Breaking News

ரமழானுக்குள் உன் கதை முடியும்; அஸ்வர் எம்.பி.க்கு கொலை அச்சுறுத்தல்!

1615554790az222அரச தரப்பு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வருக்கு தொலைபேசி மூலம் பல தடவைகள் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தகவலை அவரே ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தான் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் அதிகமான கொலை அச்சுறுத்தல்கள் கல்முனை பகுதியிலிருந்தே விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் தான் செயற்படுவதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த வருடம் ரமழான் பெருநாள் வரை அச்சுறுத்தல்காரர்கள் காலக்கெடு விதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“எனக்கு இறுதியாக ஏப்ரல் 19 அன்று வந்த தொலைபேசி அழைப்பு மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. எதிர்வரும் ரமழானுக்குள் உன் கதை முடியும் என மறுமுனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இது தொடர்பில் நான் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன்.

எனது கையடக்கத் தொலைபேசிக்கும் வீட்டிலுள்ள நிலையான தொலைபேசிக்குமே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் அழைப்புகள் வந்தன” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க, இரா சம்பந்தன் போன்றோர் உரையாற்றும்போது அஸ்வர் எம்.பி. குறுக்கீடு செய்து இடைஞல் ஏற்படுத்தியமை தொடர்பில் அவர் மீது விமர்சனங்களும் கண்டனங்களும் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையிலேயே அவருக்கு இக்கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது

No comments