தங்களுக்குள் மோதிக்கொள்ளும் பொதுபல சேனா அமைப்பின் தேரர்கள்
பொதுபல சேனா தலைமையகத்துக்கு முன்னால் அந்த அமைப்பைச் சேர்ந்த பிக்கு ஒருவர் தம்மைத் தாக்கியதாக மலவ்வே கல்யாண தர்ம தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொதுபல சேனா தேரர்களின் குலம் தொடர்பான பிரச்சினைகளையடுத்தே தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குலபேதத்தை காரணம் காட்டி ஏற்கனவே தானிருந்த விகாரையிலிருந்து ஞானசார தேரர் காடைத்தனத்தின் மூலம் தன்னை அச்சுறுத்தி வெளியேற்றியதாகவும் மலவ்வே கல்யாண தர்ம தேரர் தெரிவித்துள்ளார்.
குலத்தை கருத்திற்கொண்டு சாமனேர தேரர்களைப் பதிவுசெய்வது தொடர்பில் தலைமை பிக்குகளுடன் ஏற்பட்ட மோதலையடுத்து, பலாத்காரமாக தலையிட்ட ஞானசார தேரர் என்னை விகாரையிலிருந்து வெளியேற்றினார்.
சாமனேர தேரர்களுடன் இப்போது நான் அறையொன்றில் தங்கியிருப்பதாகவும், தங்களுக்கு வசிப்பதற்கு விகாரையொன்றை பெற்றுத்தருமாறு கோரியபோதே தாக்கப்பட்டதாக தேரர் மேலும் தெரிவித்தார்.
இத்தாக்குதல் காரணமாக குறித்த தேரர் பல் ஒன்றினை இழந்துள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கல்யாண தம்ம தேரர் இதுபற்றி குறிப்பிடுகையில், தன்னை தாக்கிய தேரரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.
Post Comment
No comments