Breaking News

தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது!- பொதுபல சேனா

Bodu-Bala-Sena தமிழ் புலம்பெயர் மக்களுடன் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தியதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நோர்வே பிரஜை ஒருவரின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெற்றது.

தமிழ் புலம்பெயர் சமூகத்தை சந்திக்க வேண்டிய தேவை காணப்பட்டது. அண்மைய அமெரிக்க விஜயத்தின் ஊடாக இந்தத் தேவை நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது.

நாட்டுக்கு வெளியே இந்த நாட்டை நேசிக்கும் பல தேசப்பற்றாளர்கள் இருக்கின்றார்கள். துரதிஸ்டவசமாக அவர்கள் இந்த சமூகத்தில் இல்லை.

போரின் மூலம் வெற்றியோ தோல்வியோ கிடைக்காத காரணத்தினால், தமிழ் சகோதரர்களுடன் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதைய அரசாங்கம் வரையில் சகல அரசாங்கங்களும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன. அதனை ஓர் ஜனநாயக உரிமையாகவே பார்க்க வேண்டும்.

தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஜனநாயக உரிமை தமது அமைப்பிற்கு காணப்படுகின்றது.

நோர்வே அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments