Breaking News

தேவாலயத்தில் தொழுகை நடக்கிறது! நம்பலாமா?

photo_140 இலங்கை முஸ்­லிம்கள் தங்­க­ளுக்கே உரித்­தான பள்­ளி­வா­சல்­களில் கூட தொழுகை நடத்­து­வ­தற்கு எதிர்ப்­பு­களும் மறுப்­பு­களும் தெரி­விக்­கப்­பட்டு­வரும் நிலையில் இங்­கி­லாந்தில் உள்ள தேவா­ல­யம் ஒன்று தமது வளாகத்தில் தொழுகை நடத்த முஸ்­லிம்­க­ளுக்கு வாசலைத் திறந்து கொடுத்­துள்ள செய்தி நிச்­சயம் ஆச்­ச­­ரியம் தரும் ஒன்­று­தான்.

ஸ்கொட்­லாந்தின்  மூன்­றா­வது பிர­பல்யம் வாய்ந்த நக­ரான அபெர்­டீனில் உள்­ள சென்.ஜோன்ஸ் எபிஸ்­­கோபல் தேவா­ல­யமே வெள்ளிக்­கி­ழ­மை­களில் முஸ்­லிம்கள் தமது ஆல­ய வளா­க­த்தில் ஜும்ஆ தொழுகை நடத்­து­வ­தற்கு தானாகவே முன்வந்து அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சென்.ஜோன்ஸ் தேவா­ல­யத்­திற்கு மிக அருகில் இருக்கும் செய்யத் ஷா முஸ்­தபா ஜாமிஆ மஸ்ஜித் மிகவும் சிறிய பரப்­ப­ளவைக் கொண்­ட­தாகும். இங்கு வெள்ளிக் கி­ழ­மை­களில் அதி­க­மானோர் ஜும்ஆ தொழு­கைக்கு வரு­வதால் வீதி­யி­லேயே தொழுகை நடத்த வேண்டி ஏற்­ப­டு­வது வழக்கம். முஸ்­லிம்கள் இவ்­வாறு மழை­யிலும் குளி­ரிலும் வீதியில் நின்று தொழு­வதைக் கண்­ணுற்று கவலை கொண்ட இந்த தேவா­­ல­யத்தின் தலைமை மத­குரு ஐசாக் பூபாலனே இவ்­வாறு முஸ்­லிம்­க­ளுக்­காக தேவா­ல­யத்தின் கத­­வு­களைத் திறந்து கொடுத்­த­ முன்மாதிரிக்குச் சொந்தக்காரராவார்.

தான் ஏன் இவ்­வா­றா­ன­தொரு வர­லாற்றுப் புகழ்­மிக்க தீர்­மா­னத்தை மேற்­கொண்டேன் என்­ப­தற்­கான கார­ணத்தை அவரே கூறு­கி­றார்:

வெள்ளிக்கி­ழ­மை­களில் இந்தப் பள்­ளி­வாசல் மக்­களால் நிரம்பி வழியும். மக்கள் மழை­யில் நனைந்து கொண்டும் குளிரில் நடுங்கிக் கொண்டும் தொழுது கொண்­டி­ருப்­ப­தை அவ்­வ­ழியால் செல்லும் நான்  அடி­க்­கடி அவ­தா­னிப்­ப­துண்­டு. பனிக் காலத்தில் வீதி ஓர­மாக நின்று தொழு­வதை பார்க்­கவே எனக்கு கஷ்­ட­மாக இருக்கும். முஸ்­லிம்கள் தொழும்­போது அவர்­க­ளது கால்­களும் கைகளும் நிலத்தில் படு­வ­துண்டு. இவ்­வாறு அவர்கள் வீதி­யோ­ரத்தில் கரடு முர­டான நிலத்தில் கால்­க­ளையும் கைக­ளையும் பதிப்­பது  எனக்கு மிகவும் கஷ்­ட­மா­க­வி­ருந்­தது. 

எமது தேவா­ல­ய­மா­னது பள்­ளி­வா­ச­லுடன் ஒப்­பி­டு­கையில் மிக­வும் விசா­ல­மா­னது. வெள்ளிக்கி­ழ­மை­களில் குறித்த நேரத்தில் தேவா­ல­யத்தில் மக்கள் கூடு­வ­தில்லை. அந்த நேரத்தில் பல அறைகள் வெற்­றி­ட­மா­கவே இருக்கும். 

எமது அய­ல­வர்கள் கஷ்­டப்­ப­டும்­போது நாம் அதனைப் பார்த்­துக் கொண்­டி­ருக்­க ­மு­டி­யாது. என­வேதான் முஸ்­லிம்­க­ளுக்கு தேவா­ல­யத்தின் கத­வு­க­ளைத் திற­ந்து கொடுப்­பதே சிறந்­தது எனத் தீர்­மா­னித்தேன். இது­பற்றி தேவா­லய நிர்­வாகத்­துடன் கலந்­து­ரை­யா­டி­ய­போது முதலில் சிலர் இது நமது பிரச்­சினை அல்­லவே என்­றார்கள். என்னைப் பொறுத்­த­வ­ரையில் இது மிகப் பெரும் பிரச்­சி­னை­யாகும். அவர்கள் கஷ்­டப்­ப­டு­வதை நான் எனது கண்­களால் பார்க்­கிறேன். அய­ல­வர்­க­ளோடு நேச­மாக நடக்­கும்­படியே பைபிள் கூறு­கி­றது. பைபிளின் வழி­காட்­டல்­களை புறக்­க­ணித்து எம்­மால் நடக்க முடி­யா­து.

வணக்க வழி­பாட்­டில் ஈடு­ப­டு­வது ஒன்றும் தவ­றான விட­ய­மல்ல. வணக்க வழி­பாட்டை ஊக்­கு­விப்­பதே எனது கட­மை­யாகும். இந்த உதவி மதம் என்­ப­தையும் தாண்டி மனி­தா­பி­மா­னத்தின் அடிப்­ப­டையில் அமைந்­தது என்­­பதே இங்கு முக்­கி­ய­மா­ன­தாகும். நாம் மதத்தால் வேறு­பட்­டி­ருப்­பினும் மனிதர்கள் என்­ற­வ­கையில் நாம் எல்­­லோரும் ஒன்­றே.

கிறிஸ்­த­வர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையில் உறவுப் பாலத்தைக் கட்டி­­யெ­ழுப்ப வேண்டும் என்­பது எனது நீண்ட நாள் ஆசை­யாகும். அதற்­கான சிறந்த சந்­தர்ப்­ப­த­மாக நான் இதனைப் பயன்­ப­டுத்திக் கொண்­டேன். 

இது­பற்றி முதன் முதலில் செய்யத் ஷா முஸ்­தபா ஜாமிஆ மஸ்ஜித் பிர­தம இமாம் அஹ்மத் மெகார்­பியிடம் சொன்­ன­போது அவர் கூட இதில் தயக்கம் காட்­டினார். அவரது தயக்கம் நியா­ய­மா­னது. இதற்கு முன்னர் இவ்­வா­றான ஒரு முன்­மா­திரி இல்­லா­த­தால்தான் இதனை ஏற்றுக் கொள்­வது கடி­ன­மா­க­வுள்­ளது. ஆனால் அவர்கள் இதனை ஏற்றுக் கொண்­ட­போது அது எமக்­கி­டை­யி­லான உறவில் பெரும் நேர்­மைய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திற்­று.

நான் இந்­­தி­யா­வில் பிறந்து வளர்ந்­த­வன். நான் வளர்ந்த சூழலில் முஸ்­லிம்­களே அதிகம் வாழ்ந்­தார்கள். அதனால் அவர்­க­ளது மத கலா­சா­ரம் பற்றி நான் அதிகம் அறிந்து வைத்­தி­ருக்­கிறேன். இதுவே இன்று இங்­­கி­லாந்தில் அவர்­க­ளோடு நேசக்கரம் நீட்ட உத­வி­ பு­ரிந்­தி­ருக்­கி­றது என்­பதை நினைக்­கையில் மகிழ்ச்­சி­யா­­க­வி­ருக்­கி­ற­து என்கி­றார்.

இதற்கு முன்பிருந்­தே இந்த தேவா­ல­யமும் பள்­ளி­வா­சலும் ஒன்­றோடு ஒன்று மிகவும் நட்­பு­ற­வு­ட­னேயே தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றன. 2010 கிறிஸ்­ம­ஸின்­போது பள்­ளி­வா­ச­லிலும் உண­வுகள் வழங்­கப்­பட்­ட­தோடு நிகழ்ச்­சி­களும் இடம்­­பெற்­றன. அதே­போன்று  செப்­டெம்பர் 11 தாக்­கு­தலின் 10 ஆண்­டுகள் நிறை­­வை­­யொட்டி அதில் இறந்­த­வர்­களை நினை­வு­கூ­ரும் வகையில் இப் பள்­ளி­வா­சலும் தேவா­ல­யமும் இணைந்து நிகழ்ச்­சி­களை நடத்­தின. இதில் இஸ்­லா­மிய மற்றும் கிறிஸ்­தவ சமய பிரார்த்­த­னை­களும் இடம்­பெற்­ற­ன.

அமெ­ரிக்­கா­வில் சில தேவா­ல­யங்­களில் ஏலவே தொழு­கைகள் நடக்­கின்­ற­போ­திலும் இங்­கி­லாந்தில் இதுவே முதல் தடவை என சென்.ஜோன்ஸ் தேவாலய நிர்­வா­கிகள் தெரி­விக்­கின்­ற­­­னர். 2011 இல் அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநி­லத்தில் உள்ள இரு தேவா­ல­யங்கள் முஸ்­லிம்கள் தொழுகை நடத்த அனு­மதி வழங்­கி­ய­மை­யா­னது கடும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­­ருந்­த­மை இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தா­கும்.

நன்றி : விடிவெள்ளி

No comments