தீக்குளிப்பை நாட்டுக்கே காட்டிய சுவர்னவாஹினி தவரை ஒப்புக்கொண்டது..!

fire-swarnawahiகடந்த வெசாக் தினத்தன்று தளதா மாளிகைக்கு முன்பாக போவத்தே இந்திர ரத்தின தேரர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்ட நிகழ்வு தொடர்பாக EAP ஊடக வளையமைப்பி முக்கியஸ்தர்களுடன் களந்துரையாடியதாகவும், அங்கு இலத்திரனியல் ஊடகங்களின் அறிக்கைகள் பற்றிய ஒழுங்கமைப்பின் முக்கியத்துவம் தொடர்பாக அரசின் சார்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது என்றும் ஊடக அமைச்சின் செயளாலர் சரித ஹேரத் கூறினார்.

அரசின் ஊடக முக்கியஸ்தர்களால் வெடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று சுவர்னவாகினி உரிமையாளர் ஜீவக எதிரிசிங்ஹ மற்றும் செய்திப் பிரிவின் பொறுப்பதிகாரி சமிந்த கருனாரத்ன ஆகியோர் கடந்த செவ்வாய்க் கிழமை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சின் செயலாளரை சந்தித்தனர்.

போவத்தே இந்திர ரத்தின தேரர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்ட நிகழ்வை முழு விபரங்களௌடனும் காட்ட்சிகளுடனும் வெளியிட்டமை தவறான காரியம் என சுவர்னவாஹினி குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளதாக ஊடக அமைச்சின் செயளாலர் கூறினார்.

பொறுப்புனர்வுடன் கூடிய செய்தி வெளியீடு தொடர்பான ஒழுங்கமைப்பு ஒன்று தொடர்பாக இலத்திரனியல் ஊடகங்கள் தங்களுக்கிடையில் ஒருமைப்பாடொறை உருவாக்கிக் கொள்வது சிறந்தது எனக் கூறிய சரித ஹேரத் அவர்கள் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சட்டதிட்டங்களைக் கொன்டுவருவதற்கு அரசிற்கு எவ்விதத் தேவையும் இல்லை என்று கூறினார்.

No comments