Breaking News

ஹலால் விவகாரம்: இவர்கள் என்ன சொல்கிறார்கள்?


ஹலா­லுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களும், பிர­சா­ரங்­களும் தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் ஹலாலின் எதிர்­காலம் பற்றி சிந்­திக்க ஆரம்­பித்­துள்­ளது.

அரசின் பங்­காளிக் கட்­சி­யான ஜாதி­க­ஹெல உறு­ம­யவும், பொது பல­சே­னாவும் இந்­நாட்டில் ஹலாலை ஒழிப்­ப­தற்கு காலக்­கெடு விதித்­துள்­ளன. ஜாதி­க­ஹெல உறு­மய எதிர்­வரும் ஏப்ரல் மாத சிங்­கள, தமிழ் புத்­தாண்டு தினம் வரையும் காலக்­கெடு விதித்­துள்ள நிலையில் பொது­ப­ல­சேனா மார்ச் 31ஆம் திகதி வரை கால அவ­காசம் வழங்­கி­யுள்­ளது.

நாட்டில் ஹலால் மார்ச் மாதம் 31ஆம் திக­திக்கு முன்பு ஒழிக்­கப்­ப­டா­விட்டால் பொது­ப­ல­சே­னாவும் ஆத­ர­வா­ளர்­களும் உத்­தி­யோ­கப்­பற்­றற்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக மாறி ஹலாலை ஒழிப்­ப­தாக எச்­ச­ரித்­துள்­ளனர். ஜாதி­க­ஹெல உறு­மய ஏப்ரல் 14ஆம் திக­திக்கு முன்பு ஒழிக்­கப்­ப­டா­விட்டால் நாட்டில் ஒரு பாரிய கிளர்ச்சி வெடிக்கும் என பய­மு­றுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லையில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் முஸ்லிம் கவுன்­ஸிலும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையும் மற்றும் அர­ச­த­ரப்பு பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­களும் ஒன்­று­கூடி ஆலோ­சனை நடத்தி வரு­கி­றார்கள். பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சு, பாது­காப்பு அமைச்சு என்­பன இதில் கூடிய அக்­கறை செலுத்தி வரு­கின்­றன. ஹலால் விவ­கா­ரத்­திற்கு தீர்வு காண வேண்­டு­மாயின் அதனை அர­சாங்­கத்தின் பொறுப்பில்  ஒப்­ப­டைக்க வேண்டும் எனும் கருத்­தையும் தற்­போது சிலர் வலி­யு­றுத்தி வரு­கி­றார்கள். இந் நிலையில் ஹலால் சான்­றிதழ் வழங்கும் அதிகாரம் அரசாங்கத்திடமா? இன்றேல் ஜம்இய்யதுல் உலமா சபையிடமா? இருக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்ட சிலரின் கருத்துகளை விடிவெள்ளி வினவியது.

By: A.R.A.Fareel

vv_murshid mouவியாபார நிறுவனங்கள் ஹலால் அவசியம் என்றே கூறுகின்றன
உலமா சபை ஹலால் பிரிவு அதிகாரி மௌலவி முழப்பர்

ஹலால் சான்­றிதழ் வழங்கும் அதி­காரம் ஜம்­இய்­யதுல் உலமா சபையின் கீழ் இயங்கும் ஹலால் பிரி­விடம் இருக்க வேண்­டுமா? அல்­லது அர­சாங்­கத்தின் கீழ் இது கொண்டு வரப்­பட வேண்­டுமா? என்­ப­தல்ல இன்று நிலவும் பிரச்­சினை.

பொது பல­சேனா அமைப்பு ஹலால் தேவை­யில்லை என்ற நிலைப்­பாட்­டிலே இருக்­கி­றது. உலமா சபை ஹலால் சான்­றிதழ் வழங்­கு­வதன் மூலம் பெரும் இலா­ப­மீட்­டு­கி­றது என்று பொது பல சேனா குற்றம் சுமத்­து­கி­றது. அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யின்றி பணம் திரட்­டு­வ­தா­கவும் கூறு­கி­றது.

ஹலால் சான்­றி­தழை நாங்கள் இல­வச சேவை­யாக நடத்­தினால் ஏற்றுக் கொள்­வீர்­களா? என்று உலமா சபை வின­விய போது அதனை பொது பல சேனா மறுத்­து­விட்­டது. அர­சாங்கம் ஹலால் சான்­றிதழ் வழங்கும் அதி­கா­ரத்தை ஏற்று உலமா சபையின் மேற்­பார்­வையில் ஹலால் நடை­மு­றைப்­ப­டுத்த இணங்­கு­வீர்­களா என்று ஆலோ­சனை முன்­வைத்­த­தையும் பொது பல சேனா ஏற்றுக் கொள்­ள­வில்லை. எனவே அவர்­க­ளுக்கு ஹலால் சான்­றிதழ் வழங்கும் அதி­காரம் உலமா சபை­யிடம் இருக்க வேண்­டுமா? இல்லை அர­சாங்­கத்தின் கீழ் இருக்க வேண்­டுமா என்­பது பிரச்­சி­னை­யில்லை.மொத்­தத்தில் ஹலால் தேவை­யில்லை என்­பதே அவர்­க­ளது நிலைப்­பா­டாகும்.

எதிர்­வரும் மார்ச் மாதம் 31 ஆம் திக­திக்கு முன்பு நாட்டில் ஹலாலை ஒழிக்க வேண்­டு­மென பொது பல சேனா காலக்­கெடு விதித்­துள்­ளது. நாம் தொடர்ந்தும் அரச மட்ட உய­ர­தி­கா­ரி­க­ளி­டமும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கிறோம்.

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பசில் ராஜ­பக்ஷ நாட்டின் 35 முன்­னணி கம்­ப­னி­களை அழைத்து ஹலால் சான்­றிதழ் தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் நடத்தி இருக்­கிறார். அந்தக் கம்­ப­னிகள் ஹலால் சேவை அவ­சியம் தேவை­யென்று தெரி­வித்­தி­ருக்­கின்­றன. ஹலால் சான்­றிதழ் பெற்றுக் கொள்­வதன் மூலம் விலை நிர்­ண­யிப்பில் பாதிப்­புகள் இல்லை எனவும் தெரி­வித்­தி­ருக்­கின்­றன.

நாட்டின் அர­சியல் உயர் மட்டம் ஹலால் பிரச்சினையொன்று இருக்கிறது என்பதை உணர்ந்துள்ளது. பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமான தீர்வினை எட்டலாம் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.



vv_mujibrஹலால் பற்றிய தெளிவான விளக்கம் பெரும்பான்மையினருக்கு தேவை

மேல் மாகாண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் (ஐ.தே.க.)

‘முஸ்­லிம்­க­ளுக்கு ஹலால் தேவை. ஹலாலை முஸ்­லிம்­க­ளினால் விட்டுக் கொடுக்க முடி­யாது. பொது­ப­ல­சேனா அமைப்பு ஹலால் தொடர்­பாக குற்றம் சுமத்தும் போது உலமா சபைக்கு இதன் மூலம் பெரு­ம­ளவு நிதி கிடைக்­கி­றது. இந் நிதி நாட்டில் இஸ்­லாத்தைப் பரப்­பு­வ­தற்கும் தீவி­ர­வா­தத்­துக்கும் பயன்­பத்­தப்­ப­டு­கி­றது என்­கி­றது.

இந்­நி­லையில் முஸ்­லிம்­க­ளுக்கு ஹலால் தேவை என்­பதால் யார் ஹலால் சான்­றிதழ் வழங்கும் பணி­யினைச் செய்­வது என்­பதைத் தீர்­மா­னிக்க வேண்டும். முஸ்லிம் சமூ­கத்தின் தலைமை, முஸ்லிம் இயக்­கங்கள், உலமா சபைத் தலை­வர்கள் கலந்­து­ரை­யாடி இத்­தீர்­மா­னத்­தினை மேற்­கொள்ள வேண்டும்.

பல நாடு­களில் ஹலால் நடை­மு­றையில் உள்­ளது. ஆனால் எல்லா நாடு­க­ளிலும் நடை­மு­றைகள் ஒரே மாதி­ரி­யாக இல்லை. சில நாடு­களில் இந்­ந­டை­முறை அர­சாங்­கத்தின் கண்­கா­ணிப்­பிலும் சில நாடு­களில் தனி­யாக உலமா சபையின் கீழும் உள்­ளன.

இலங்­கையில் ஹலால் சான்­றிதழ் வழங்கும் செயற்­பா­டு­களை முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்தின் கீழ் அல்­லது ஒரு அதி­கார சபை­யாக உரு­வாக்க முடியும்.வர்த்­தக அமைச்சின் கீழ் ஹலால் பிரிவை கொண்டு வரலாம். இவற்றில் எந்த நடை­முறை சிறந்­தது என்­பதை முஸ்லிம் தலை­மை­களும் உலமா சபையும் புத்­தி­ஜீவி­களும் கலந்து ஆலோ­சித்து தீர்க்­க­மான முடி­வுக்கு வர வேண்டும்.

முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யாக அமுலில் உள்ள முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு நீதி­ய­மைச்சின் கீழ் காதிக்­கோ­டுகள் இயங்கி வரு­கின்­றன. ஷரீஆ சட்­டமும் அங்கு அமுல் நடத்­தப்­ப­டு­கி­றது. இதில் எந்த பிரச்­சி­னையும் உரு­வா­க­வில்லை. இதே­போன்ற அமைப்­பொன்று உரு­வாக்­கப்­பட்டால் பொது­ப­ல­சேனா முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பதில் கொடுப்­ப­தாக இருக்கும். குற்­றச்­சாட்­டு­களும் இல்­லாமற் போகும்.

பெரும்­பான்மை மக்­க­ளுக்கு ஹலால் பற்றி சரி­யான விளக்­கத்­தினை சிங்­கள ஊட­கங்கள் வழங்கத் தவறிவிட்டன. இதுவே பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. சிங்கள ஊடகங்கள் ஹலால் பற்றிய தெளிவான விளக்கங்களை பெரும்பான்மை சமூகத்திடம் முன்வைக்கவேண்டும் என்றார்.



rahman sir 555ஹலால் அரச கட்டமைப்பின் கீழ் உலமாக்களால் நிர்வகிக்கப்பட வேண்டும்

பொறி­யி­ய­லாளர் எம்.எம். அப்துல் ரஹ்மான்

நாட்டில் இன்று ஹலால் பெரும் சர்ச்­சையைக் கிளப்­பி­யி­ருக்­கி­றது. தற்போது நடைமுறையிலுள்ள ஹலால் நிர்ணயத்திற்கு எதிராக மூன்று குற்ற ச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

முதலாவது ஹலா­லுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு பிர­சாரம் செய்யும் பெரும்­பான்மை இன பெளத்த குரு­மாரும் ஒரு சில அர­சி­யல்­வா­தி­களும் உலமா சபை, முஸ்­லிம்­க­ளல்­லாத பெரும்­பான்­மை­யி­ன­ருக்கும் ஏனைய மதத்­த­வர்­க­ளுக்கும் ஹலாலை பலாத்­கா­ர­மாக திணிக்­கி­றது என்று குற்றம் சுமத்­து­கி­றார்கள்.
அத்­தோடு உலமா சபை ஹலாலைப் பயன்­ப­டுத்தி பெரும் இலாபம் ஈட்­டு­கி­றது. ஹலால் சான்­றி­த­ழுக்கு கட்­டணம் அற­வி­டப்­ப­டு­வதால் அக்­கட்­டணம் பொருட்­களின் விலை உயர்­கி­றது. எனவே ஹலால் என்கின்ற நடைமுறை அதிகம் இலாபமீட்டுகின்ற அல்லது பொருளாதார சுரண்டல் முறையாக அமைகிறது எனக் குற்றம்சாட்டுகிறார்கள். அடுத்தது ஹலால் மூலம் பெறப்­படும் பெரு­ம­ளவு நிதியை உலமா சபை முஸ்லிம் தீவி­ர­வா­தத்­துக்கும் இஸ்­லாத்தைப் பரப்­பு­வ­தற்கும் பயன்­ப­டுத்­து­கி­றது எனவும் பிர­சாரம் செய்­கிறார்கள்.

இந்தக் குற்­றச்­சாட்­டு­க­ள் ஆதாரமற்றவை என்று நிரூபிக்கும் சகல விளக்கங்களையும் உலமா சபை முறை­யாக தெரிவித்­தி­ருந்­தாலும் எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்­கின்­றன.

ஹலால் கண்­டிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு அவசியமானதாகும். ஆனால் ஹலால் நிர்ணய நடைமுறை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அரச கட்­ட­மைப்­புக்குள் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். நம் நாட்டில் பல வருடங்களுக்கு முன்னர் பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட ஹலால் வங்கி முறை அதா­வது இஸ்­லா­மிய வங்கி முறை தற்போது அரசாங்க அனுமதியுடன் அரச கட்­ட­மைப்­புக்குள் இயங்­கு­கி­றது. அவற்றைக் கண்காணிப்பவர்களாக உலமாக்கள் இருக்கிறார்கள்.

நீதித்­து­றையில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று ஒரு கட்­ட­மைப்பு இயங்கி வரு­கின்­றது. காதிக்­கோ­டுகள் இஸ்­லா­மிய சட்­டத்தின் கீழ் அதா­வது முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தின் கீழ் இயங்கி வரு­கின்­றன. அவையும் உலமாக்களாலும் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் தெரிந்தோராலும் நிர்வகிக்கப்படுகின்றன.

அதுபோலவே ஹலால் நிர்ணய நடைமுறையும் அரச கட்­ட­மைப்­புக்­குள் ­வ­ரு­வ­துடன் இதில் இஸ்லாமிய சட்டதிட்டங்களை கவ­னிப்­ப­தற்கும் ஹலால் தொடர்­பான பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வ­தற்கும் உல­மாக்கள் இணைத்துக் கொள்­ளப்­பட வேண்டும். உல­மாக்­களின் மேற்­பார்வை இதில் அவசியம் இருக்க வேண்டும்.

உலகின் ஏனைய நாடுகளில் நடைமுறையிலுள்ள ஹலால் நிர்ணயம் அரசாங்க கட்டமைப்பின் கீழோ அல்லது தனியார் நிர்ணய நிறுவனங்களின் கீழோதான் இயங்குகின்றன. எனவே தற்போது நம்நாட்டில் எழுந்துள்ள சர்ச்சைக்கு உரிய தீர்வாக ஹலால் நிர்ணய நடைமுறையானது அரசாங்க கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு  உலமாக்களால் நிர்வகிக்கப்படுவதே சிறந்ததாகும்.



ameen nana 1ஹலால் சான்றிதழ் ஏற்றுமதியில் பாரிய அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன்

‘அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் ஹலால் பிரிவு ஹலால் சான்­றிதழ் வழங்கும் பணி­யினை திறம்­பட சிறப்­பாகச் செய்து வரு­கி­றது என்­றாலும் இன்று நாட்டு மக்­க­ளி­டையே ஹலால் பற்றி தவ­றான கருத்து பரப்­பப்­பட்­டுள்­ளது. ஹலால் மூலம் திரட்­டப்­படும் நிதி சட்ட விரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. ஹலா­லுக்கு எதி­ராக பரப்­பப்­பட்­டுள்ள கருத்­துக்­களை நீக்க சிறு­பான்­மை­யி­ன­ரான முஸ்­லிம்­களால் முடி­யாது. அர­சாங்­கமும் முஸ்­லிம்­க­ளுக்கு உத­வு­வ­தாக இல்லை.

சமூ­கத்தின் இருப்­புக்கு ஹலால் அச்­சு­றுத்­த­லாக இருக்கக் கூடாது. எதிர்ப்­பு­களை தாங்கிக் கொள்ள முடி­யாத அள­வுக்கு சமூகம் தள்­ளப்­பட்­டுள்­ளது. எதிர்ப்­புகள் வலு­வ­டைந்­துள்ள இச்­சந்­தர்ப்­பத்தில் ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கண்­கா­ணிப்பின் கீழ் ஹலால் அரச கட்­ட­மைப்­புக்கு கொண்டு வரு­வது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக அமையும்.

இந்த கட்­ட­மைப்பு ஜம்­இய்­யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய கலா­சார திணைக்­களம், கட்­டளைப் பணி­யகம் என்­பன ஒன்­றி­ணைந்­த­தாக அமைக்­கப்­பட வேண்டும்.

ஹலால் சான்­றிதழ் வழங்கும் பிரிவில் 40 அனு­ப­வ­மிக்க ஊழி­யர்­களும் இருக்­கி­றார்கள். இவர்கள் கட்­ட­மைப்­புக்குள் சேர்த்துக் கொள்­ளப்­பட வேண்டும்.

ஹலால் சான்­றிதழ் எமக்கு ஏற்­று­ம­தியில் அதி­க­ரிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஹலால் பொருட்கள் ஏற்­று­ம­தியில் பெரும் கேள்­வி­களை (Demand) உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. அத்­தோடு ஹலால் இலங்­கைக்கு வருகை தரும் அரபு உல்­லாசப் பிர­யா­ணி­களின் அதி­க­ரிப்­புக்கும் உறு­து­ணை­யாக இருந்து வரு­கி­றது. இவற்றை அர­சாங்கம் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும்.

நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யான சட்­ட­மி­ருக்­கி­றது. முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் காதிக்­கோடு முறை மூலம் அமுல் நடத்­தப்­ப­டு­கி­றது. இந் நீதி­மன்­றங்கள் நீதியமைச்சின் கீழ் இயங்கி வருகின்றன. எனவே இது போன்ற கட்டமைப்பின் கீழ் ஹலால் கொண்டுவரப்பட்டால் பெரும்பான்மையினர் கொண்டுள்ள சந்தேகங்கள் களையப்பட்டு சுமுக நிலை உருவாக வாய்ப்பாக அமையும்.


ZAMEEL NALEMIஅரசாங்கத்தின் பணிப்புரையை செயற்படுத்துவோம்

முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம். ஸமீல் (நளீமி)

‘ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமா அல்லது ஜம்இய்யத்துல் உலமா சபையிடமே இந்தப் பொறுப்பு இருக்க வேண்டுமா? என்பது பற்றி ஒரு அரசாங்க அதிகாரி என்ற வகையில் என்னால் கருத்துத் தெரிவிக்க இயலாது.

அரசாங்கத்தின் திட்டங்களை செயற்படுத்துவதே அரசாங்க அதிகாரிகளின் பணியாகும். எனவே முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அரசாங்கத்தின் பணிப்புரையின் படியே செயற்படும். ஹலால் அதிகாரம் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடம் வழங்கப்பட வேண்டுமா என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்.


vv_kdhsdjமுஸ்­லிம்கள் தமது அனைத்து விட­யங்­க­ளிலும் ஹலாலைப் பேணு­கி­றார்­களா?
பாத்­த­தும்­பறை பிர­தேச சபையின் எதிர்க்­கட்சி தலைவர் மலிக்
‘ஹலா­லுக்கு எதி­ரான விமர்­ச­னங்­களும் குற்­றச்­சாட்­டு­களும் ஒரு குறு­கிய கால கட்­டத்­துக்குள் வெகு­வாக அதி­க­ரித்து விட்­டன. நாட்டின் தலை­வரும் இப்­பி­ரச்­சி­னையில் தலை­யி­டு­ம­ள­வுக்கு பூதா­க­ர­மா­கி­விட்­டன.

ஜம்­இய்­யத்துல் உலமா சபை மீது பெளத்த பேரி­ன­வா­தி­களும் ஒரு சில பெரும்­பான்மை அர­சி­யல்­வா­தி­களும் அதி­ருப்தி கொண்­டுள்­ளனர். உலமா சபை ஹலால் மூலம் பெரு­ம­ளவு நிதி திரட்டி வரு­கி­றது என்­கி­றார்கள். இந்­நிதி ஹலால் மூலம் பெரும்­பான்­மை­யி­ன­ரி­ட­மி­ருந்து திரட்­டப்­டு­வ­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது.

ஹலால் பிரச்­சி­னை­க­ளுக்கு சுமு­க­மான தீர்வு காணப்­பட வேண்டும். இல்­லையேல் முஸ்­லிம்­க­ளுக்கும் சிங்­க­ள­வர்­க­ளுக்­கு­மி­டையில் கல­வ­ரங்கள் ஏற்­பட இதுவே கார­ண­மாக அமைந்து விடும்.

ஹலால் சான்­றிதழ் வழங்கும் உரி­மையை அர­சாங்கம் கையேற்­பதே சிறந்­தது. இதே­வேளை, ஹலால் சான்­றிதழ் வழங்கும் நடை­மு­றை­களை மேற்­பார்வை செய்யும் உரிமை மற்றும் பரி­சோ­த­னை­களை நடாத்­துதல் என்­பன உலமா சபை­யி­டமே வழங்­கப்­பட வேண்டும்.

முஸ்­லிம்­க­ளுக்கு ஹலா­லான உணவு தேவை. ஆனால் முஸ்­லிம்கள் தமது அனைத்து விட­யங்­க­ளிலும் ஹலாலைப் பேணு­கி­றார்­களா? என்­ப­த­னையும் நாம் சிந்­திக்க வேண்டும். இன்று எத்­தனை முஸ்லிம் வர்த்­த­கர்கள் தமது வியா­பா­ரத்தில் ஹலாலைப் பேணு­கி­றார்கள்.

தமது சொந்த வாழ்க்கையில் ஹலாலைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். ஹலால் உணவு மாத்திரம் ஹலால் வாழ்க்கையாக அமைந்துவிடாது.

நன்றி : விடிவெள்ளி

No comments