தேசிய பாதுகாப்பு தொடர்பில் விட்டுக்கொடுப்பு என்ற பேச்சுக்கு இடமே இல்லை - கோத்தபாய!
தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் தாம் தயாரில்லை என்றும், முன்னைய அரசுகள் செய்த தவறைத் தாம் மீண்டும் செய்யப் போவதில்லை என்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அடித்துக் கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கில் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை இராணுவத்தினரின் பிரசன்னம் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படைகளின் பிரசன்னம் ஒரு அற்பமான விடயம், ஆனால் அது தவிர்க்க முடியாதது. இருந்தபோதிலும் பல்வேறு தரப்புகளும், ஒரு பகுதி ஊடகங்களும், பாதுகாப்பு விவகாரங்களுடன் அரசியல் விளையாட்டு நடத்துகின்றன.
முன்னைய அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் விட்ட தவறுகளால் நாடு மிகக் கடுமையான விலைகளைக் கொடுத்துள்ளது. அதே தவறை மீண்டும் செய்வதற்கு நான் தயாராக இல்லை என்கிறார் கோத்தபாய. போருக்குப் பின்னர் வடக்கில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் இராணுவத் தலையீடுகளால் முழுமையான குடியியல் ஆட்சியை ஏற்படுத்துவதில் தடங்கல்கள் உள்ளதாக, குற்றச் சாட்டுகளைக் கூறுவோர், 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் படிப்படியாக இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வன்னியிலும் கூடப் படைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம். ஆயுதப்படைகளின் நிலை கொள்ளலானது, ஓர் அரசியல் விவகாரமாகவோ, எந்தவொரு வெளிநாட்டு சக்திகளின் கலந்துரையாடலுக்கான விவகாரமாகவோ இருக்கக்கூடாது. எத்தகைய நிலையை எதிர்கொள்வதற்கும் ஏற்ற தயார் நிலையில் ஆயுதப்படையினர் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மீண்டும் தீவிரவாத எழுச்சி ஏற்படுவதைத் தடுப்பதற்கான பலமான அரணாக ஆயுதப்படைகளின் நிலைகொள்ளல் அமைந்திருக்கும்.
யாழ்ப்பாணத்தில் படைகளின் நிலை கொள்ளலைச் சில அரசியல்வாதிகள் அரசுக்கு எதிரான பேரணிகளுக்கான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். அரசுக்கு எதிரான செயற்படும் அத்தகையவர்களில் ஒருவர் தான் அசாத் சாலி என்றும் கூறினார். முன்னைய அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் விட்ட தவறுகளால் நாடு மிகக் கடுமையான விலைகளைக் கொடுத்துள்ளது. அதே தவறை மீண்டும் செய்வதற்கு நான் தயாராக இல்லை என்கிறார் கோத்தபாய.
No comments