Breaking News

ராவண பலய அடாவடி: கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர்களை பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்

SLCRawanaS_600px1_13_06_10பௌத்த, அடிப்படைவாத ராவண பலய அமைப்பினரால், ஜெகோவா கிறிஸ்தவ சஞ்சிகைகளை விநியோகித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அடாவடித்தனமான   சம்பவமொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

ஜெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ மதப்பிரிவினர், தமது சமய சஞ்சிகைகளின் சிங்கள மொழிப் பிரதிகளை முல்லேரியா பகுதியில் விநியோகித்துக் கொண்டிருந்த போதே ராவண பலய அமைப்பைச் சேர்ந்த பிக்குகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவ மதப் பரப்புரைகளை மேற்கொண்டவர்களை வளைத்துப் பிடித்த, ராவண பலய அமைப்பின் தலைவர் சத்ததிஸ்ஸ தேரர், மற்றும் பௌத்த பிக்குகள், அவர்களை முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

ராவண பலயவின் தலைவர் சத்ததிஸ்ஸ தேரர் முல்லேரிய பொலிஸ் நிலையத்திற்குள் வைத்தே, கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர்களை பலமுறை எச்சரிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

இதேவேளை, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஜெகோவா கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

No comments