அடிமைத்தனத்திலிருந்து மீள்வதா இல்லையா என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்: ரணில்
அடிமைத்தனத்திலிருந்து மிள்வதா இல்லையா என்பதனை இந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளினால் மக்கள் மேலும் மேலும் அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். பவித்ராதேவி மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியதன் காரணமாக எலிசபெத் மகாராணி இலங்கை வர அச்சமடைந்துள்ளார்.
எலிசபத் மகாராணிக்குக்கூட நாட்டு மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் புரிகின்றது. அந்த கால அரசியல்வாதிகள் செல்வந்தர்களிடம் திருடி, ஏழைகளுக்கு வழங்கினர்.
தற்போதைய ராஜபக்ச அரசாங்கம் ஏழைகளிடமிருந்து திருடி, ஊழல் பேர் வழிகளுக்கு வழங்கி வருகின்றது என ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments