­க­ளவில் மது­பா­விப்­ப­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர். இன­ரீ­தி­யாகப் பார்க்கும் போது அதி­க­ள­வான மது­பா­வனை தமிழ் சமூ­கத்தின் இடை­யேயும் (43%) அதனைத் தொடர்ந்து சிங்­கள சமூ­கத்தின் இடை­யேயும் (32% ) காணப்­ப­டு­கின்­றது. ஆனால் முஸ்லிம் சமூ­கத்தின் இடையே (9%) மிகக் குறைந்­த­ள­வி­லேயே அறி­யப்­பட்­டுள்­ளது. (மூலம்: மது பற்­றிய உல­க­ளா­விய தகு­தி­ய­றிக்கை 2004 WHO)
மித­மான அளவில் மது­பானம் அருந்­துதல் ஏற்றுக் கொள்­ளப்­ப­டத்­தக்­க­தென புத்த மதத்தைப் பற்­றிய குறை­பா­டான அறி­வுள்ள சிலர்  கூறுகின்றனர். எந்த அள­வி­லேனும் மது­பானம் அருந்­து­தலை புத்தர் ஒரு போதும் அங்­கீ­க­ரிக்­க­வே­யில்லை. ஏனெனில் அது மனதின் ஒரு சீர்த்­திட நிலையை மித­மான அளவில் கூடப் பாதிக்­கி­றது.
மன ஒரு­மைப்­பா­டா­னது புத்த தர்­மத்தின் மைய­மாகும். இத்­தத்­துவம் உட­லிலும் மன­திலும் நடை­பெறும் மாற்­றங்­களை நிலை­யாக பேணு­வதில் முக்­கி­ய­மா­னது. பல­வா­றான உணர்­வுகள் தோன்­றும்­போது அதை அறி­வு­பூர்­வ­மாகக் கையா­ளு­வ­தற்கு ஒவ்­வொரு தனி­ம­னி­த­னிற்கும் மன ஒரு­மைப்­பாடு முக்­கி­ய­மா­ன­தாகும். ஆனால் மது பா­வ­னை­யா­னது மன ஒரு­மைப்­பாட்டை அழிப்­ப­தோடு இக் கொள்­கையைப் பேணு­வதை இய­லாத­தாக்­கு­கி­றது.
மது­பா­வ­னை­யுடன் முரண்­படும் மற்­று­மொரு பெளத்த போத­னைதான் Karma ஆகும். ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் Karma இற்கு அவ­ர­வரே பொறுப்­பா­ளர்­க­ளென புத்தர் போதிக்­கிறார். ஒரு­வ­ரு­டைய செயற்­பா­டுகள், பேச்சு, எண்­ணங்கள் ஆகி­ய­வற்­றிற்கு அவரே பொறுப்­பா­ளி­யென Karma கூறு­கி­றது. மது­பா­வ­னை­யா­னது இவ்­வி­ட­யங்­களில் பொறுப்­பற்ற தன்­மை­யையே உரு­வாக்­கு­கி­றது. மதுப்­பா­வ­னை­யி­லுள்­ள­வர்கள் எதிர்­ம­றை­யான Karma வையே உரு­வாக்­கு­கிறார்கள்.
உல­க­ளா­விய மோகங்­களை விட்டு வெளி­வ­ரு­தலே உண்­மை­யான சந்­தோசத்தைத் தோற்­று­விக்கத் தக்­க­தென்­பதே புத்த போத­னை­யாகும். ஆனால் மது ­பா­வ­னை­யா­ளர்கள் தமது அனைத்து உணர்­வு­க­ளையும் மது­வி­டமே ஒப்­ப­டைத்­து­வி­டு­கி­றார்கள். தியா­னங்­களின் மூல­மாக இந்த உல­க­ளா­விய மோகங்­களை விட்டு வெளி­வ­ரு­தலே புத்த போத­னை­யாகும். பலர் வாழ்க்­கையில் வரும் பிரச்­சி­னை­களை மூடி மறைப்­ப­தற்கு மதுவைப் பாவிக்­கின்­றனர். ஆனால் வாழ்வின் கஷ்­டங்­க­ளையும் சவால்­க­ளையும் எதிர் நோக்­கு­மாறே புத்த மதம் போதிக்­கி­றது.
வாழ்க்­கையைக் கற்­றுக்­கொள்­வ­தற்கும் தம்மை வளர்த்துக் கொள்வதற்கும் உரிய சந்­தர்ப்­பங்­க­ளாக பிரச்­சி­னை­களைப் பார்க்­கு­மாறு புத்­த­மதம் வேண்டி நிற்­கி­றது. தியா­னங்­க­ளி­னூ­டாக ஒவ்­வொரு தனி­ம­னி­தனும் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வ­தற்கும் சவால்­களை உறு­தி­யாக சமா­ளிப்­ப­தற்கும் முடியும். ஆனால் மது­வா­னது ஒரு செயற்­கை­யான உண்­மை­யற்ற சூழ்­நி­லை­யையும் சந்­தோ­சத்­தை­யுமே உரு­வாக்­கு­கி­றது. மேலும் மது­பா­வ­னை­யா­னது மனதை ஒரு நிலைப்­ப­டுத்­து­வதில் பாரிய பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­து­கி­றது. இது புத்த தர்­மத்­திற்கு முற்­றிலும் எதி­ரா­ன­தாகும்.
இஸ்லாம் மார்க்­கமும் மது­பா­வனை தொட ர்பில் இதே கொள்­கை­யையே கொண்­டி­ருக்­கி­றது. இஸ்லாம் மார்க்­கத்­திலும் ஆரோக்­கி­யத்­திற்கும் மனித நன்­ந­டத்­தைக்கும் தீங்கு விளை­விக்கும் அனைத்தும் புத்­த­ம­தத்தைப் போன்றே தடை­செய்­யப்­பட்­டுள்­ளது. ஆகவே இஸ்லாம் மது­பா­வ­னையில் எந்­த­வொரு விட்டுக் கொ டுப்பும் இல்­லாத நிலையைப் பேணு­வ­தோடு சிறி­ய­ளவு பாவ­னையைக் கூட முற்­றிலும் தடை­செய்­துள்­ளது. மது­வா­னது எச்­சந்­தே­க­மு­மின்றி உட­லுக்கும் உள்­ளத்­திற்கும் பாரிய பாத­கங்­களை உரு­வாக்­கு­கி­றது. இது உள்­ளத்தை மூடி­ம­றைப்­ப­தோடு நோய்­களை உரு­வாக்­குதல், பண­வீண்­வி­ரயம், தனி­ம­னி­தர்கள், குடும்­பங்கள், சமூ­கங்கள் என அனைத்து மட்­டங்­க­ளையும் பாதிக்­கி­றது. ஆய்­வா­ளர்கள் மது­பா­வ­னைக்கும் சூதாட்­டத்­திற்­கு­மி­டையே உறு­தி­யான தொடர்­புகள் உள்­ள­தாக கூறு­கி­றார்கள். இது தீர்­மா­ன­மெ­டுப்­பதைப் பாதித்தல், தீமை­யி­லி­ருந்து வில­கி­யி­ருப்­பதைத் தடுத்தல் என்­ப­வற்­றோடு சூதாட்டம் போன்ற ஒரு­வரை அழித்து இன்­னு­மொ­ரு­வரை வாழ­வைக்கும் தீய செயல்­களில் ஈடு­ப­டு­வதைத் தூண்­டு­கி­றது. அல்லாஹ் குர்­ஆனில் கூறு­கிறான். ''போதைப் பொருட்­களும் சூதாட்­டங்­களும் ஷைத்­தா­னி­ட­மி­ருந்து வரும் வெறுக்­கத்­தக்க விட­யங்­க­ளாகும். மேலும் அவற்­றி­லி­ருந்து தவிர்ந்து கொள்­ளு­மாறும் கட்­ட­ளை­யி­டு­கிறான். (குர்ஆன் 5:90)"
மது­பா­வ­னை­யா­னது புற்­று­நோயை ஏற்­ப­டுத்­து­வதில் பிர­தான கார­ணி­யாகும். இது வாய், தொண்டை, குரல்­வளை, களம், ஈரல் மற்றும் மார்­ப­கப்­புற்று நோய்க்­கான கார­ணி­யாகக் காணப்­ப­டு­கி­றது. கர்ப்­ப­கா­லத்தில் மது­பா­வித்­தலால் Fetal alcohol syndrome என்ற நிலை­மை ஏற்­ப­டு­கி­றது. இதன்­போது குழந்தை நிறை குறை­வா­ன­தாகக் காணப்­ப­டு­வ­தோடு விகா­ர­ம­டைந்த முகத் தோற்­றத்­தையும் சிறி­ய­ள­வி­லான கண்­க­ளையும் எண்­ணிக்­கையில் குறைந்த கை, கால் விரல்­க­ளையும் குறை­பா­டுள்ள உள்­ளு­றுப்­பு­க­ளையும் கொண்­டி­ருக்கும். மேலும் மன­வி­ருத்தி குறைந்­ததும் கற்றல் குறை­பா­டுள்­ள­து­மான குழந்­தை­களைத் தோற்­று­விக்­கி­றது.
மது­வா­னது மிகக் கொடிய விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­னாலும் கூட அநே­க­மான நாடு­களில் அது சட்­ட­ரீ­தி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்டுள்­ளது. மேலும் மது­பா­வ­னை­யா­னது உல­க­ளா­விய ரீதியில் அதி­க­ரித்துக் கொண்டே செல்­கி­றது.
விபத்து நேரத்தில் 89% ஆன சார­தி­களும், 28.1% ஆன பாத­சா­ரி­களும் மது­பா­வ­னைக்­குட்­பட்­ட­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர். இரவு நேரங்­களில் நடை­பெறும் விபத்­துக்­களில் 67.4% ஆனவை மது­பா­வ­னையால் ஏற்­பட்­ட­வை­யாகும்.
போக்­கு­வ­ரத்து பொலிஸ் திணைக்­க­ளத்தின் தகவல் படி மது­பா­வ­னைக்கு அடி­மை­யாதல், மது­பா­வ­னையால் மன நோய்க்கு உட்­ப­டுதல் என்­ப­வற்­றினால் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை 1998-- இலிருந்து 1999 இற்குள் 4436 ஆல் அதி­க­ரித்­துள்­ளது. (மூலம்: மது­ பற்றிய உல­க­ளா­விய தகுதி அறிக்கை WHO)
மது­பா­வ­னை­யா­னது மன ஒரு­மைப்­பாட்டைப் பாதிப்­ப­தோடு பாத­க­மான நடத்­தை­க­ளையும், மோச­மான செயற்­பா­டு­க­ளையும் உரு­வாக்­கு­கி­றது. இது மக்­க­ளி­டையே பகை­மை­யையும், வெறுப்­பையும் உரு­வாக்­கு­வ­தோடு கட­வுளை நினைவு கூறு­வ­தையும், வணங்­கு­வ­தையும் விட்டு தூர­மாக்­கு­கி­றது. மேலும் இது சட்­ட­வி­ரோ­த­மான பாலியல் நடத்­தை­களில் ஈடு­ப­டவும் தூண்­டு­கி­றது. மது பாவ­னை­யா­னது அவ­மானம், குற்ற உணர்வு போன்றவற்றை உரு­வாக்­கு­வ­தோடு அறி­வையும் மந்­த­மாக்­கு­கி­றது. இது இர­க­சி­யங்கள் மற்றும் தவ­று­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கும் ஏது­வாக அமை­கி­றது.
நிச்­ச­ய­மாக ஷைத்தான் நாடு­வ­தெல்லாம் மது­விலும் சூதாட்­டத்­திலும் அதன் மூலம் உங்­க­ளுக்­கி­டையில் விரோ­தத்­தையும், வெறுப்­பையும் உண்டு பண்­ணவும் அல்­லாஹ்வை நினைவு கூரு­வதை விட்டும், தொழு­கையை நிறை­வேற்­று­வதை விட்டும் உங்­களை அவன் தடுப்­ப­தை­யு­மே­யாகும். ஆகவே, அவை­க­ளி­லி­ருந்து நீங்கள் வில­கிக்­கொள்­கி­றீர்­களா? (குர்ஆன் 5:91)
விசு­வாசங் கொண்­டோரே! நிச்­ச­ய­மாக மது வும், சூதாட்­டமும் வணக்­கத்­திற்­காக நடப்­பட்­டுள்­ள­வை­க­ளான சிலை­களும், குறி­பார்க்கும் சூதாட்ட அம்­பு­களும் ஆகிய இவை­யாவும் ஷைத்­தா­னு­டைய செய­லி­லுள்ள அரு­வ­ருக்­கத்­தக்­க­வை­யாகும். ஆகவே, இவை­களைத் தவிர்த்துக் கொள்­ளுங்கள்; அதனால் நீங்கள் வெற்றி பெறு­வீர்கள். (குர்ஆன் 5:90)
குர்­ஆ­னா­னது முழு­ம­னித இனத்­திற்கும் அரு­ளப்­பெற்ற ஒரு வழி­காட்­டி­யாகும். இது படைப்­பி­னங்­க­ளுக்­கான படைப்­பா­ளனின் வழி­காட்­டல்­களைக் கொண்­டது. அல்லாஹ் மது­வையும், சூதாட்­டத்­தையும் இணை­வைத்­த­லுக்கு ஒப்­பான செய­லாகக் கூறி­யுள்ளான்.
தெற்­கி­லங்­கையின் நகர்­ப்புறம் ஒன்றில் நடத்தப்பட்ட மேற்படி ஆய்வின் முடிவுகளின் ­படி சிங்­க­ள­வர்­களும், தமி­ழர்­க­ளுமே புத்த தர்­மத்தின் முக்­கி­ய­மான சில அம்­சங்­க­ளுக்கு (கட்­ட­ளைகள், Karman) எதி­ராகச் செயற்­ப­டு­கின்­றனர். நாங்கள் மது­பா­னத்தை இலங்­கையில் அங்­கீ­க­ரிப்­பதன் மூல­மாக மனி­தர்­களைக் கொல்­ல­மு­டி­யாது. ஏனெனில் புத்த தர்­மத்தின் முத­லா­வது கட்­ட­ளையே ‘‘உயிர்­களை அநி­யா­ய­மாகக் கொள்ளாதே’’ என்பதாகும். ஆனால் உயிர்களிலெல்லாம் மிகப் பெறுமதியான உயிர் மனித உயிராகும். மேலே கூறப்பட்ட பலவகையான உடற்குறைபாடுகளுக்கும், நோய்களுக்கும் பிரதான காரணி மதுவாகும். மேலும் இது குடும்பங்களைப் பாழ்படுத்தி சமூகக் கட்டமைப்புகளைச் சிதைத்து நாட்டின் அபிவிருத்தியையும் சீர்குலைக்கின்றது.
முஸ்லிம்களாகிய நாங்கள் ஒரு போதும் மதுபானத்திற்கு ஹலால் சான்றிதழ் வழங்கவில்லை. மிகக் கூடிய முஸ்லிம்கள் (91%) மதுபாவனைக்கு எதிரானவர்களே. நாங்கள் இஸ்லாம், பெளத்தம், இந்து என ஒரு போதும் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையான விடயங்களில் ஒன்றாகச் செயற்படுவதற்கும் வேற்றுமையான விடயங்களில் நேர்மையான சிந்தனையை எடுத்துரைக்கவும் ஒரு போதும் தயங்குவதில்லை. ஏன் நாங்கள் அனைவருமாக சேர்ந்து மதுபாவனையை முற்றிலுமாக எமது தாய்நாட்டிலிருந்து துடைத்தெறிய முடியாது. முஸ்லிம்களாகிய நாங்கள் இலங்கையைப் பற்றிய ஒரு வரலாற்றை எழுதுவதற்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் மதுபாவனைக்கு ஹராம் சான்றிதழ் வழங்குவதன் மூலமாக
எமது தேசத்திலிருந்து மதுவை முற்றிலுமாக இல்லாதொழித்து இலங்கையை ஆசியாவின் அதிசயமாக மாற்றுவதற்காக பௌத்தர்களை, சிங்களவர்களை அழைக்கிறோம். சிறிய அளவிலும் சரி, பெரிய  அளவிலும் சரி மதுபாவனைக்கு அரசு அங்கீகாரம் வழங் குவதற்கு எதிராக நாங்கள் பதாதைகளைத் தூக்குவதானாலும் சரி, சிங்கக் கொடியை தூக்குவதானாலும் சரி என்றும் தயாராக இருக்கிறோம்.
முஸ்லிம்கள் என்றென்றும் சக இன மக்களுடன் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடனும் நடந்து கொள்ளவே விரும்புகின்றனர் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்.


ஸகி அஹமட்,
மருத்துவ பீடம், யாழ் பல்கலைக்கழகம்

2 comments:

  1. இதனை சிங்களத்தில் மொழி மாற்றம் செய்து சிங்களவர்கள் வாசிக்க செய்யவும்

    ReplyDelete
    Replies
    1. ஆம் இன்ஷா அல்லாஹ்,சிங்கள மொழி பெயர்ப்பில் திறமை வாய்ந்தவர்கள் இதனை செய்வார்களாயின் நாம் பிரசுரிக்கத் தயாராக உள்ளோம்.

      Delete