Breaking News

அஸாத் சாலியின் விடுதலைக்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் - அகில இலங்கை உலமா கவுன்சில்

ulama கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலியின் விடுதலைக்காக அனைத்து முஸ்லிம்களும் பொறுமையுடன் துஆ பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றி உலமா கவுன்சில் தலைவர் முபாறக் அப்;துல் மஜீத் மௌலவி தெரிவித்திருப்பதாவது,
முஸ்லிம் சமூகத்துக்கான குரலாக ஒலித்த அஸாத் சாலி பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை அதிர்ச்சியை தருகிறது.

இந்த விடயம் அனைத்து முஸ்லிம்களையும் பாரிய கவலைக்குள்ளாக்கியுள்ளது. நிச்சயம் அஸாத் சாலி நிரபராதி என விடுதலை செய்யப்படுவார் என்பதில் எமக்கு நிறையவே நம்பிக்கை உண்டு.

ஆயினும் அவரது விடுதலைக்காக அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து துஆ பிரர்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை உலமா கவுன்சில் முஸ்லிம்களை கேட்டுக்கொண்டுள்ளது.

No comments