பிக்குவின் தீக்குழிப்பால் தலதா மாளிகைக்கோ, சாசனத்திற்கோ எந்த நன்மையும் கிட்டவில்லை..
தேரர் ஒருவர் தீக்குழித்ததால் தலதா மாளிகைக்கோ, பௌத்த சாசனத்திற்கோ, மஹா சங்கத்தினருக்கோ எவ்வித கீர்த்தியும் கிடைக்கவில்லை என தென் மாகான சபையின் ஐக்கிய மக்கல் சுதந்திர முன்னனி உறுப்பினர் பெத்தேகம் சமித தேரர் கூறியுள்ளர்.
தொடர்ந்தும் கருத்துக் கூறிய அவர், இந்த நிகழ்வு தடுக்கப் பட்டிருக்க வேண்டும். நான் தர்மாசனத்தில் இருந்து “பன” (தர்ம போதனை) செய்து கொண்டு இருந்தாலும் எழுந்து சென்று இதைத் தடுத்து நிறுத்தியிருப்பேன். என்றாலுன் இந்த நிகழ்வின் கட்சிகளை தொலைக் காட்சியில் பார்த்த போது அதிர்ந்து போனேன். இதனைத் தடுக்கக் கூடியதாக மிருந்தது. இதற்கு சில ஊடகவியளால்ர்களும் பதில் கூற வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்வுக்கு பின்னால் சிலரின் தூண்டுதல் இருப்பதாகவே தோன்றுகிறது. அவர்கள் நாட்டின் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப் பட வேண்டும் என நினைக்கிறேன். இது பிக்குகளுக்கு பெருமையடையக் கூடிய செயல் அல்ல. இந்த பிக்குவைக் காப்பாற்ற போராடியிருக்க வேண்டும். என்றாலு அது அந்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் இருந்த எவரும் அதனை செய்ய வில்லை. இது தர்மத்தின் அடிப்படையிலும் சட்டத்தின் அடிப்படையிலும் தவறான செயலாகும் என சமித் தேரர் மேலும் கூறினார்.
Post Comment
No comments