முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு நாளுக்கு நாள் குறைகின்றமை கவலையளிக்கிறது - ஷபீக் ரஜாப்தீன்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து வருகின்றமை கவலையளிப்பதாக கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஷபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கட்சி தொடர்ந்தும் மௌனமாக இருந்தால் மு.கா மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த கட்சியாக மாறிவிடும் எனவும்அவர் குறிப்பிட்டார். 13ம் திருத்தச் சட்டம் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளநிலையில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைபாடு தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது. அன்றையதினம் 13ம் திருத்தச் சட்டம் குறித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரிஸின் நிலைபாடு மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மாகாண சபை முறைமையையும் மாகாண சபையின் காணி, பொலிஸ் அதிகாராங்களை இல்லாதொழிப்பதற்கும் மு.கா ஒரபோதும் இடமளிக்காது. இதேவேளை, பதவிகளை மட்டும் தக்க வைத்துக்கொள்வதற்காக எம்மால் அரசுடன் ஒட்டிக்கொண்டு இருக்க முடியாது. மக்களின் சமூக பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் மஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று தான் அரசியல் பீடத்தில் இருக்கிறது. எனவே முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்புகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு வேலைவாய்ப்புகளை முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுக்க முனையும் போது அதனை பெரும்பான்மையினர் தடுக்க நினைக்கின்றனர். அவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளையும் பெற்று தான் ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளையும் பெற்றுள்ளமையால் முஸ்லிம்களுக்கும் சேவைகளை செய்ய வேண்டும். மாறாக சிங்களவர்களுடன் சேவைகளை மட்டுப் படுத்தக் கூடாது.
இதேவேளை அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள்தொடர்பில் இக்கறை கிடயாது. அவர்களின் அரசியல் வாழ்வு முஸ்லிம்களின் அதரவு இல்லையென்றால் முடிந்துவிடும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் என்று வரும் போதும் அனைவரும் முஸ்லிம் காங்கிரஸ் மீது மட்டுமே கையை நீட்டுகின்றனர். அவ்வாறே அரசாங்கத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் பாராளுமன் உறுப்பினர்களும் நடந்துகொள்கின்றனர். அவர்களும் முஸ்லிம்களின் வாக்குகளினால் தான் பாராளுமன்றத்துக்கு வந்தார்கள் என்பதை புரிந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நன்மை பயக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post Comment
No comments