தீக்குளிப்பு அரசியலால் சீண்ட முனையும் புதிய தந்திரம்

SRI LANKA-POLITICS-PROTESTஇலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக மேற்­கி­ளம்­பிய பௌத்த கடும்­போக்­கா­ளர்­களின் அச்­சு­றுத்­தல்கள் ஓர­ளவு தணிந்­து­விட்­ட­தா­கவே நாம் நம்­பி­யி­ருந்தோம். ஆனாலும் கடந்த வெள்ளிக்­கி­ழமை வெசாக் தினத்தில் பௌத்த பிக்கு ஒருவர் தீக்­கு­ளித்த சம்­ப­வமும் அதனைத் தொடர்ந்­துள்ள நாட்டு நிலை­மை­களும் நமது நம்­பிக்­கை­களை கேள்­விக்­குட்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­துள்­ளன.
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தமது போராட்­டத்தில் கற்­க­ளையும் சொற்­க­ளை­யுமே ஆயு­த­மாக எடுத்த பௌத்த பிக்­குகள் இன்று நெருப்பு மூட்டி தற்­கொலை செய்து கொள்­ளு­ம­ள­வுக்கு மாற்றம் கண்­டி­ருக்­கி­றார்கள். குறித்த தேரர் தானா­கவே தீ மூட்டிக் கொண்­டாரா அல்­லது அவ­ருக்கு யாரேனும் தீ மூட்­டி­விட்­டார்­களா எனும் கேள்­விக்கு இது­வரை உறு­தி­யான பதில் கிடைக்­கா­வி­டினும் இந்த நிகழ்வு மிகவும் பார­தூ­ர­மா­னது என்­பதில் சந்­தே­க­மில்லை.
இலங்­கையில் மாடுகள் அறுக்­கப்­ப­டு­வதை தடை செய்ய வேண்டும் என குறித்த தேரர் பல வரு­டங்­க­ளாக போராடி வரு­பவர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் இவர் ஓர் அர­சி­யல்­வாதி எனவும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அண்­மைக்­கால செயற்­பா­டு­களில் முன்­னின்­றவர் எனவும் தற்­போது ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யிட ஆரம்­பித்­துள்­ளன.
தீக்­கு­ளிப்பு அர­சியல் என்­பது இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் புதி­யது என்­றுதான் சொல்ல வேண்டும். ஆனால் தமி­ழ­கத்­திற்கு இது புதி­ய­தல்ல. இலங்கைத் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை வைத்து தமக்கு அர­சியல் ஆதாயம் தேடும் தமிழ் நாட்டு அர­சி­யல்­வா­திகள் பல இளை­ஞர்­களின் உயிர்­களை இப்­படி தீக்கு இரை­யாக்­கி­யி­ருக்­கி­றார்கள். அவ்­வா­றா­ன­தொரு துர­திஷ்­ட­வ­ச­மான அர­சியல் கலா­சாரம் இலங்­கை­யிலும் புகுந்­து­விட்­டதோ என்­பதே இன்று நம்முன் எழுந்­துள்ள அச்­ச­மாகும்.
பொதுக் கூட்டம் நடத்­தியோ ஊட­க­வி­ய­லாளர் மாநா­டு­களை நடத்­தியோ துண்டுப் பிர­சு­ரங்­களை விநி­யோ­கித்தோ பெரும்­பான்மை சிங்­கள மக்­களை தம் பக்கம் ஈர்க்க முடி­யாது. இவ்­வா­றான தீக்­கு­ளிப்­பு­களை மேற்­கொண்டு சில பிக்­கு­களை பலி கொடுத்­தால்தான் தமது இன­வாத மத­வாத அர­சியல் மக்கள் மத்­தியில் எடு­படும் என இந்த சக்­திகள் இப்­போது சிந்­திக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. அதன் முதற்­கட்ட வெளிப்­பா­டா­கவும் நாம் இந்த தீக்­கு­ளிப்பை பார்க்க முடியும்.
இந்த இடத்­தில்தான் முஸ்­லிம்கள் மிகக் கவ­ன­மாக நடந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். சிங்­கள மக்­களின் உணர்ச்­சி­களைத் தூண்டி அர­சியல் செய்­வ­தையே தமது பிர­தான நிகழ்ச்சி நிர­லாகக் கொண்­டுள்ள இவர்கள் அதற்­காக எவ்­வா­றான விலை­களைக் கொடுக்­கவும் முன்­வரக் கூடும். அதற்கு ஒரு­போதும் முஸ்­லிம்கள் பலிக்­க­டா­வா­கி­விடக் கூடாது.
கடந்த ஆறு மாதங்­க­ளாக மிகக் கொந்­த­ளிப்­பான சூழல் நில­விய போதிலும் முஸ்­லிம்கள் தரப்­பி­லி­ருந்து ஒரு கல் கூட சிங்­கள மக்­களை நோக்கி வீசப்­பட்­டி­ருக்­க­வில்லை. இந்த அமை­தியும் நிதா­ன­மும்தான் அவர்­களை தோல்­வி­ய­டையச் செய்­தது. அத­னால்தான் முஸ்­லிம்­களை மேலும் சீண்டிப் பார்க்க சிங்­கள மக்கள் நேசிக்கும் பௌத்த தேரர்­களின் உயிர்­களைப் பலி­கொ­டுக்க முயற்­சிக்­கி­றார்கள். இது விட­யத்தில் நாம் மிகத் தெளி­வாக இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.
தீக்­கு­ளிப்பின் விளை­வாக சில இறைச்சிக் கடைகள் தாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. மேலும் தாக்­கப்­படக் கூடும். இன்றேல் வேறு வித­மான எதிர்ப்­புகள் முன்­வைக்­கப்­படக் கூடும். அவ்­வா­றான சம­யங்­களில் முஸ்­லிம்கள் தரப்பில் நிதானம் தவ­றாது செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
ஏலவே சிவில் சமூகத் தலை­மைகள் இது­வி­ட­யத்தில் எவ்­வாறு ஒற்­று­மை­யா­கவும் விவே­க­மா­கவும் நடந்து கொண்­டார்­களோ அதே­போன்று இந்த கால­கட்­டங்­க­ளிலும் செயற்­ப­டு­வார்கள் என எதிர்­பார்க்­கிறோம். மக்­களும் அவர்­க­ளுக்குத் தேவை­யான ஒத்­து­ழைப்­பு­களை வழங்க வேண்­டி­யது அவ­சி­யமும் காலத்தின் கட்டாயத் தேவையுமாகும்.

நன்றி : விடிவெள்ளி

No comments