வட மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான தேரர்கள் தீக்குளிக்க தயார் - பொதுபல சேனா
அரசாங்கம் வட மாகாண தேர்தல் போன்றவற்றை நடத்தி, நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுக்க நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக தீக்குளிக்க போவத்தே இந்திரரத்ன தேரர் போன்ற ஆயிரக்கணக்கான தேரர்கள் தயாராக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்திரரத்ன தேரரின் உன்னதமான உயிர் தியாகத்தை தற்கொலை எனக் கூறி, அவமானம் செய்யக் கூடாது எனவும் மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிராக தேரர் உயிர் தியாகம் செய்ததாக கூறப்பட்ட போதிலும் தேசிய ரீதியிலும் பௌத்த சாசன ரீயிலும் 05 விடயங்களை முன்வைத்தே அவர் தனது உயரை தியாகம் செய்துள்ளார். எனினும் மாடுகள் அறுக்கப்படுவதை எதிர்த்து தேரர் தீக்குளித்துள்ளதாக ஊடகங்களில் பிரசாரம் செய்யப்பட்டமையானது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பாரிய அநீதி எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
Post Comment
No comments